Monday, November 20, 2017

சிற்பக்கூடம் - தன்னை தான் உருவாக்கிக் கொள்வது சிற்பங்கள் மட்டுமல்ல - பகுதி 3 - நிறைவு

பார்த்துப் பார்த்து வெகு நாட்களாக பதியமிட்டதைப் போன்று பேணிய கூடு விலகும் நாள் வந்துவிட்டது. உருக்கி விட்ட உலோகம் படிந்ததும் கூட்டை அகற்றி விட்டு முழு உருவச்சிலையாக உருவாகி வெளிவருகிறார்கள் தெய்வங்கள்.
பின் அரம், உளி போன்ற சிறு சிறு கருவிகள் கொண்டு தேய்த்து, செதுக்கி, தங்களை முழுமையை நோக்கி சிற்பிகளின் கைகளின் மூலம் நகர்த்திக்கொள்கிறார்கள் கடவுளர்கள்.
நுணுக்கமான வேலைப்பாடுகள் முழுமை பெற்றதும் மெருகேற்றி உள்ளும் புறமும் பள பளக்க தயாராகிவிடுகிறார்கள் உற்சவ மூர்த்திகள்.
தன்னைத் தானே சமைத்துக் கொள்ளும் சிலைகளின் முன்னிலையில் அத்தனை கைகளும் கருவிகள் மட்டுமே.
இந்தப் பிறவியின் கூட்டிற்குள் ஒளிர்ந்து கொண்டிருக்கும் சக்திக்கு நம்மை ஒப்புக்கொடுப்பதைப் போல ஆயிரம் கஷ்ட நஷ்டங்களோடு பரம்பரையாக இந்த கலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் எத்தனையோ குடும்பங்களில் பிரபுவின் குடும்பமும் ஒன்று.
கும்பகோணத்துக்கு அருகிலிருக்கும் சுவாமிமலைக்கு பயணம் செய்பவர்கள் அங்கிருக்கும் ஏதாவது ஒரு சிற்பக்கூடத்துக்கு சென்று வாருங்கள் உள்ளும் புறமும் வெம்மை ஏறட்டும் பின்பொருநாள் குளிர்ந்து உறையலாம்.

Image may contain: 1 personNo automatic alt text available.No automatic alt text available.No automatic alt text available.Image may contain: 1 personImage may contain: 1 personNo automatic alt text available.Image may contain: one or more peopleNo automatic alt text available.No automatic alt text available.No automatic alt text available.No automatic alt text available.No automatic alt text available.Image may contain: 1 person, indoorImage may contain: 1 person

சிற்பக்கூடம் - தன்னை தான் உருவாக்கிக் கொள்வது சிற்பங்கள் மட்டுமல்ல - பகுதி 2

தொடர்ச்சி..
இத்தனை அழகான மெழுகு சிலை ஒரு கட்டத்தில் உருகி ஒழுகி மண்ணோடும் கலந்து மீண்டும் இறுகி களிமண்ணைப் போலாகும் என்று சொன்னதும் வாழ்க்கையெனும் வட்டம் கொஞ்சம் புரிந்தது.
இந்த மெழுகு சிலைகளின் மேல் வண்டல் மண் கலவையை முதலில் அதே கலைநயத்தோடு பூசுகிறார்கள், பின் அது காய்ந்தபின் அதன் மேலும் நல்ல அடர்வான சுடுமண் பூசி காயவைக்கிறார்கள். இப்பொழுது முழுவதும் மெழுகுசிலையோ அதன் உருவங்களோ அற்று அது ஒரு மண் பொதி போல் ஆகிறது. காய்ந்து இறுகி இருக்கும் அந்தப் போதிகளின் அடிப்பாகத்திலோ, மேல் பாகத்திலோ உருவங்களுக்குத் தக்கவாறு நேர்த்தியாக துளையிடுகிறார்கள்.
பின் இந்த மண் பொதிகளை நல்ல சூளை போன்ற அடுப்புகளில் வைத்து சூடு செய்ய ஒரு பதத்தில் உள்ளே இருந்த மெழுகுச் சிலைகள் அந்த வண்டல் மண்ணில் தன் அடையாளங்களை விட்டு விட்டு போட்டிருக்கும் ஓட்டைகள் வழியே வெளியே உருகி வழிகிறது.
நிலையென நாம் நினைத்திருக்கும் அத்தனையும் ஒரு நாள் கலைவது போல......
அடுத்தபடிக்கு தயாராகிறது அந்தக்கூடுகள்.
Image may contain: foodImage may contain: foodImage may contain: plant and outdoorNo automatic alt text available.No automatic alt text available.

மேலும் மேலுமென அக்னியின் வெம்மையை சரியாகத் தன்னுள் உள்வாங்குமளவுக்கு அந்தக்கூடுகள் ஒரு புறம் சூட்டில் கனன்று கொண்டிருக்க..
மறுபுறம் பித்தளையும், செம்பும், இன்னம் சில உலோகங்களையும் குவை/குகை யெனும் குடுவையில் இட்டு அது கிட்டத்தட்ட நீர்மையின் நிலையை எட்டும் வரை அனல் குழம்பாகக் கொதிக்க கொதிக்க மிகப் பெரும் இடுக்கிகளின் துணைகொண்டு அந்த வெம்மையில் கனிந்திருக்கும் அந்தக்கூடுகளுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்ற வெம்மையோடு வெம்மை சேற கடவுளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தன் உருவங்களுக்குள் ஒருங்கிக்கொள்கிறார்கள்.
நம்முள் தன்னை நிரப்பியிருக்கும் கடவுளர்கள், உருகி ஒழுகி அந்தக் கூடுகளுக்குள் தன்னை நிரப்பிக் கொள்கிறார்கள்.
கூடுகள் பாதுகாப்பானது தான் அருமையானதுதான், நமக்கென அனலும் வெப்பமும் தாங்கி நம்மோடு ஒட்டி உறவாடியவைதான் ஆனாலும் ஒரு நாள் விட்டு, வெட்டி விலகுவதே நியதி லௌகீக வாழ்விற்கு மட்டுமல்ல ஞான வாழ்விற்கும் அதுவே அடிப்படை.
ஏன் இப்போது இந்தக்கூட்டைப் பற்றிய விசாரம்...சொல்கிறேன் அடுத்த பதிவில்
Image may contain: one or more people and people standingImage may contain: outdoorImage may contain: one or more peopleNo automatic alt text available.

சிற்பக்கூடம் - தன்னை தான் உருவாக்கிக் கொள்வது சிற்பங்கள் மட்டுமல்ல - பகுதி 1

இது என்ன மெட்டீரியல்?? என்று பரவசமும் ஆர்வமுமாக அந்த காமாட்சி விக்கிரகத்தை நோக்கியபடி கேட்டேன் ஏனெனில் அது மரம் போலுமிருந்தது, உலோகம் போலவும் இருந்தது. "அது மெழுகு மாடல்ங்க" என்று சொன்ன நேரம் அவர் கையில் ஆஞ்சநேயர் தன்னை அழகுபடுத்திக் கொண்டிருந்தார். என்னால் கண்களை அந்த சிலையை விட்டு நகர்த்தவே முடியவில்லை. மீண்டும் கண் அகட்டாமல் பார்த்தபடி "ஓ இது மோல்டா இதுக்குள்ள தான் உலோகத்தை உருக்கி விடுவீங்களா?? என்ற என் அபத்தமான கேள்வியை கேட்டு பிரபு, அந்த சிற்பக்கூடத்தின் சிற்பி ஒரு நிமிடம் கையில் இருந்த ஆஞ்சநேயரை வைத்து விட்டு ஒரு சிலை எப்படி உருவாகிறது என்று விளக்கமாகச் சொல்லலானார்.
அது ஒரு சிலை உருவாகும் செயல்முறை மட்டுமல்ல என்று தோன்றியது.
It is a process/travel every soul goes thru in their given birth... Let me share the process with you.
கோவில்களிலோ, பூம்புகார் போன்ற பெரும் வர்த்தக நிலையங்களிலோ பெரிதும் சிறிதுமான உலோகச் சிலைகளைக் காணும் போது நம்முள் எழும் மிகுந்த குளிர்ச்சியான உணர்விற்கு நேர் எதிர்மறையான தட்ப வெப்பத்தில் இருந்தது உலோகங்களில் கடவுளர் மூர்த்தங்களைச் சிலை வடிக்கும் அந்தச் சிற்பக்கூடம்.
சுமார் ஆயிரம் சதுரடி ஆஸ்பெஸ்டாஸ் கூரையின் கீழ் நடராஜர், பிள்ளையார், பெருமாள், விதம்விதமான அம்மன், வீரசிவாஜி, அப்பர் பெருமான், என அத்தனை பேரும் ஒப்பனைகளேதுமற்று முழுமையாகவோ முழுமைக்கு முந்திய சில படி நிலைகளிலோ அங்காங்கு ஆசுவாசப்பட்டுக்கொண்டிருந்தார்கள். நம்முள் பலரும் கடந்துக்கொண்டிருக்கும் வாழ்வே என்னுள் ஒப்புமையாகத் தோன்றியது.
தேன்மெழுகும், குங்கிலியமும், ஒரு எண்ணையும் சில விகிதங்களில் ஒன்றாகக் கலந்து சூடு செய்ய ஒரே குழம்பாகி பின் குளிர்ந்து கெட்டியான களிமண் போன்ற பதத்தில் கிடைப்பது தான் அந்த மெழுகு.
நல்ல கெட்டியான பதத்தில் சிலைகளின் உருவங்களைச் செய்வதற்கும், கொஞ்சம் இளகிய பதத்தில் அந்த உருவங்களின் மேல் இருக்கும் அணிகலன்கள், ஆடை அலங்காரங்கள் செய்வதற்குமாக இரண்டு விதமான தரங்களில் இந்த மெழுகை உற்பத்தி செய்துகொள்ளுகிறார்கள்.
மிகவும் பொதுவான அளவு, மீண்டும் மீண்டும் செய்யும் சிலைகள் என்றால் அதற்கென சில மோல்டுகள் வைத்துள்ளார்கள் அதில் சூடாக ஊற்றி கட்டி வைத்து பின் பிரிக்க மெழுகு மாதிரிகள் கிடைத்து விடுகிறது.
ஆனால் நான் கண்டது போல் காமாட்சியோ, அப்பர் பெருமானோ அத்தனை வழமையான தேவை இல்லை என்பதால் அதன் மாதிரி உருவப் படத்தை வைத்துக் கொண்டு கை, கால், முகம், கழுத்து அணிகலன்கள், திருவாச்சி, பீடம் என்று ஒவ்வொன்றாகச் செய்து ஒன்றிணைத்து தெய்வத்தை கண்முன் ஒருக்குகிறார்கள்.
இளகவும், உருகவும், கலக்கவும் தயாராய் இருக்கும் மனதுதானே தன் அடுத்த படிகளுக்கு நகர முடிகிறது.
இன்னும் வரும்.......
Image may contain: 1 person, shoesImage may contain: one or more peopleImage may contain: shoesImage may contain: one or more peopleImage may contain: one or more people and indoorImage may contain: one or more peopleNo automatic alt text available.

Saturday, November 11, 2017

பிறந்த இடம் நோக்குதே - வீடு திரும்புதல்



ஒருவர் பிறந்தவீட்டில் இருந்து வெகு....தொலைவுக்கு சென்று வீடு திரும்பும் ஒரு காட்சியை இங்கு எண்ணிக் கொள்ளலாம்.
ஆஹா.. இந்தியாவின் தலை நகருக்கு வந்தாச்சு
ஆ..இந்த ட்ரெயினில்தான் தான் நாம் இன்னமும் இரண்டு நாட்களில் இந்தியாவின் தென்கோடியில் உள்ள என் கிராமத்துக்குச் செல்லப் போகிறேன்.
ஆஹா...மத்தியப்பிரதேசம் தாண்டியாச்சு, தெலுங்கானாவும் போயாச்சு, சென்னையும் தாண்டியாச்சு, திருச்சி போய், தூத்துக்குடி வந்தாச்சு. ஆத்தூர் பஸ்ஸில் ஏறியும் ஆச்சு. பஸ் ஸ்டாண்டில் இறங்கி வீட்டை அடைந்ததும் கிடைக்கும் நிம்மதிக்கும் மகிழ்வுக்கும் அளவுகோல் ஏது. ஆனாலும் இனியும் தொடரும்.
நாம் எப்பொழுதும் அமரும் இடத்தில் அமர்ந்த படி அந்திச் சூரியனை ரசித்து அம்மா கையால் சாப்பிட்டு நமது படுக்கையில் கண் மூடி சாயும் நொடியில் அடுத்த வேளை செய்யவேண்டிய வேலை நியாபகம் வரும் பாருங்கள். அதுதான் வீடு திரும்புதலின் புனிதக் கட்டம்.
வீடுதிரும்பியோருக்கும் செய்வதற்கு சில உளது. இதுவே வாழ்க்கை.
இதையே மெய்மை தேடலிலும் பொருத்திப் பாருங்கள். வீடு திரும்புதலின் படிகளும், வீடடைந்தபின் செய்வதற்கென உள்ள கர்மாக்களையும் எதிர்கொள்ளும் நிலையிதுவே. என்ன, எப்படி, எவ்வாறு அதுவும் அந்தந்த நொடியில் தோன்றும்.
#மையம்

Tuesday, November 7, 2017

குறியெதிர்ப்பை நீர துடைத்து - குறளின் மாற்று முகம்

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் 
குறியெதிர்ப்பை நீர துடைத்து.

இணையத்தில் கண்ட உரை. கிட்டத்தட்ட எல்ல உரைகளும் இதையொட்டியே அமைகிறது.

இல்லாதவர்க்கு வழங்குவதே ஈகைப் பண்பாகும். மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும்.

இந்தக் குறளை ஜெமோவின் குறளினிது உரையின் படி பார்க்கவேண்டும் என்று தோன்றியது.

அதன் படி நேற்றிலிருந்து இந்த ஒரு குறள் மட்டுமே உள்ளே ஓடிக்கொண்டிருந்தது.

இக்குறள் அறத்துப்பாலில், இல்லறவியலில், ஈகை எனும் அதிகாரத்தில் தொகுக்கப் பட்டுள்ளது. ஜெமோவின் ஆய்வின் கருத்துப் படி இந்த தொகுத்தல்கள் பிற்காலத்தில் நிகழ்ந்தவை. எனவே இதை அறத்துப் பாலில் மட்டும் வைத்துப் பார்க்கலாம்.

வறியார்க்கொன்றை ஈவதே ஈகை - தேவையான ஒருவர்க்கு கொடுப்பது அறம், இதை தேவையுள்ள இடத்தில் ஆற்றும் செயலாகக் கொண்டால் அதுவும் அறம்.

மற்றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து -

மற்றெல்லாம் - மற்ற எல்லா வினைகளும், அதாவது தேவையற்ற அனைத்து செயல்களும்(கர்மங்களும்) , இங்கே ஈகையை மட்டும் எனக் கொள்ளாதிருத்தல் வேண்டும்

குறியெதிர்ப்பை - எனும் சொல்லுக்கு கொடுத்த அளவே மீண்டும் வாங்கும் முறைமை என்ற பொருள் உள்ளது. எனவே நம்முடையை தத்துவப் பார்வையின் படி நாம் செய்யும் எல்லா வினைகளுக்கும் அதே விதமான எதிர்வினை உண்டு. எனவே இதை கர்மாவோடு தொடர்பு படுத்திக் கொள்ளலாம்.

நீரது உடைத்து - உன்னுடைய உடமையாகும்.

இப்பொழுது மொத்தமாக பொருள் கொண்டால்.

தேவை இருக்கும் இடத்தில் மட்டும் செயலாற்றுவதே அறம், மற்றெல்லா கர்மங்களும் எதிர்வினையையே தோற்றுவிக்கும்.

இதுக்கு பழந்தமிழ் ஆசான்களெல்லாம் வந்து அடிச்சா தாங்கிக்க வேண்டியதுதான் வேற வழி இல்ல.

ஆனால் அந்த உறையின் தாக்கம் மிக அதிகம் அதைப் பற்றி ஒரு தனித்த பதிவே எழுத வேண்டும்.

குறளின் மாற்று முகம்

கல்யாண வீடுகளில், அல்லது மிகப் பெரும் சமையல் கூடங்களில் இனிப்புக்கு என்று தனித்த மாஸ்டர் உண்டு. பெரும்பாலும் சமையல் செய்பவர்கள் அதைச் செய்வதில்லை. ஸ்வீட் மாஸ்டர், இது போலவே சில தனித்த பதார்த்தங்களுக்கான ஸ்பெஷாலிட்டி கலைஞர்கள் உண்டு. 

மேலும் ஒரு இலக்கிய வாதியைக் கொண்டு விளையாட்டையோ சமையலையோ அதன் நுணுக்கங்களை மைய்யப்படுத்தி எழுத வைத்தால் அவரால் முழுமையாக எழுத முடியாது. விளையாட்டு வல்லுனாரால் இலக்கியமும்.
இப்படி வரிசையாக சொல்லிக் கொண்டே போகலாம்.....

அதைப் போலத்தான் பழந்தமிழ் சித்தர் பாடல்களையும் அதற்கான பொழிப்புரைகளையும் வாசிக்கும் பொழுது இவைகள் பெரும்பாலும் தமிழுக்கு தமிழ் மொழி பெயர்ப்புக்களாகவே அணுகப் பட்டுள்ளது என்று தோன்றுகிறது. மிக மிக உண்மையான ஆன்மீக தளத்தில் அணுகி பொழிப்புரை செய்திருப்பது ஒரு சிலரே.

அதிலும் இணையத்தமிழின் உபயத்தில் பெரும்பாலான பாடல்கள் மிகவும் தவறாகவே பதம் பிரித்து எழுதப் படுகிறது. வாசிப்பதற்கு எளிமையாக இருக்க வேண்டும் என்ற காரணத்தால் பதம் பிரிக்கும் அனைவரும் அந்த பாடல்களின் உள்ளார்ந்த அனுபவம் அதனால் முற்றிலும் சிதைந்து போவதை அறிந்து கொள்வதில்லை.

திருக்குறளும் அது போன்றதொரு பெரும் பொக்கிஷம். முழுமையாக அந்த தளத்தில் நின்று பொருள் கண்ட பொழிப்புரையை நான் இன்னமும் காணவில்லை. அது ஒரு சமய நூலல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லப்பட்ட காரணத்தினாலேயே ஆன்மீகமாக குறள் அணுகப் படவில்லையோ என்று தோன்றுகிறது. சமணம் பேசும் ஆன்மீகம் மிகவும் ஆழமானது அதை அணுகி அறிவதென்பது பேரின்பம்


No automatic alt text available.

இல்வாழ்வான் யார் - குறளின் மறுபக்கம்

துறந்தார்க்குத் துவ்வா தவர்க்கு மிறந்தார்க்கு
மில்வாழ்வா னென்பான் றுணை.
துறந்தார் – 
1. இல் வாழ்க்கையை துறந்தார், பிரம்மசர்யத்தை மேற்கொண்டார், 2. சாதிவருண சமய குறிகளை, நெறிகளை துறந்தார்

துவ்வா தவர் – அனுபவிக்காதவர், துய்க்காதார் - 
1. இல்வாழ்க்கையில் இருந்தாலும் சிற்றின்பமாக அனுபவிக்காது இல்லற தர்மத்தில் வாழ்பவர்கள். 2. சாதி சமய நெறிகளை மிக முக்கியமாக கருதாதவர், கடை பிடிக்காதவர்

இறந்தார் - 
1. இந்த உடலின் இறப்பை எய்தியவர்,  2. சாதி சமய நெறிகளுக்கு முக்கியத்துவம் அளித்து இறந்தாரைப் போல் வாழ்பவர்

இல்வாழ்வான் என்பான் துணை – இந்த இடத்தில் என்பான் எனும் சொல்லே நமக்கு இக்குறளின் நுணுக்கங்களை ஆராய வழி வகுக்கிறது. இல்வாழ்வான் துணை என்று இருந்திருக்கலாம். அனால் இல்வாழ்வான் என்பான் துணை என்று சொல்வது இல்வாழ்கிறான் என்று சொல்பவனே துணை என்று பொருள் கொள்ள வேண்டும்.
இல்வாழ்வான் என்று சொல்லப்படுபவன் யார் – உள்ளே வாழ்பவன் எல்லோருள்ளும் வாழ்பவன் யார் அந்தப் பரம்பொருள் அவனே துணை.
இதை மற்றொரு கோணத்திலும் பொருள் கொள்ளலாம்.
ஒருவர் இந்த மூன்று நிலைகளில் எந்த நிலையில் வாழ்ந்தாலும் அவனுள் இருக்கும் பரம்பொருளின் நிலை மாறுவதில்லை எனவே எந்த நிலையிலும் முயன்றால் அவனைச் சென்றடைய தடை இல்லை.

Monday, November 6, 2017

பெண்ணின் பெருந்தக்க யாவுள - குறளின் மறுபக்கம்


பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும் 
திண்மையுண் டாகப் பெறின். - திருக்குறள் 

இவ்வுலகின் அனைத்து உயிர்களும் இப்பிரபஞ்ச முலத்தின் சிறு துளியே. கடலைச் சென்று சேரவேண்டிய மழைத்துளி போல், ஆறு குளங்களில் தங்கி கடலோடு சேர்ந்து பின் மீண்டும் மழைத்துளியாகி மண்ணில் விழ்வதொன்றே செயலென மீண்டும் மீண்டும் நிகழும் நிகழ்வுக்கும் இப்பிறப்பிற்கும் மிகப் பெரும் பேதமேதுமில்லை.

அதிலும் இப்பிரபஞ்சம் பெண்களுக்கென பெரும் கருணையை கையளித்திருக்கிறது உடல், மற்றும் உளக்கூறுகளின் படி பெண்மையின் இயல்பு ஞானத்தின் படிகளுக்கு மிக எளிதில் சென்று சேர்க்கும் வண்ணமே அமையப் பெற்றுளது. வாலை அன்னையின் பிடிகளை எளிதில் தளர்த்தி மயக்கங்களின் பாற்பட்டு மேலெழும்பி பராசக்தியென மூலத்தில் ஒன்றுவதற்கு பெண்மையின் இயல்பான கருணையும், அன்பும் தாய்மையும் பேருதவி செய்யும். அதன் காரணமாகவே பிற உயிர்கள் ஆண்டாண்டு காலமாக சாதகம் செய்தும் எட்டியிராத படி நிலைகளை யோகினிகள் மிக எளிய செயல்களின் மூலம் எட்டியிருக்கிறார்கள். இதுவே “பெண்ணின் பெருந்தக்க யாவுள” இதுவே பெண்ணுக்கு அளிக்கப் பட்டிருக்கும் பெருங்கொடை. ஆனால் அவள் “கற்பென்னும் தின்மையுன்டாகப் பெறின்” அல்லாது போனால் இந்த கொடைக்கான நோக்கம்  சிதைந்து போகிறது.

அது என்ன கற்பு, உடலொழுக்கம் பேணுதல் என்று மட்டும் கொள்ளத்தகாது. கற்பு என்பதற்கு “அடிப்படை நோக்கத்தை மீறாதிருத்தல்” என்றும் கொள்ளலாம். அதனாலேயே நட்புக்கும் கற்பு உண்டு என்றும். செய் நேர்த்தி விழையும் அனைத்து செயல்களுக்கும் பொருந்தும் ஒரு சொல், ஒரு செயல் என்றும் கருதப் படுகிறது.  அது  ஒரு விதத்தில்  ஒழுக்க நெறி. எது ஒழுக்கம்? என்று ஆராய்ந்தால் மூலத்தின் நோக்கம் சிதையாது வாழ்தல் ஒழுக்கம். இங்கு நாம் வந்த நோக்கம் மீண்டும் துளியென மழை மேகமாய் சென்று சேர்வதே. அதன் ஒழுக்கம் மாறாது நம்மில் இருத்திச் செயல் படுவோமேன்றால், அதாவது கற்பென்னும் திண்மை உண்டாகப் பெறின் என்றால் ஞானத்தின் வாயில் அத்தனை உயிர்களுக்கும் எளிதாகக் கடக்கக் கூடிய ஒன்றே.

இந்தக் கற்பென்னும் விழுமியத்தை கடை பிடிக்க முடியாது ஒரு பெண்ணை கட்டும் மூலக் கயிறுகள் அவளது கொடைகளே. அதாவது அவளது பெண்மையும், பிறப்பிலிருந்து கொள்ளும் கருணையும், மென்மையும்,  தாய்மையும்  எவ்வாறு ஞானத்தை அடையத் தூண்டுகோலாக, ஊன்றுகோலாக ஆகிறதோ,  அதுவே பின்னர் தடைக் கற்களாகவும் ஆகிறது. இந்தப் பேருண்மையை புரிந்து கொள்ளும் ஒவ்வொரு பெண்ணும் ஞானத்தின் ஊன்று கோலை இருகப் பற்றியபடி இந்தக் கட்டுக்களை கடந்து,  வந்த நோக்கம் நிறைவேறும் திண்மை கொண்டிருந்தால் அவளே இப் பிரபஞ்சத்தின் பெருந்தெய்வம்.



#குறளின்_மறுபக்கம்

Monday, October 30, 2017

கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் - ஒரு பார்வை

கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்

பல இடங்களில், பலராலும், பல காலங்களாக எடுத்தாளப் படும் ஒரு சொற்றொடர். பெரும்பாலும் ஆன்மிகம் சார்ந்த விவாதங்களில் கடவுளை/உண்மையைக் கண்டவர் சொல்வதில்லை, சொல்பவர் கண்டதில்லை எனும் பொருளில் உபயோகப் படுத்தப் படுவது வழக்கம்.
மிக அற்புதமாக திருமூலர் முதல் ரமணர் வரை தனது உணர்தல்களை மக்களுக்காக விட்டுச் சென்ற பின்னும். நாம் எந்தக் காரணத்திற்காக இந்தப் பதத்தை அப்படி ஒரு த்வனியில் பயன் படுத்துகிறோம். என்ற கேள்வி எழுந்தது.
இதற்கான வித்தை மூன்று வாரங்களுக்கு முன் என்னுள் விதைத்தவர் பூமா Poomalai Haldorai அவரது ஒரு வித்யா பூர்வமான கேள்வியே இந்த தேடுதலின் ஆதாரம். அது மேலும் நேற்று அவரது பக்கத்தில் ஒரு சிறிய விவாதத்தின் மூலம் வலுப்பெற்று இதைக் குறித்து அறிந்து கொள்ளும் தீவிரத்தை என்னுள் விதைத்தது.
சில வாக்கியங்கள், வார்த்தைகள் இப்படித்தான் என்னை ஆண்டுகொள்ளும் உள்ளுணர்வு சொல்லும் பொருளை தரவுகளோடு கண்டடையும் வரை நான் செலுத்தப் பட்டே வருகிறேன்.  இப்படித்தான் இந்த தேடலும் துவங்கியது.
பல விதமான தேடல்களின் மூலமும், முகநூல் நட்புகளின் உதவியாலும் நான் அறிந்து கொண்டது. இந்தப் பதம் இதே சொற்களின் அணிவகுப்பில் எந்த ஒரு சித்தர் பாடலிலும், பழந்தமிழ் செய்யுள் களிலும் கையாளப் படவில்லை என்பதே. பின் எப்படி இணையம் முழுவதும் சித்தர் பாடல்களில் கூறியது போல் என்று மேற்கோள் காட்டப் படுகிறது என்ற கேள்விக்கான பதில் நாம் அறிந்த ஒரு மாஸ் சைக்காலஜி மட்டுமே.
அப்படியானால் இதன் முழுமையான விளக்கம் என்ன? என்ற என் தேடலின் சில அறிதல்கள் இப்படிப் போகிறது.
"கண்டு " என்பதனை பார்த்து என்ற பொருளில் கொள்ளலாம்.
விண்டு என்பதற்கு அநாதி விளக்கங்கங்கள் குவிந்துள்ளது.
திருமூலர் விண்டலர் என்ற பதத்தை எவ்வாறு உபயோகிக்கிறார் என்று பார்க்கலாம்.
"விண்டலர் கூபமும் விஞ்சத் தடவியுங்-
கண்டுணர் வாகக் கருதி யிருப்பர்கள்
செண்டு வௌiயிற் செழுங்கிரி யத்திடை
கொண்டு குதிரை குசைசெறுத் தாரே"
விண்டு அலர் கூபமும் விஞ்ச்சத்து அடவியும் – பிளந்து வெளிப்படும் ஒளியாகிய நீர் ஊற்றையும் அதில் சிவமாகிய அறிவுக்காட்டையும் கண்டு உணர்வாக கருதியிருப்பார்கள் – தரிசித்து உணர்வுமயாமே எண்ணியிருப்பவர்கள் யிருப்பவர்கள் ....... என்று குறிப்பிடுகிறார்.
.
இங்கு விண்டலர் என்பதை – விண்டு+அலர் - பிளந்து வெளிப்படும் மலர் என்ற அர்த்தத்தில் வருகிறது.
இதைக்கொண்டு விளக்க முற்பட்டால் இந்தப் பதத்தை
"கண்டவர் விண்டலர், விண்டவர் கண்டிலர் என்று சொல்லலாம்"
அதாவது தன்னுள் பிளந்து மலர்ந்தவர் கண்டவர், அவ்வாறு மலர்ந்தவர் இவ்வுலகையும் தன் ஆத்மனையும் தனியாகக் கண்டவர்கள் அல்லர் என்றும் பொருள் கொள்ளலாம்.
இந்தப் பதத்தை பட்டினத்தாரும் உபயோகித்திருக்கிறார். எப்படி பார்க்கலாம்.

இந்த பதத்திற்கு நெருக்கமாக பட்டினத்தார் தனது அருள் புலம்பல் பகுதியில் இவ்வாறு கேட்கிறார்.
"கொண்டவர்கள் கொண்டதெல்லாம் கொள்ளாதார் 
கொள்ளுவரோ?
விண்டவர்கள் கண்டவரோ? கண்டவர்கள் விண்டவரோ?"
இந்த வரிசையில் விண்டவர் என்பதற்கு – பிளந்து என்ற பொருள் கொண்டால், தன்னுள் அகழ்ந்து ஆத்மனை உணர்ந்தவர்கள் இறையை கண்டவரோ, இல்லை புறத்தே காட்சியாக கண்டவர்கள் தன்னுள் அகழ்ந்து ஆத்மனை உணர்ந்தவர்களோ என்று பொருள் கொள்ள வேண்டும்.
மொத்தத்தில் அகமும் புறமும் ஒன்றாய் இருக்கும் ஆத்மனை கண்டு தரிசிக்கும் பேறு பெற்றவர்களே தன்னுள் மலர்ந்தவர்களோ என்று கொள்ளலாம்.
இல்லை நாங்கள் சொற்கள் மாறுபடுவதற்கு ஒவ்வாதவர்கள் என்று சொல்லி அதே பதத்தில்
"கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்" – என்று நின்றால் நாம் தாயுமானவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்பதும் தேவை.

தாயுமானவர் தனது தாயுமானவடிகள் திருப்பாடலில்
"காலமொரு மூன்றுங் கருத்திலுணர்ந் தாலும்அதை
ஞாலந் தனக்குரையார் நல்லோர் பராபரமே. " -
என்று சொல்கிறார். இதன் பொருள், முன்னவனருளால் முக்காலமும் தங்கருத்தில் உணர்ந்த மூதறிஞர், பொதுமக்களிடையே அவ்வுணர்ச்சியின் பயனாக அவர்களுக்கு நேரப்போகும் நன்மை தீமைகளை தாம் அறிந்திருந்தாலும் கூறார். இவ்வுண்மையினையே "கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்" என உலகோர் கூறுகின்றனர்.
இதை மேலும் விளங்கிக் கொள்ள சிலப்பதிகாரத்தில் புகார் காண்டத்தில் ஒரு பாடலை பார்க்கலாம்.
"வந்த காரணம் வயங்கிய கொள்கைச்
சிந்தை விளக்கிற் றெரிந்தோ னாயினும்
ஆர் வமுஞ் செற்றமு மகல நீக்கிய
வீர னாகலின் விழுமங் கொள்ளான்"
அதாவது பட்டினப் பாக்கத்தை விட்டு வந்த கோவலன் கண்ணகி வழியில்அ ருக நெறி சாரணர் சிலர் தோன்றினர். அவர்களைக் கண்டதும் கோவலன், கண்ணகி, காவுந்தி ஐயை ஆகிய மூவரும் தம் பண்டைய வினைகள் தீரவேண்டும் என்று வேண்டிக்கொண்டு சாரணர் அடிகளைத் தொழுதனர்.
சாரணர் பொருமகன் அவர்கள் மூவரின் பழ வினையையும் அவ்வினைப் பயனால் மூவரும் வந்திருக்கும் காரணத்தையும் தெளிவாகத் தன் சிந்தை என்னும் விளக்கொளியால் உணர்ந்திருந்தனர் என்றாலும், ஆசையும் சினமும் அறவே நீக்கிய வீரர்ன் ஆதலால், தன் உள்ளத்தில் அவர்கள் பால் இருக்கும் துன்பத்தை வெளிக்காட்டாமல், சொல்லத் தொடங்கினான் “ என்று விறிகிறது காதை.
சரி காவியங்களை விடுவோம் நம் சமகாலத்து ஆன்மீக வழிகாட்டி யாராவது இதைப்னை பற்றி பேசி உள்ளார்களா என்று காணலாம்.

இந்தப் பதத்தை ரமண மகரிஷியின் சீடர் முருகனார் தனது குருவாசகக் கோவையிலும் எடுத்தாண்டுள்ளார்.
"கலி வீட்டி ஆண்டான் தன் காதலர் நெஞ்சத்தில்
கொலு வீற்றிருக்கும் குலாச்சீர் - மலை போற்றாம்
கண்டவர்கள் விண்டிலை விண்டிலர்கள் கண்டிலர்கள் மண்டும் அடியார் மறை"
அதாவது, கலி வீட்டி ஆண்டான் தன் காதலர் நெஞ்சத்தில் கொலு வீற்றிருக்கும் குலாச்சீர் மலைபோல் (குலாச்சீர் – பெருமையான நிலை) தாம் கண்டவர்கள் விண்டிலர், விண்டவர்கள் கண்டிலர்கள் மண்டும் அடியார் மறை (மண்டு – நிறைந்த, மறை – கருத்து)
இங்கும் உணர்ந்தாரே ஆனாலும் வெளியில் சொல்லுவதில்லை என்ற பொருளிலேயே ஆளப் பட்டுள்ளது.
இதுவன்றி மெய்ப்பொருளைக் கண்டவர் விண்டிலர் விண்டவர்எ காணாதவர்ன என நினைப்பது பொருந்தாது. மேலும் அது "கண்ணால் யானுங்கண்டேன் காண்க" என்று திருவாசகம் திரு அண்டப்பகுதியில்(58) உரைக்கப் பட்டிருக்கும் -செந்தமிழ்த் தனித் தமிழ்த் திருமாமறை முடிவுக்கு முற்றும் முரணாகவும் இது அமையும்.
இன்னமும் பார்த்தால் பிங்கல நிகண்டு முதல் பல அகராதிகள் "விண்டு" எனும் சொல்லுக்கு திருமால், அறநூல் பதினெட்டனுள் ஒன்று, வானம், மேலுலகம், மேகம், மலை, மூங்கில், காற்று, தாமரை, செடிவகை. என்று மட்டுமே பொருள் சொல்கிறது.
இதன் படி பார்த்தால் விண்டவர் என்பதற்கு தேவர்கள் என்றும், விண்டிலர் என்பதற்கு காற்று இலாதார் அதாவது தனது வாசியை உச்சியில் செலுத்தியவர் என்றும் பொருள் கொள்ளலாம்.
மீண்டும் திருமந்திரத்தையே நான் துணைக்கழைப்பேன்.
"செண்டு வெளியிற் செழுங்கிரி யத்திடை
கொண்டு குதிரை குசைசெறுத் தாரே"
செழுமையான சிரசாகிய மலையில் கொண்டு குதிரை குசை செறுத்தார் – பிராணனாகிய குதிரையை செலுத்தி மனமாகிய கயிற்றை கொண்டு கட்டிவிடுவார்கள். அதாவது, சிரசில் உணர்வினை கருதியிருப்பவர்களுக்குப் பிராணன் (மூச்சு , காற்று) அடங்கி இருக்கும்.
திருநெல்வேலி பக்கம் விண்டு கொடு என்பதை உடைத்துக் கொடு என்ற பொருளில் பயன் படுத்துவதுண்டு.
சோ ... மக்களே.. இனிமே யாராவது கடவுளைக் கண்டவர் விண்டிலை என்று ஆரம்பித்தால் கொஞ்சம் யோசித்துப் பார்க்கலாம்.

Wednesday, October 25, 2017

கிரியா - முக்தியின் படிநிலைகள்

சிறிதே முற்றிய தூறல் காரின் முகப்புக் கண்ணாடியில் துளிகளாய் படிகிறது. வண்டியின் வேகத்தில் உருவாகும் எதிர்காற்றில் கண்ணாடியில் தெறிக்கும் நீர்த்துளி கோடாக கீழிறங்காது விந்தனுவைப் போன்ற இயக்கத்தோடு கண்ணாடியில் மேல் நோக்கி நகர்கிறது.

இதை நகரும் கண்ணாடியில் நீர்துளி பட்டால் அது மேலே ஏறும் என்று பொது விதியாக்க முடியாது. ஏனெனில் இங்கு கண்ணாடியின் பரப்பு, காற்றின் வேகம், காரின் வேகம், தூறலின் அளவு இப்படி பல காரணிகள் இந்நிகழ்வுக்கு அடிப்படையாக அமைகிறது.

அது போலவே நம் கண்ணெதிரில் அல்லது அனுபவத்தில் காணும் அநேக விஷயங்களுக்கு தியரி கற்பிக்க முடியாது. அவற்றின் காரணிகள் பொது விதிக்கு அப்பாற்பட்டது. குறிப்பாக ஆன்மீக அனுபவங்கள்.  a+b=c என்று கணிக்க இது கணித பார்மூலாக்கள் இல்லை.

பறவைகள் - இயற்கையின் காரணிகள்

பறவைகளை இனம் கண்டு கொள்ளுங்கள், அதன் குரலை, வடிவத்தை, அழகை முழுமையாய் உள் வாங்கிக் கொள்ளுங்கள்.

சாம்பார் கொதித்துக் கொண்டிருக்கலாம், வெண்டக்காய் வதங்கிக் கொண்டிருக்கலாம், கிரைண்டரில் மாவு அரைபட்டுக் கொண்டிருக்கலாம், எங்கிருந்தோ வரும் ஒரு பறவையின் சப்தம் உங்களை ஈர்க்கும் அளவிற்கு ப்றவையை தியானியுங்கள்.

தான் இருக்கும் மரத்தை, கிளை மறைவுகளை, இலை அசைவுகளை உங்களுக்கு உணர்த்தும். அடுத்து எந்த திசையில் பறக்குமென்று உணர்த்தும். நம் விழிப்புணர்வை கூர்மையாக்கும்.

விழிப்புணர்வே தியானம். அதுவே கடவுளின் இருப்பு.

பறவையை தியானியுங்கள்.

ஓஷோ சொல்லவில்லை நான் தான் :)

பிரம்மத்தின் படிகள்

ஒரு பாதார்த்தத்தை நினைவில் மீட்டெடுக்கும் பொழுது மனம்  சுவையில் இருந்து உருவத்துக்கு தாவுகிறதா இல்லை வரிசை மாறுகிறதா???

Ex. அதிரசம் என்று நினைப்பதற்கு அடிப்படை அதன சுவை மனதில் எழுப்பிய வாசனையா இல்லை பெயர், வடிவம், நிறம், தன்மை இவைகளா??? எது முதல் என்பதே கேள்வி??

கணத்தில் நிகழ்தல் - கர்மயோகம்

உள்ளே எழும் சொற்களை வாயுமிழ்ந்து விடுவதொன்றே நாம் செய்யக் கூடியது. கட்டிவைக்கவோ, கட்டமைக்கவோ உரிமையற்றவர்கள் நாம். சொல்லெழாதா போது கூர்ந்து நோக்கலாம் மீண்டும் சொற்கள் எழும் தோறும் உமிழ்ந்து செல்லலாம். அதுவும் கர்மயோகமே. அதற்கப்பால் ஏதுமில்லை .

வெண்முரசில் என்  வாசிப்பின் திறவுகோல் மேற் கூறிய வரிகள்.

"இப்புவி தோன்றிய காலத்திலிருந்தே. இரண்டுக்குள்ளும் அனல் நிறைந்திருக்கிறது. அவற்றை ஒன்றை ஒன்று உரசி அனல் எழுப்பச் செய்தது அனலோனின் விழைவு மட்டுமே. என்னை அவன் இங்கே ஆணையிட்டு நிறுத்தியிருக்கிறான். இந்த ஊன், இதை உண்ணும் நான் அனைத்தும் அவன் திட்டங்களின் படி நிகழ்பவை” என்றான். ஆம், இந்தச் சொற்களும் அவ்வாறு எழுபவையே” என்று சுருதகீர்த்தி சொன்னான். சுதசோமன் உரக்க நகைத்து “ஐயமென்ன? அத்தனை சொற்களும் அனலில் எழும் பொறிகள் மட்டுமே. பிறிதொன்றுமல்ல” என்றான்"

- நூல் பதினைந்து – எழுதழல் – 34 - ஜெயமோகன்

அஸ்வத்தாமா - குறிதவறிய விழைவுகள்

விழைவுகளை சென்றடையா மனமும், இலக்கினை கண்டடையா அம்பும் மீண்டும் மீண்டும் எய்யப்படும். இங்கு ஒவ்வொருவரும்   அஸ்வத்தாமனே

- வெண்முரசின் தாக்கம்.

Tuesday, October 24, 2017

அசையும் பிரம்மம்

உள்ளிருந்து வெளித்தள்ளுகிறோமா??
இல்லை
உள்ளிழுப்பதையே வெளியேற்றுகிறோமா??
இடையில் தங்கும் அணுவுக்கும் குறைவான வெளி
எங்கு சென்று சேர்க்கிறதோ
அதுவே சிவமோ....

அசையாது தன்னுள் வளியை (காற்றை ) வாங்கி தானே வெளியாகும் (அண்டமாகும்) சிவம்...

மீண்டும் மீண்டும் வெளியை வளியாக்கி உள்கொணரும் சக்தியின் நடனமும் தான் ஜீவனோ...

சிவ சக்தி.... சிவசக்தி என முப்பாட்டன் இதைத்தான் கூத்தாடினானோ.....

உறக்கமற்ற  இரவின் விழிப்பு விடியலைக் காட்டுகிறதோ.

ஆதி யுகத்திலிருந்து

ஆதியுகத்தின் மரப் பொந்துகளிலிருந்து சிறகடித்துப் பறந்த பறவைகள் இன்று கான்கிரீட் கட்டிடங்களின் குளிர்சாதன மின்கருவியின் இடுக்குகளிலிருந்து பறந்து செல்கிறது.

இரண்டுக்குமான வித்யாசத்தை அவை அறிந்து கொள்ளுமா என்ற கேள்விக்கு முன் அதனால் உனக்கென்ன பயனென்றும் ஒரு பதில் வர மவுனமாய் காட்சியை வார்த்தையாக்கிக் கொண்டிருக்கிறேன். ஓஷோவை புறக்கணித்தபடி.

கிளி - சித்திகளின் குறியீடு

இன்று ஒரு செய்தி அறிந்து கொண்டேன். பறவைகளில் கிளி மட்டுமே தலையைத் திருப்பாது தனக்கு பின்னால் இருக்கும் பொருளை கண்டு கொள்ளும் திறன் பெற்றதாம்.
ஆன்மீக ரீதியாக பார்த்தால் அதை பிடரிக்கண் என்றும் மலர்ந்த பிந்து சக்கரா என்றும் சொல்லலாம்.
அதனால் தான் கிளி எப்பொழுதும் ஆன்மீகத்தோடு தொடர்பு கொண்டு குறிப்பிடப் படும் ஒரு பறவையாகவும். மீனாஷி, ஆண்டாள், காமாஷி என்று பெரும் சக்திநிலைகளைக் குறிக்கும் பெண் தெய்வங்கள் தங்கள் கைகளில் ஏந்தி நிற்பது போலும் படைக்கப் பட்டிருக்கிறதோ என்று தோன்றியது.
ஒரு குறியீடு போல.

உடுப்பி கிருஷ்ணரும் - 2014 தீபாவளியும்

93-ல் உடுப்பி வந்திருக்கிறோம். நன்னு ஒரு வயது குழந்தை அதுவும் ஒரு தீபாவளி சமயம் தான். நீண்ட வரிசையில் நின்று ஜன்னல் வழியே கிருஷ்ணனை பார்த்து விட்டு வந்ததில் ஒன்றும் புரியவில்லை. விளையாடுவதற்கு முன்னரே சட்டென்று உடைந்த குழந்தை கை பலூன் போலானது. சற்றே புலம்பிய படி வந்து சேர்ந்தோம். 21 வருடங்களுக்கு பிறகே மீண்டும் செல்ல வாய்ப்பு கிடைத்தது.
மனிப்பாலின் உபயமாய என்று தோன்றுகிறது, பிஸா ஹட்டில் இருந்து ஜோஸ் அலுக்காஸ் வரை இருக்கும் ஒரு ஜோரான குட்டி மெட்ராஸ். போன்ற உடுப்பி கொஞ்சம் வியப்பை தந்தது.
கோவிலுக்கு நடந்து செல்லும் தொலைவில் ஒரு அறை எடுத்து தங்கினோம். சிறிது ஓய்விற்குப் பிறகு கோவிலுக்கு கிளம்பினோம். கோவில் இருக்கும் வழியெங்கும் உள்ள நகைக் கடை உரிமையாளர்கள் அவரவர் கடைகளில் பூஜைக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்ததை வேடிக்கை பார்த்தபடி கோவிலை அடைந்தோம்.
மணி 6.20 கூட்டமே இல்லை நாலைந்து முறை வரிசையில் வந்து கிருஷ்ணனை தரிசித்தோம். விளக்குகளில் திரி இட்டு ஏற்றுவதற்கு தயாராய் இருந்தது எனவே அங்கிருக்கும் ஒருவரிடம் எப்போது ஏற்றுவார்கள் என்று கேட்டதும் இன்னும் 10 நிமிடத்தில் என்று கூறியதோடு நில்லாமல் வெயிட் பண்ணு என்றும் சைகையால் கூறினார்.
குழந்தைகளும் ஶ்ரீ யும் மண்டபத்தில் அமர்ந்து கொள்ள நான் பிரதட்சணம் செய்ய ஆரம்பித்தேன். அதுமுதல் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு என்னை எல்லா பூஜைக்கும் எங்கு அமர்ந்தால் எல்லாமும் நன்றாக பார்க்க முடியுமே அங்கு அமரச்செய்து கூடவே இருந்தபடி அவரது பணிகளையும் செய்து கொண்டிருந்தார்.
பின்னர் நேற்று அங்கு தீபாவளியை முன்னிட்டு ஒரு விசேஷ பூஜை யாக பலிந்த்ர பூஜை நடை பெற்றது ( நரகாசுரனை பலியிடும் பூஜை) அதையும் கூட்டிச்சென்று காமித்து விட்டு கடைசியில் போஜன சாலையை காட்டி விட்டு ஒரு நன்றி கூட எதிர் பாராமல் சென்று விட்டார். இத்தனைக்கும் அவர் கோவில் ஊழியர்களுக்கான உடையில் இருந்தார். நம் ஊரில் என்றால் என்ன நடந்திருக்கும் என்று சொல்லவும் வேண்டுமா?
இந்த வழி காட்டுதல் இல்லாதிருந்தால் அனேகமாக ஏதாவது ஒரு ஆரத்தியை பார்த்து விட்டு கிளம்பியிருப்போம்.
இதன் இடையில் அனேகமாக மொத்த மடத்தையும் சுற்றி வந்திருந்தோம். இருபது வருடங்களுக்கு முன்னால் பார்க்கத்தெரியாமல் பார்த்து விட்டு புலம்பியதற்கு இப்போது பதில் சொன்னது போல் இருந்தது. மனது நெகிழ்ந்து கிடந்தது.
அவனருளாலே அவன் தாழ் பணிந்தேன்....

Sunday, May 14, 2017

நாராயண யோகீஸ்வரர் - காளையார் கோவில் - 3

 (இறுதிப் பகுதி)
இதுதான் இணையத்தில் காணக்கிடைக்கும் செய்தி. அங்கு வந்த பெரிய பூசாரி இதில் ஒரு 30% அங்கும் இங்கும் மாற்றிச் சொன்னார்.
1801ம் ஆண்டு ஜூலை வாக்கில் சிவன் கோயில் அர்ச்சகர்கள் ஒரு புதிரான சம்பவத்தைக் கண்டனர். நள்ளீரவு அர்த்த ஜாம பூஜை முடிந்து கதவுகள் மூடப்படும். வெளியிலிருந்து ஒருவரும் கோவிலிக்குள் செல்ல இயலாது. மறு நாள் காலையில் கதவுகள் திறந்ததும் சுவர்ண காளீஸ்வரர் கருவறைக்குள் மாமிசத் துண்டுகள் மற்றும் எலும்புத் துண்டுகள் இறைந்து கிடக்கும்.
பல நாட்கள் இவ்வாறு நடக்கவே அர்ச்சகர்கள் ஆச்சர்யம், அதிர்ச்சி அடைந்து இதனை ஆட்சி அதிகாரத்திலுள்ள மருது இருவரிடம் தெரிவித்து ஆகம விதிகளுக்குப் புறம்பான கருவறைக்குள் மாமிச பண்டங்கள் சிதறுதலைத் தடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
மருதிருவர் ஆச்சரியம் அடைந்தவராக சுவர்ண காளீஸ்வரர் கருவறைக்குள் அர்த்த ஜாம காலத்திற்குப் பின்னர் இருந்து நிகழ்வுகளை ஆராய ஓர் ஓற்றரை நியமித்தார்.
கருவறைக்குளிருந்த ஓர் ஓற்றர் கதவுகள் அடைக்கப்பட்டபின்னும் கருவறைக்குள் ஒரு சுரங்கப்பாதை வழியே முதியவர் ஒருவர் வந்து சிவலிங்கத்திற்கு நிணம் கொண்டு பூஜை செய்வதை அவ்வொற்றர் கண்டு அப்பெரியவைக் கைது செய்து மருதிருவர் முன் நிறுத்தினர்.
மருதிருவர் அப்பெரியவரின் செயல் பற்றி வினவ அப்பெரியவர் தான் ஒரு சித்தபுருஷர் என்றும் கடந்த 2000 ஆண்டு காலமாக நிண பூஜை செய்து வருவதாகவும் இன்னிண பூஜை முறை சித்தர் சாத்திரப்படி சரியானது என்றும் பதிலளித்தார். அப்பெரியவரின் கூற்றில் சந்தேகமடைந்த அர்ச்சகர்கள் அவர் ஒரு சித்தபுருஷர் என்பதை முறைப்படி நிறுவும்படி கோரவே அப்பெரியவர் அர்ச்சகர்களின் சவாலினை ஏற்றார்.
அதன்படி அப்பெரியவர் மண்ணுக்குள் ஆழப்புதைக்கப்படுவார். அதன் பின்னர் அப்பெரியவர் வேறு எங்காவது தோன்றவேண்டும். இதன்படி ஓர் ஒற்றர் ராமேஸ்வரம் அனுப்பப்பட்டார். அப்பெரியவர் மண்ணுக்குள் புதைக்கப்பட்டார். அப்பெரியவரின் கூற்றில் மீண்டும் மீண்டும் சந்தேகமடைந்த அர்ச்சகர்கள் மருதிருவரைக் கொண்டு அப்பெரியவர் புதையுண்ட இடத்தினைத் தோண்டச் செய்தனர்.
அவ்விடம் தோண்டப்பட்டவுடன் அக்குழிக்குள் அப்பெரியவர் இன்னும் தவ நிலையிலிருந்ததையும் ராமேஸ்வரத்திற்கு அனுப்பட்ட ஒற்றனிடமிருந்து அப்பெரியவர் தற்சமயம் ராமேஸ்வரத்தில் தான் உள்ளார் என்ற செய்தி வந்ததையும் கண்டு திகைப்படைந்த அர்ச்சகர்கள் பின் வாங்கினர். தவ நிலை கலைந்த அப்பெரியவர் சித்தர் நாராயண யோகீஸ்வரர் தன் கூற்றினை நம்பாத அர்ச்சர்களை நம்பிய மருதிருவர்களுக்கு ஒரு சாபம் இட்டார்.
அதன்ப்டி அன்றிலிருந்து 90 நாட்கள் கழித்து மருதிருவரின் முடிவு அமையும் என்பது யோகீஸ்வரரின் சாபமாகும். யோகீஸ்வரரின் சாபத்திற்குள்ளான மருதிருவர் மிகச்சரியாக 90 கழித்து 24-10-1801 அதிகாலை ஆங்கிலேயர்களால் திருப்புத்தூரில் தூக்கு மேடையில் வீர மரணம் எய்தினர்.
சித்தர் நாராயண யோகீஸ்வரரின் ஜீவ சமாதி இன்றும் சிவகங்கை சமஸ்த்தான தேவஸ்தானத்தினரால் காளையார்கோவிலில் பேணப்பட்டு வருகிறது.
இவை தவிர வேறு இடங்களில் நாராயண யோகீஸ்வரரைப் பற்றி செய்திகள் இணையத்தில் இல்லை. ஆனால் வேலாம்பாள் யோகிஸ்வரி என்ற யோகினியைப் பற்றிய குறிப்புகளில் அவரது குரு என நாராயண யோகீஸ்வரரைப் பற்றியும் அவர் காளையார் கோவிலில் வாழ்ந்தவர் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது. அவரே யோகினிக்கு வழிகாட்டியவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேறு எந்த சித்த புருஷர்கள் வரிசையிலும் இவரைப் பற்றிய குறிப்பு இல்லை. இவையனைத்தையும் தாண்டி அங்கு இரண்டாயிரம் வருடங்கள் வாழ்ந்து நமக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு ஜீவ சமாதி ஆன பின்னரும் உயிர்ப்புடன் நம்மை அரவணைக்கும் அந்த பெருங்கருணையின் இருப்பு மிக நன்றாகப் புரிகிறது.
இவரது குடும்பத்தை சார்ந்தவர்கள் இன்றும் இவரை குலசாமியாக வந்து வணங்கி மீள்வதாகவும் குடும்ப நிகழ்சிகளை அவரது சந்நிதியில் நடத்துவதாக அந்த பெரியவர் சொன்னதில் இருந்து கொஞ்சம் பின்னோக்கி நகர்ந்து தொடர்ந்தால் இன்னமும் செய்திகளை சேகரிக்க முடியும் என்று தோன்றுகிறது.
முற்றும்.

நாராயண யோகீஸ்வரர் - காளையார் கோவில் - 2


பக்கத்தில் இருந்த சலுனில் கேட்டதில் அவர்கள் ஒரு சாவியைக் கொடுத்து திறந்து கும்பிட்டுட்டு போங்க என்று சொன்னார்கள். கேட்டை திறந்து உள்ளே போனால் ஏதோ பழங்கால தெப்பக்குளத்து படிகள் போல ஒரு பாதை இறங்கிச் செல்ல இடது புறம் ஒரு புதிய மண்டபம் அதற்கு ஒரு கேட் அதுவும் பூட்டியிருந்தது. ஏறிக் குதித்து விடலாமா என்று யோசிக்கும் போதே ஸ்ரீ என் மைன்ட் வாய்ஸ் கேட்ட மாதிரி கேட் உயரம் ஜாஸ்தி என்று சொன்னார். இப்படியே விட்டா ஸ்ரீ திரும்பி போயிடலாம்னு சொல்லிடுவாரோன்னு பயந்துட்டு “நீ இங்கயே இரு நான் போய் இந்த உள் கேட் சாவியை வாங்கிட்டு வரேன்னு” பதிலுக்கு காத்திராமால் வந்த வழியே ஒடினேன். அங்க போய் கேட்டால் அந்தச் சாவி இங்க இல்லங்க பஸ்டாண்டு பக்கத்துல இளவழுதி பூக்கடைன்னு கேளுங்க அங்க இருக்கும்னு சொல்ல கொஞ்ச தூ.....ரத்தில் இருந்த அந்தப் பூக்கடையை நோக்கி ஓடினேன்.
அங்கே போய் கேட்டதும் அதில் இருந்த ஒரு பையன் ஓஹ் சாமி பாக்கணுமா நீங்க போங்க நான் வந்திடறேன்னு சொன்னாப்ல, சரின்னு திரும்பி நடந்து போய் கிட்டிருக்கும் போதே ஸ்ரீ போன் பண்றார். பூசாரி வந்தாச்சு நீ எங்க போயிட்டேன்னு (அவரு எங்கிட்ட சொல்லிட்டு டூ வீலர்ல போயிட்டார்). தோ வந்துட்டேன்னு போனா அதுக்குள்ள அவர் சந்நிதி திறந்து வைத்திருந்தார்.
நன்றாக தரிசித்து விட்டு சாமியைப் பத்தி சொல்லுங்கன்னு சொன்னதும் அந்தப் பையனுக்கு ஒன்னும் தெரியல, கொலசாமி கும்பிட வருவாங்க, வியாதி தீரும், பிசினஸ் நல்லா வரும், குழந்தை இல்லாதவங்களுக்கு குழந்தை பிறக்கும் அப்படின்னு திருப்பி திருப்பிச் சொல்ல சரி இது வேலைக்காவதுன்னு தியானத்துக்கு உட்கார்ந்து விட்டேன்.
அதுவரை இருந்த பரபரப்பு அகன்று நல்ல அமைதி தண்ணென்று உள்ளே அமைய ஆழ்ந்து செல்ல முடிந்தது. நல்ல அனலடிக்கும் வெய்யிலில் புறம் காய்ந்து கொண்டிருக்க குளிர்ச்சியான கிரானைட் மண்டபத்துள் அகம் குளிர்ந்து அடங்கத்துவங்கியது. மனம் ஒன்றி தளும்பி கண் திறக்க அவர் அங்கிருந்த லிங்கத்தின் மேலிருந்த பூமாலையை எடுத்து பிரசாதமாக ஸ்ரீயின் கழுத்தில் இட்டு விபூதி தரவும் கிளம்பத் தயாராகும் போது “கொஞ்சம் இருங்க எங்க அப்பாக்கு போன் பண்ணியிருக்கேன் வந்துகிட்டிருக்காக, அவுக வந்து சாமி பத்தி சொல்லுவாக என்று சொல்லவும் சரி என்று சிறிது நேரம் காத்திருக்கத் துவங்கினோம்.தொடரும் ....





நாராயண யோகீஸ்வரர் - காளையார் கோவில் - 1


வழக்கம் போல அங்க உள்ள ஜீவசமாதி விபரம் பார்த்து வைத்துக் கொண்டேன். முதல் கோவில் (சோமேசர் சந்நிதி ) அர்சகரிடம் கேட்டதில் அவர் அவசர அவசரமாக ஏதோ எலக்ட்ரிகல் கடை பெயர் சொல்லி அதற்கு அருகில் உள்ளது என்று சொல்லிவிட்டு அடுத்த வேலைக்கு போய் விட்டார்.
இரண்டாவது கோவிலை விடுத்து மூன்றாவது கோவில் (சுந்தரேசர் சந்நிதி) அர்சகரிடம் "இங்க ஒரு ஜீவ சமாதி..சித்தர் ..என்று ஆரம்பிக்கவும் அவர் இங்க அப்படில்லாம் ஒன்னும் இல்லிங்க என்று சொல்ல இன்னொருவர் அகத்தியர் கோவிலா என்று கேட்க, மற்றுமொருவர் அருணகிரி நாதர் கோவிலா என்று கேட்க அவர்கள் இருவருக்கும் அகத்தியர் சித்தரா இல்லையா என்ற விஷயத்தில் சண்டை வேறு வந்து விட்டது. எனக்கு தர்மசங்கடமாகப் போயிற்று. இது அநேக இடங்களில் நடப்பது தான். உள்ளூர் மக்களுக்கு பெரும்பாலும் இவை தெரிவதில்லை. அதுவரை "உன் வேலையை ஆரம்பிச்சாச்சா ஸ்திதியில் பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீ ஜோதியில் ஐக்கியமானார். "சிவகங்கை சமஸ்தானம் மெயின்டெயின் பண்றாங்களாமே, ஏதோ எலக்டிரிகல் கடைக்குப் பக்கத்தில் என்று எடுத்துக் கொடுக்க (நாமதான் வண்டில போகும்போதே அத்தனை வரலாறையும் வாசிச்சு காட்டி இல்லேன்னா சொல்லிடுவோமே.. பெரிய மெமரி ஹெல்ப் ஆகும். சிலசமயம் எனக்கு ஊர் பெயர் திசை எல்லாம் சட்டுன்னு நியாபகத்துக்கு வராது) ஒஹ் அதுவா அது சமஸ்தான சிவன் கோவில்ங்க என்று வழி சொன்னார்கள்...
அங்கு போனால் ஒரு பாழ் மனைக்கு அழி கேட் போட்டு சாவி போட்டு பூட்டியிருந்த இடத்தைத் தான் பார்க்க முடிந்தது...
அப்படியே விட்டு விடுவோமா என்ன??
தொடரும்....

Entropy Vs Enlightenment – பகுதி 4

 (நிறைவுப் பகுதி - ஒரு வழியா முடிச்சிட்டேன் :) )
அந்த மரத்துண்டு கையில் இருந்து கிழே விழும் பொழுது ஏதேனும் தடை ஏற்பட்டு இடையில் ஒரு தளத்தில் தங்க நேரும் பொழுது சில சமயம் அது குவாண்டம் டனலிங் (Quantum Tunneling) கான்செப்ட் படி சுற்றி இருக்கும் ஆற்றல் சக்தியை பயன் படுத்திக் கொள்வதன் மூலம் தனது இருப்பைச் சென்று அடைகிறது. அவ்வாறு செயலாற்றும் பொழுது அதன் எடையற்ற தன்மையே இந்த டனலிங் முயற்சியின் முதல் காரணி.
இதில் மரக்கட்டைக்குப் பதில் பந்து ஒன்றை உருவகப் படுத்திக் கொள்வோம் என்றால் இன்னமும் இலகுவாக விளங்கிக் கொள்ள ஏதுவாக இருக்கும் -( a ball which is lacking the energy to penetrate a hurdle will become still. However In quantum mechanics, these particles can, with a very small probability, tunnel to the other side, thus crossing the barrier. Here, the "ball" could, in a sense, borrow energy from its surroundings to tunnel through the obstacle)
இப்பொழுது ஞானமடைதல் (enlightenment) என்ற நிலையில் நாம் எடையற்று இந்த உடலுக்கும் ஆன்மாவிற்குமான தொடர்புகளை முழுவதும் அறிந்து விலகும் முயற்சியில் உண்டாகும் தடைகளை இந்த பிரபஞ்ச சக்தியை உள்வாங்கிக் கொள்வதன் மூலமாக தாண்டி பிரபஞ்சத்தின் இருப்பினோடு ஒன்றிணைந்து விடுகிறோம்.
அப்பொழுதும் இந்த இருப்பு உள்ளது அனால் இந்த பிரபஞ்சத்தினோடு கலந்த ஒத்திசைவாக எந்த எதிர்வினையும் ஆற்றாத நிலைக்குச் சென்று விடுகிறது.
எனவே இருக்கிறது... ஆனால் இல்லை, அதாவது ஆன்மா தன் எண்ட்ரோபி நிலையை அடைந்து விடுகிறது.
அறிவியலாளருக்கு அது அறிவியல் ஆன்மீகர்களுக்கு அது ஆன்மீகம் அவ்வளவே.

Entropy Vs Enlightenment – பகுதி 3

ஒரு கை அகல மரக்கட்டையை எடுத்துக் கொள்வோம். அதை நாம் நம் மற்றொரு கையால் ஒரு குறிப்பிட்ட உயரத்தில் பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது அதற்கென செயல்படும் விசை இல்லை ஆனால் அதற்குள் பொட்டேன்ஷியல் எனர்ஜி (திறன்படும் செயல்) (Potential Energy - the energy possessed by a body by virtue of its position relative to others, stresses within itself, electric charge, and other factors) உள்ளது.
நாம் நம் கையில் இருந்து அதை விடுவிக்கும் பொழுது கைநெடிக் எனர்ஜியின் மூலம் (இயங்கு ஆற்றல்) (Kinetic Energy - energy which a body possesses by virtue of being in motion ) தரையைச் சென்று ஓய்வடைகிறது. ஆங்கிலத்தில் அதை Resting (be placed or supported so as to stay in a specified position ) என்று சொல்லலாம்.
அதாவது அதன் செயலற்ற தன்மைக்குள் செல்கிறது. இன்னமும் சொல்வதென்றால் அது தனது எண்ட்ரோபி நிலையை அடைகிறது. இன்னொரு விசை அதை இயக்குமானால் அது மீண்டும் இயங்கு நிலைக்கு மாறும் அதுவரை அது அந்த நிலையில் நீடித்திருக்கும்.
அதுவே அந்த மரக்கட்டையை நாம் ஒரு அரவை இயந்திரத்தில் இட்டு அரைக்கும் பொழுது அது துகள் துகளாக மாறி எடையற்ற நிலைக்குச் செல்கிறது இனி அது மரக்கட்டை இல்லை மரத்துகள், அதன் எடை மாற்றம், கொள்கிறது. . இதுதான் என்று தனித்து ஒரு துகளாக காணும் அடையாளமற்று அணு அளவு ஆகிறது. இப்பொழுது அந்தத் துகள் தரையைச் சென்று அடைந்ததும் அது காற்றுடனோ நீருடனோ, பூமியுடனோ (பஞ்ச பூதங்களில்) கலந்து விடுகிறதே தவிர மீண்டும் அது தனித்து இன்னொரு பொருளாக உருக் கொள்வதில்லை.
இதில் மற்றொரு பரிணாமமும் உள்ளது.....
தொடரும்....