Tuesday, October 24, 2017

அசையும் பிரம்மம்

உள்ளிருந்து வெளித்தள்ளுகிறோமா??
இல்லை
உள்ளிழுப்பதையே வெளியேற்றுகிறோமா??
இடையில் தங்கும் அணுவுக்கும் குறைவான வெளி
எங்கு சென்று சேர்க்கிறதோ
அதுவே சிவமோ....

அசையாது தன்னுள் வளியை (காற்றை ) வாங்கி தானே வெளியாகும் (அண்டமாகும்) சிவம்...

மீண்டும் மீண்டும் வெளியை வளியாக்கி உள்கொணரும் சக்தியின் நடனமும் தான் ஜீவனோ...

சிவ சக்தி.... சிவசக்தி என முப்பாட்டன் இதைத்தான் கூத்தாடினானோ.....

உறக்கமற்ற  இரவின் விழிப்பு விடியலைக் காட்டுகிறதோ.

No comments: