கேள்விகள் என்பது நம் வினைச்செயல்,கர்மா
அதற்கும் கடவுளே காரணம் என்பதில் எனக்கு ஒப்புமை இல்லை. அவர் கேள்விகளுக்கு
அப்பாற்பட்டவர். நாம் செய்யும் நன்மை தீமைகளுக்கும் நம் வினைப்பயனே காரணம்.
நல்லோர் நட்பும் கடவுள் நாமமும் நம் கர்ம
வினைகளைக் குறைக்க உதவும். அதன் மூலம் நாம் செய்யும் நன்மைகள் அதிகரிக்கும்
அப்போதும் அதற்கான கர்த்தா நாம் தான்
இதில் நன்மையை நாம் கடவுளின் பெயருக்கு விடுவதன்
காரணம் “நாம் ஒரு நன்மை செய்து விட்டோம்” என்ற ஆணவத்தை அடைந்து விடாமல்
இருப்பதற்காகத்தான்.ஏனெனில் இந்த உணர்வு இறுமாப்பையும் அதற்கான பதில்
உபகாரத்தையும் (குறைந்த பட்சம் ஒரு சிறிய அங்கீகாரத்தையாவது ) எதிர்பார்க்க
வைக்கும். இதன் பயனால் இம்மையில் நாம் மீண்டும் ஒரு செயல் சக்கரத்தில் சிக்கிக்
கொள்கிறோம். மறுமையிலோ மற்றுமோர் வினைச்சக்கரத்தை உருவாக்கிக்கொள்கிறோம். .
இப்போது கேள்விக்கு வருவோம். - எல்லாமும் கடவுள்
செயல்தான் என்று சொன்னால் ஒருவர் செய்யும்
தவறையும் கடவுள் செயல் என்று சொல்லமுடியுமா?
அது நாத்திகவாதமாகதா? அது போலத்தான் கேள்விகளும். கேள்விகள் அறியாமையின்,
இருளின், வெளிப்பாடு, இதில் அணுவுக்குள்
அனுவானவர்க்கும் ஒளியானவர்க்கும் தொடர்பில்லை.
இப்போது பதிலுக்கும் வரலாம் – பதில் எங்கும்
எப்போதும் ஓரு காற்றைப்போல நிலைத்து
நிறைந்திருப்பது. ஆனால் காற்றாடி சுற்றும்
போதோ மரங்கள் அசையும் போதோதான் நாம் அதை புரிந்து கொள்கிறோம். இதில் நம் கேள்விகளை
சுயம் ஏற்றி அதற்குண்டான பதில்களையும் தொடர்பு படுத்தி நம்மை சுகத்திலோ
துக்கத்திலோ ஆழ்த்திக்கொள்கிறோம். தற்குறிப்பேற்றல் அணி உண்டல்லாவா அது போல. இங்கும் நம் அறியாமை மட்டுமே
வியாபித்திருக்கிறது.
கடவுளின் வேலை நம்மில் கேள்விகளை உண்டாக்குவதோ
அதற்குண்டான பதில்களை தருவதோ இல்லை. அவரது நாமத்தால் நம்மை கேள்விகளற்ற நிலைக்கு
தள்ளுவது மட்டுமே அதை உணர்த்துவது மட்டுமே. இதையும் தாண்டிய ஒரு நிலையில் அவர்
வேறு எவரோ இல்லையென்றும், வேறு எங்கோ ஓர் தனி உலகத்தில் பருப்பொருளாய்
இருக்கவில்லை என்றும் நம் ஆத்மா அந்த பேருணர்வின் ஒரு துகள் என்றும் புரிந்து
கொள்ளும் நொடியில் மற்றுமொரு கடவுள் நமக்குள் உருக்கொள்கிறார்.
இதில் காலம் காலாமாய் நாம் செய்து
கொண்டிருக்கும் சாங்கியத்திற்கு எந்த ஒரு கர்வமும் கொள்ளத்தேவையில்லை என்பது என்
கருத்து.