Sunday, May 14, 2017

Entropy Vs Enlightenment – பகுதி 3

ஒரு கை அகல மரக்கட்டையை எடுத்துக் கொள்வோம். அதை நாம் நம் மற்றொரு கையால் ஒரு குறிப்பிட்ட உயரத்தில் பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது அதற்கென செயல்படும் விசை இல்லை ஆனால் அதற்குள் பொட்டேன்ஷியல் எனர்ஜி (திறன்படும் செயல்) (Potential Energy - the energy possessed by a body by virtue of its position relative to others, stresses within itself, electric charge, and other factors) உள்ளது.
நாம் நம் கையில் இருந்து அதை விடுவிக்கும் பொழுது கைநெடிக் எனர்ஜியின் மூலம் (இயங்கு ஆற்றல்) (Kinetic Energy - energy which a body possesses by virtue of being in motion ) தரையைச் சென்று ஓய்வடைகிறது. ஆங்கிலத்தில் அதை Resting (be placed or supported so as to stay in a specified position ) என்று சொல்லலாம்.
அதாவது அதன் செயலற்ற தன்மைக்குள் செல்கிறது. இன்னமும் சொல்வதென்றால் அது தனது எண்ட்ரோபி நிலையை அடைகிறது. இன்னொரு விசை அதை இயக்குமானால் அது மீண்டும் இயங்கு நிலைக்கு மாறும் அதுவரை அது அந்த நிலையில் நீடித்திருக்கும்.
அதுவே அந்த மரக்கட்டையை நாம் ஒரு அரவை இயந்திரத்தில் இட்டு அரைக்கும் பொழுது அது துகள் துகளாக மாறி எடையற்ற நிலைக்குச் செல்கிறது இனி அது மரக்கட்டை இல்லை மரத்துகள், அதன் எடை மாற்றம், கொள்கிறது. . இதுதான் என்று தனித்து ஒரு துகளாக காணும் அடையாளமற்று அணு அளவு ஆகிறது. இப்பொழுது அந்தத் துகள் தரையைச் சென்று அடைந்ததும் அது காற்றுடனோ நீருடனோ, பூமியுடனோ (பஞ்ச பூதங்களில்) கலந்து விடுகிறதே தவிர மீண்டும் அது தனித்து இன்னொரு பொருளாக உருக் கொள்வதில்லை.
இதில் மற்றொரு பரிணாமமும் உள்ளது.....
தொடரும்....

No comments: