Sunday, May 14, 2017

நாராயண யோகீஸ்வரர் - காளையார் கோவில் - 1


வழக்கம் போல அங்க உள்ள ஜீவசமாதி விபரம் பார்த்து வைத்துக் கொண்டேன். முதல் கோவில் (சோமேசர் சந்நிதி ) அர்சகரிடம் கேட்டதில் அவர் அவசர அவசரமாக ஏதோ எலக்ட்ரிகல் கடை பெயர் சொல்லி அதற்கு அருகில் உள்ளது என்று சொல்லிவிட்டு அடுத்த வேலைக்கு போய் விட்டார்.
இரண்டாவது கோவிலை விடுத்து மூன்றாவது கோவில் (சுந்தரேசர் சந்நிதி) அர்சகரிடம் "இங்க ஒரு ஜீவ சமாதி..சித்தர் ..என்று ஆரம்பிக்கவும் அவர் இங்க அப்படில்லாம் ஒன்னும் இல்லிங்க என்று சொல்ல இன்னொருவர் அகத்தியர் கோவிலா என்று கேட்க, மற்றுமொருவர் அருணகிரி நாதர் கோவிலா என்று கேட்க அவர்கள் இருவருக்கும் அகத்தியர் சித்தரா இல்லையா என்ற விஷயத்தில் சண்டை வேறு வந்து விட்டது. எனக்கு தர்மசங்கடமாகப் போயிற்று. இது அநேக இடங்களில் நடப்பது தான். உள்ளூர் மக்களுக்கு பெரும்பாலும் இவை தெரிவதில்லை. அதுவரை "உன் வேலையை ஆரம்பிச்சாச்சா ஸ்திதியில் பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீ ஜோதியில் ஐக்கியமானார். "சிவகங்கை சமஸ்தானம் மெயின்டெயின் பண்றாங்களாமே, ஏதோ எலக்டிரிகல் கடைக்குப் பக்கத்தில் என்று எடுத்துக் கொடுக்க (நாமதான் வண்டில போகும்போதே அத்தனை வரலாறையும் வாசிச்சு காட்டி இல்லேன்னா சொல்லிடுவோமே.. பெரிய மெமரி ஹெல்ப் ஆகும். சிலசமயம் எனக்கு ஊர் பெயர் திசை எல்லாம் சட்டுன்னு நியாபகத்துக்கு வராது) ஒஹ் அதுவா அது சமஸ்தான சிவன் கோவில்ங்க என்று வழி சொன்னார்கள்...
அங்கு போனால் ஒரு பாழ் மனைக்கு அழி கேட் போட்டு சாவி போட்டு பூட்டியிருந்த இடத்தைத் தான் பார்க்க முடிந்தது...
அப்படியே விட்டு விடுவோமா என்ன??
தொடரும்....

No comments: