Wednesday, October 25, 2017

கணத்தில் நிகழ்தல் - கர்மயோகம்

உள்ளே எழும் சொற்களை வாயுமிழ்ந்து விடுவதொன்றே நாம் செய்யக் கூடியது. கட்டிவைக்கவோ, கட்டமைக்கவோ உரிமையற்றவர்கள் நாம். சொல்லெழாதா போது கூர்ந்து நோக்கலாம் மீண்டும் சொற்கள் எழும் தோறும் உமிழ்ந்து செல்லலாம். அதுவும் கர்மயோகமே. அதற்கப்பால் ஏதுமில்லை .

வெண்முரசில் என்  வாசிப்பின் திறவுகோல் மேற் கூறிய வரிகள்.

"இப்புவி தோன்றிய காலத்திலிருந்தே. இரண்டுக்குள்ளும் அனல் நிறைந்திருக்கிறது. அவற்றை ஒன்றை ஒன்று உரசி அனல் எழுப்பச் செய்தது அனலோனின் விழைவு மட்டுமே. என்னை அவன் இங்கே ஆணையிட்டு நிறுத்தியிருக்கிறான். இந்த ஊன், இதை உண்ணும் நான் அனைத்தும் அவன் திட்டங்களின் படி நிகழ்பவை” என்றான். ஆம், இந்தச் சொற்களும் அவ்வாறு எழுபவையே” என்று சுருதகீர்த்தி சொன்னான். சுதசோமன் உரக்க நகைத்து “ஐயமென்ன? அத்தனை சொற்களும் அனலில் எழும் பொறிகள் மட்டுமே. பிறிதொன்றுமல்ல” என்றான்"

- நூல் பதினைந்து – எழுதழல் – 34 - ஜெயமோகன்

No comments: