Monday, November 20, 2017

சிற்பக்கூடம் - தன்னை தான் உருவாக்கிக் கொள்வது சிற்பங்கள் மட்டுமல்ல - பகுதி 3 - நிறைவு

பார்த்துப் பார்த்து வெகு நாட்களாக பதியமிட்டதைப் போன்று பேணிய கூடு விலகும் நாள் வந்துவிட்டது. உருக்கி விட்ட உலோகம் படிந்ததும் கூட்டை அகற்றி விட்டு முழு உருவச்சிலையாக உருவாகி வெளிவருகிறார்கள் தெய்வங்கள்.
பின் அரம், உளி போன்ற சிறு சிறு கருவிகள் கொண்டு தேய்த்து, செதுக்கி, தங்களை முழுமையை நோக்கி சிற்பிகளின் கைகளின் மூலம் நகர்த்திக்கொள்கிறார்கள் கடவுளர்கள்.
நுணுக்கமான வேலைப்பாடுகள் முழுமை பெற்றதும் மெருகேற்றி உள்ளும் புறமும் பள பளக்க தயாராகிவிடுகிறார்கள் உற்சவ மூர்த்திகள்.
தன்னைத் தானே சமைத்துக் கொள்ளும் சிலைகளின் முன்னிலையில் அத்தனை கைகளும் கருவிகள் மட்டுமே.
இந்தப் பிறவியின் கூட்டிற்குள் ஒளிர்ந்து கொண்டிருக்கும் சக்திக்கு நம்மை ஒப்புக்கொடுப்பதைப் போல ஆயிரம் கஷ்ட நஷ்டங்களோடு பரம்பரையாக இந்த கலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் எத்தனையோ குடும்பங்களில் பிரபுவின் குடும்பமும் ஒன்று.
கும்பகோணத்துக்கு அருகிலிருக்கும் சுவாமிமலைக்கு பயணம் செய்பவர்கள் அங்கிருக்கும் ஏதாவது ஒரு சிற்பக்கூடத்துக்கு சென்று வாருங்கள் உள்ளும் புறமும் வெம்மை ஏறட்டும் பின்பொருநாள் குளிர்ந்து உறையலாம்.

Image may contain: 1 personNo automatic alt text available.No automatic alt text available.No automatic alt text available.Image may contain: 1 personImage may contain: 1 personNo automatic alt text available.Image may contain: one or more peopleNo automatic alt text available.No automatic alt text available.No automatic alt text available.No automatic alt text available.No automatic alt text available.Image may contain: 1 person, indoorImage may contain: 1 person

சிற்பக்கூடம் - தன்னை தான் உருவாக்கிக் கொள்வது சிற்பங்கள் மட்டுமல்ல - பகுதி 2

தொடர்ச்சி..
இத்தனை அழகான மெழுகு சிலை ஒரு கட்டத்தில் உருகி ஒழுகி மண்ணோடும் கலந்து மீண்டும் இறுகி களிமண்ணைப் போலாகும் என்று சொன்னதும் வாழ்க்கையெனும் வட்டம் கொஞ்சம் புரிந்தது.
இந்த மெழுகு சிலைகளின் மேல் வண்டல் மண் கலவையை முதலில் அதே கலைநயத்தோடு பூசுகிறார்கள், பின் அது காய்ந்தபின் அதன் மேலும் நல்ல அடர்வான சுடுமண் பூசி காயவைக்கிறார்கள். இப்பொழுது முழுவதும் மெழுகுசிலையோ அதன் உருவங்களோ அற்று அது ஒரு மண் பொதி போல் ஆகிறது. காய்ந்து இறுகி இருக்கும் அந்தப் போதிகளின் அடிப்பாகத்திலோ, மேல் பாகத்திலோ உருவங்களுக்குத் தக்கவாறு நேர்த்தியாக துளையிடுகிறார்கள்.
பின் இந்த மண் பொதிகளை நல்ல சூளை போன்ற அடுப்புகளில் வைத்து சூடு செய்ய ஒரு பதத்தில் உள்ளே இருந்த மெழுகுச் சிலைகள் அந்த வண்டல் மண்ணில் தன் அடையாளங்களை விட்டு விட்டு போட்டிருக்கும் ஓட்டைகள் வழியே வெளியே உருகி வழிகிறது.
நிலையென நாம் நினைத்திருக்கும் அத்தனையும் ஒரு நாள் கலைவது போல......
அடுத்தபடிக்கு தயாராகிறது அந்தக்கூடுகள்.
Image may contain: foodImage may contain: foodImage may contain: plant and outdoorNo automatic alt text available.No automatic alt text available.

மேலும் மேலுமென அக்னியின் வெம்மையை சரியாகத் தன்னுள் உள்வாங்குமளவுக்கு அந்தக்கூடுகள் ஒரு புறம் சூட்டில் கனன்று கொண்டிருக்க..
மறுபுறம் பித்தளையும், செம்பும், இன்னம் சில உலோகங்களையும் குவை/குகை யெனும் குடுவையில் இட்டு அது கிட்டத்தட்ட நீர்மையின் நிலையை எட்டும் வரை அனல் குழம்பாகக் கொதிக்க கொதிக்க மிகப் பெரும் இடுக்கிகளின் துணைகொண்டு அந்த வெம்மையில் கனிந்திருக்கும் அந்தக்கூடுகளுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்ற வெம்மையோடு வெம்மை சேற கடவுளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தன் உருவங்களுக்குள் ஒருங்கிக்கொள்கிறார்கள்.
நம்முள் தன்னை நிரப்பியிருக்கும் கடவுளர்கள், உருகி ஒழுகி அந்தக் கூடுகளுக்குள் தன்னை நிரப்பிக் கொள்கிறார்கள்.
கூடுகள் பாதுகாப்பானது தான் அருமையானதுதான், நமக்கென அனலும் வெப்பமும் தாங்கி நம்மோடு ஒட்டி உறவாடியவைதான் ஆனாலும் ஒரு நாள் விட்டு, வெட்டி விலகுவதே நியதி லௌகீக வாழ்விற்கு மட்டுமல்ல ஞான வாழ்விற்கும் அதுவே அடிப்படை.
ஏன் இப்போது இந்தக்கூட்டைப் பற்றிய விசாரம்...சொல்கிறேன் அடுத்த பதிவில்
Image may contain: one or more people and people standingImage may contain: outdoorImage may contain: one or more peopleNo automatic alt text available.

சிற்பக்கூடம் - தன்னை தான் உருவாக்கிக் கொள்வது சிற்பங்கள் மட்டுமல்ல - பகுதி 1

இது என்ன மெட்டீரியல்?? என்று பரவசமும் ஆர்வமுமாக அந்த காமாட்சி விக்கிரகத்தை நோக்கியபடி கேட்டேன் ஏனெனில் அது மரம் போலுமிருந்தது, உலோகம் போலவும் இருந்தது. "அது மெழுகு மாடல்ங்க" என்று சொன்ன நேரம் அவர் கையில் ஆஞ்சநேயர் தன்னை அழகுபடுத்திக் கொண்டிருந்தார். என்னால் கண்களை அந்த சிலையை விட்டு நகர்த்தவே முடியவில்லை. மீண்டும் கண் அகட்டாமல் பார்த்தபடி "ஓ இது மோல்டா இதுக்குள்ள தான் உலோகத்தை உருக்கி விடுவீங்களா?? என்ற என் அபத்தமான கேள்வியை கேட்டு பிரபு, அந்த சிற்பக்கூடத்தின் சிற்பி ஒரு நிமிடம் கையில் இருந்த ஆஞ்சநேயரை வைத்து விட்டு ஒரு சிலை எப்படி உருவாகிறது என்று விளக்கமாகச் சொல்லலானார்.
அது ஒரு சிலை உருவாகும் செயல்முறை மட்டுமல்ல என்று தோன்றியது.
It is a process/travel every soul goes thru in their given birth... Let me share the process with you.
கோவில்களிலோ, பூம்புகார் போன்ற பெரும் வர்த்தக நிலையங்களிலோ பெரிதும் சிறிதுமான உலோகச் சிலைகளைக் காணும் போது நம்முள் எழும் மிகுந்த குளிர்ச்சியான உணர்விற்கு நேர் எதிர்மறையான தட்ப வெப்பத்தில் இருந்தது உலோகங்களில் கடவுளர் மூர்த்தங்களைச் சிலை வடிக்கும் அந்தச் சிற்பக்கூடம்.
சுமார் ஆயிரம் சதுரடி ஆஸ்பெஸ்டாஸ் கூரையின் கீழ் நடராஜர், பிள்ளையார், பெருமாள், விதம்விதமான அம்மன், வீரசிவாஜி, அப்பர் பெருமான், என அத்தனை பேரும் ஒப்பனைகளேதுமற்று முழுமையாகவோ முழுமைக்கு முந்திய சில படி நிலைகளிலோ அங்காங்கு ஆசுவாசப்பட்டுக்கொண்டிருந்தார்கள். நம்முள் பலரும் கடந்துக்கொண்டிருக்கும் வாழ்வே என்னுள் ஒப்புமையாகத் தோன்றியது.
தேன்மெழுகும், குங்கிலியமும், ஒரு எண்ணையும் சில விகிதங்களில் ஒன்றாகக் கலந்து சூடு செய்ய ஒரே குழம்பாகி பின் குளிர்ந்து கெட்டியான களிமண் போன்ற பதத்தில் கிடைப்பது தான் அந்த மெழுகு.
நல்ல கெட்டியான பதத்தில் சிலைகளின் உருவங்களைச் செய்வதற்கும், கொஞ்சம் இளகிய பதத்தில் அந்த உருவங்களின் மேல் இருக்கும் அணிகலன்கள், ஆடை அலங்காரங்கள் செய்வதற்குமாக இரண்டு விதமான தரங்களில் இந்த மெழுகை உற்பத்தி செய்துகொள்ளுகிறார்கள்.
மிகவும் பொதுவான அளவு, மீண்டும் மீண்டும் செய்யும் சிலைகள் என்றால் அதற்கென சில மோல்டுகள் வைத்துள்ளார்கள் அதில் சூடாக ஊற்றி கட்டி வைத்து பின் பிரிக்க மெழுகு மாதிரிகள் கிடைத்து விடுகிறது.
ஆனால் நான் கண்டது போல் காமாட்சியோ, அப்பர் பெருமானோ அத்தனை வழமையான தேவை இல்லை என்பதால் அதன் மாதிரி உருவப் படத்தை வைத்துக் கொண்டு கை, கால், முகம், கழுத்து அணிகலன்கள், திருவாச்சி, பீடம் என்று ஒவ்வொன்றாகச் செய்து ஒன்றிணைத்து தெய்வத்தை கண்முன் ஒருக்குகிறார்கள்.
இளகவும், உருகவும், கலக்கவும் தயாராய் இருக்கும் மனதுதானே தன் அடுத்த படிகளுக்கு நகர முடிகிறது.
இன்னும் வரும்.......
Image may contain: 1 person, shoesImage may contain: one or more peopleImage may contain: shoesImage may contain: one or more peopleImage may contain: one or more people and indoorImage may contain: one or more peopleNo automatic alt text available.

Saturday, November 11, 2017

பிறந்த இடம் நோக்குதே - வீடு திரும்புதல்



ஒருவர் பிறந்தவீட்டில் இருந்து வெகு....தொலைவுக்கு சென்று வீடு திரும்பும் ஒரு காட்சியை இங்கு எண்ணிக் கொள்ளலாம்.
ஆஹா.. இந்தியாவின் தலை நகருக்கு வந்தாச்சு
ஆ..இந்த ட்ரெயினில்தான் தான் நாம் இன்னமும் இரண்டு நாட்களில் இந்தியாவின் தென்கோடியில் உள்ள என் கிராமத்துக்குச் செல்லப் போகிறேன்.
ஆஹா...மத்தியப்பிரதேசம் தாண்டியாச்சு, தெலுங்கானாவும் போயாச்சு, சென்னையும் தாண்டியாச்சு, திருச்சி போய், தூத்துக்குடி வந்தாச்சு. ஆத்தூர் பஸ்ஸில் ஏறியும் ஆச்சு. பஸ் ஸ்டாண்டில் இறங்கி வீட்டை அடைந்ததும் கிடைக்கும் நிம்மதிக்கும் மகிழ்வுக்கும் அளவுகோல் ஏது. ஆனாலும் இனியும் தொடரும்.
நாம் எப்பொழுதும் அமரும் இடத்தில் அமர்ந்த படி அந்திச் சூரியனை ரசித்து அம்மா கையால் சாப்பிட்டு நமது படுக்கையில் கண் மூடி சாயும் நொடியில் அடுத்த வேளை செய்யவேண்டிய வேலை நியாபகம் வரும் பாருங்கள். அதுதான் வீடு திரும்புதலின் புனிதக் கட்டம்.
வீடுதிரும்பியோருக்கும் செய்வதற்கு சில உளது. இதுவே வாழ்க்கை.
இதையே மெய்மை தேடலிலும் பொருத்திப் பாருங்கள். வீடு திரும்புதலின் படிகளும், வீடடைந்தபின் செய்வதற்கென உள்ள கர்மாக்களையும் எதிர்கொள்ளும் நிலையிதுவே. என்ன, எப்படி, எவ்வாறு அதுவும் அந்தந்த நொடியில் தோன்றும்.
#மையம்

Tuesday, November 7, 2017

குறியெதிர்ப்பை நீர துடைத்து - குறளின் மாற்று முகம்

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் 
குறியெதிர்ப்பை நீர துடைத்து.

இணையத்தில் கண்ட உரை. கிட்டத்தட்ட எல்ல உரைகளும் இதையொட்டியே அமைகிறது.

இல்லாதவர்க்கு வழங்குவதே ஈகைப் பண்பாகும். மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும்.

இந்தக் குறளை ஜெமோவின் குறளினிது உரையின் படி பார்க்கவேண்டும் என்று தோன்றியது.

அதன் படி நேற்றிலிருந்து இந்த ஒரு குறள் மட்டுமே உள்ளே ஓடிக்கொண்டிருந்தது.

இக்குறள் அறத்துப்பாலில், இல்லறவியலில், ஈகை எனும் அதிகாரத்தில் தொகுக்கப் பட்டுள்ளது. ஜெமோவின் ஆய்வின் கருத்துப் படி இந்த தொகுத்தல்கள் பிற்காலத்தில் நிகழ்ந்தவை. எனவே இதை அறத்துப் பாலில் மட்டும் வைத்துப் பார்க்கலாம்.

வறியார்க்கொன்றை ஈவதே ஈகை - தேவையான ஒருவர்க்கு கொடுப்பது அறம், இதை தேவையுள்ள இடத்தில் ஆற்றும் செயலாகக் கொண்டால் அதுவும் அறம்.

மற்றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து -

மற்றெல்லாம் - மற்ற எல்லா வினைகளும், அதாவது தேவையற்ற அனைத்து செயல்களும்(கர்மங்களும்) , இங்கே ஈகையை மட்டும் எனக் கொள்ளாதிருத்தல் வேண்டும்

குறியெதிர்ப்பை - எனும் சொல்லுக்கு கொடுத்த அளவே மீண்டும் வாங்கும் முறைமை என்ற பொருள் உள்ளது. எனவே நம்முடையை தத்துவப் பார்வையின் படி நாம் செய்யும் எல்லா வினைகளுக்கும் அதே விதமான எதிர்வினை உண்டு. எனவே இதை கர்மாவோடு தொடர்பு படுத்திக் கொள்ளலாம்.

நீரது உடைத்து - உன்னுடைய உடமையாகும்.

இப்பொழுது மொத்தமாக பொருள் கொண்டால்.

தேவை இருக்கும் இடத்தில் மட்டும் செயலாற்றுவதே அறம், மற்றெல்லா கர்மங்களும் எதிர்வினையையே தோற்றுவிக்கும்.

இதுக்கு பழந்தமிழ் ஆசான்களெல்லாம் வந்து அடிச்சா தாங்கிக்க வேண்டியதுதான் வேற வழி இல்ல.

ஆனால் அந்த உறையின் தாக்கம் மிக அதிகம் அதைப் பற்றி ஒரு தனித்த பதிவே எழுத வேண்டும்.

குறளின் மாற்று முகம்

கல்யாண வீடுகளில், அல்லது மிகப் பெரும் சமையல் கூடங்களில் இனிப்புக்கு என்று தனித்த மாஸ்டர் உண்டு. பெரும்பாலும் சமையல் செய்பவர்கள் அதைச் செய்வதில்லை. ஸ்வீட் மாஸ்டர், இது போலவே சில தனித்த பதார்த்தங்களுக்கான ஸ்பெஷாலிட்டி கலைஞர்கள் உண்டு. 

மேலும் ஒரு இலக்கிய வாதியைக் கொண்டு விளையாட்டையோ சமையலையோ அதன் நுணுக்கங்களை மைய்யப்படுத்தி எழுத வைத்தால் அவரால் முழுமையாக எழுத முடியாது. விளையாட்டு வல்லுனாரால் இலக்கியமும்.
இப்படி வரிசையாக சொல்லிக் கொண்டே போகலாம்.....

அதைப் போலத்தான் பழந்தமிழ் சித்தர் பாடல்களையும் அதற்கான பொழிப்புரைகளையும் வாசிக்கும் பொழுது இவைகள் பெரும்பாலும் தமிழுக்கு தமிழ் மொழி பெயர்ப்புக்களாகவே அணுகப் பட்டுள்ளது என்று தோன்றுகிறது. மிக மிக உண்மையான ஆன்மீக தளத்தில் அணுகி பொழிப்புரை செய்திருப்பது ஒரு சிலரே.

அதிலும் இணையத்தமிழின் உபயத்தில் பெரும்பாலான பாடல்கள் மிகவும் தவறாகவே பதம் பிரித்து எழுதப் படுகிறது. வாசிப்பதற்கு எளிமையாக இருக்க வேண்டும் என்ற காரணத்தால் பதம் பிரிக்கும் அனைவரும் அந்த பாடல்களின் உள்ளார்ந்த அனுபவம் அதனால் முற்றிலும் சிதைந்து போவதை அறிந்து கொள்வதில்லை.

திருக்குறளும் அது போன்றதொரு பெரும் பொக்கிஷம். முழுமையாக அந்த தளத்தில் நின்று பொருள் கண்ட பொழிப்புரையை நான் இன்னமும் காணவில்லை. அது ஒரு சமய நூலல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லப்பட்ட காரணத்தினாலேயே ஆன்மீகமாக குறள் அணுகப் படவில்லையோ என்று தோன்றுகிறது. சமணம் பேசும் ஆன்மீகம் மிகவும் ஆழமானது அதை அணுகி அறிவதென்பது பேரின்பம்


No automatic alt text available.

இல்வாழ்வான் யார் - குறளின் மறுபக்கம்

துறந்தார்க்குத் துவ்வா தவர்க்கு மிறந்தார்க்கு
மில்வாழ்வா னென்பான் றுணை.
துறந்தார் – 
1. இல் வாழ்க்கையை துறந்தார், பிரம்மசர்யத்தை மேற்கொண்டார், 2. சாதிவருண சமய குறிகளை, நெறிகளை துறந்தார்

துவ்வா தவர் – அனுபவிக்காதவர், துய்க்காதார் - 
1. இல்வாழ்க்கையில் இருந்தாலும் சிற்றின்பமாக அனுபவிக்காது இல்லற தர்மத்தில் வாழ்பவர்கள். 2. சாதி சமய நெறிகளை மிக முக்கியமாக கருதாதவர், கடை பிடிக்காதவர்

இறந்தார் - 
1. இந்த உடலின் இறப்பை எய்தியவர்,  2. சாதி சமய நெறிகளுக்கு முக்கியத்துவம் அளித்து இறந்தாரைப் போல் வாழ்பவர்

இல்வாழ்வான் என்பான் துணை – இந்த இடத்தில் என்பான் எனும் சொல்லே நமக்கு இக்குறளின் நுணுக்கங்களை ஆராய வழி வகுக்கிறது. இல்வாழ்வான் துணை என்று இருந்திருக்கலாம். அனால் இல்வாழ்வான் என்பான் துணை என்று சொல்வது இல்வாழ்கிறான் என்று சொல்பவனே துணை என்று பொருள் கொள்ள வேண்டும்.
இல்வாழ்வான் என்று சொல்லப்படுபவன் யார் – உள்ளே வாழ்பவன் எல்லோருள்ளும் வாழ்பவன் யார் அந்தப் பரம்பொருள் அவனே துணை.
இதை மற்றொரு கோணத்திலும் பொருள் கொள்ளலாம்.
ஒருவர் இந்த மூன்று நிலைகளில் எந்த நிலையில் வாழ்ந்தாலும் அவனுள் இருக்கும் பரம்பொருளின் நிலை மாறுவதில்லை எனவே எந்த நிலையிலும் முயன்றால் அவனைச் சென்றடைய தடை இல்லை.

Monday, November 6, 2017

பெண்ணின் பெருந்தக்க யாவுள - குறளின் மறுபக்கம்


பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும் 
திண்மையுண் டாகப் பெறின். - திருக்குறள் 

இவ்வுலகின் அனைத்து உயிர்களும் இப்பிரபஞ்ச முலத்தின் சிறு துளியே. கடலைச் சென்று சேரவேண்டிய மழைத்துளி போல், ஆறு குளங்களில் தங்கி கடலோடு சேர்ந்து பின் மீண்டும் மழைத்துளியாகி மண்ணில் விழ்வதொன்றே செயலென மீண்டும் மீண்டும் நிகழும் நிகழ்வுக்கும் இப்பிறப்பிற்கும் மிகப் பெரும் பேதமேதுமில்லை.

அதிலும் இப்பிரபஞ்சம் பெண்களுக்கென பெரும் கருணையை கையளித்திருக்கிறது உடல், மற்றும் உளக்கூறுகளின் படி பெண்மையின் இயல்பு ஞானத்தின் படிகளுக்கு மிக எளிதில் சென்று சேர்க்கும் வண்ணமே அமையப் பெற்றுளது. வாலை அன்னையின் பிடிகளை எளிதில் தளர்த்தி மயக்கங்களின் பாற்பட்டு மேலெழும்பி பராசக்தியென மூலத்தில் ஒன்றுவதற்கு பெண்மையின் இயல்பான கருணையும், அன்பும் தாய்மையும் பேருதவி செய்யும். அதன் காரணமாகவே பிற உயிர்கள் ஆண்டாண்டு காலமாக சாதகம் செய்தும் எட்டியிராத படி நிலைகளை யோகினிகள் மிக எளிய செயல்களின் மூலம் எட்டியிருக்கிறார்கள். இதுவே “பெண்ணின் பெருந்தக்க யாவுள” இதுவே பெண்ணுக்கு அளிக்கப் பட்டிருக்கும் பெருங்கொடை. ஆனால் அவள் “கற்பென்னும் தின்மையுன்டாகப் பெறின்” அல்லாது போனால் இந்த கொடைக்கான நோக்கம்  சிதைந்து போகிறது.

அது என்ன கற்பு, உடலொழுக்கம் பேணுதல் என்று மட்டும் கொள்ளத்தகாது. கற்பு என்பதற்கு “அடிப்படை நோக்கத்தை மீறாதிருத்தல்” என்றும் கொள்ளலாம். அதனாலேயே நட்புக்கும் கற்பு உண்டு என்றும். செய் நேர்த்தி விழையும் அனைத்து செயல்களுக்கும் பொருந்தும் ஒரு சொல், ஒரு செயல் என்றும் கருதப் படுகிறது.  அது  ஒரு விதத்தில்  ஒழுக்க நெறி. எது ஒழுக்கம்? என்று ஆராய்ந்தால் மூலத்தின் நோக்கம் சிதையாது வாழ்தல் ஒழுக்கம். இங்கு நாம் வந்த நோக்கம் மீண்டும் துளியென மழை மேகமாய் சென்று சேர்வதே. அதன் ஒழுக்கம் மாறாது நம்மில் இருத்திச் செயல் படுவோமேன்றால், அதாவது கற்பென்னும் திண்மை உண்டாகப் பெறின் என்றால் ஞானத்தின் வாயில் அத்தனை உயிர்களுக்கும் எளிதாகக் கடக்கக் கூடிய ஒன்றே.

இந்தக் கற்பென்னும் விழுமியத்தை கடை பிடிக்க முடியாது ஒரு பெண்ணை கட்டும் மூலக் கயிறுகள் அவளது கொடைகளே. அதாவது அவளது பெண்மையும், பிறப்பிலிருந்து கொள்ளும் கருணையும், மென்மையும்,  தாய்மையும்  எவ்வாறு ஞானத்தை அடையத் தூண்டுகோலாக, ஊன்றுகோலாக ஆகிறதோ,  அதுவே பின்னர் தடைக் கற்களாகவும் ஆகிறது. இந்தப் பேருண்மையை புரிந்து கொள்ளும் ஒவ்வொரு பெண்ணும் ஞானத்தின் ஊன்று கோலை இருகப் பற்றியபடி இந்தக் கட்டுக்களை கடந்து,  வந்த நோக்கம் நிறைவேறும் திண்மை கொண்டிருந்தால் அவளே இப் பிரபஞ்சத்தின் பெருந்தெய்வம்.



#குறளின்_மறுபக்கம்