Tuesday, November 7, 2017

குறளின் மாற்று முகம்

கல்யாண வீடுகளில், அல்லது மிகப் பெரும் சமையல் கூடங்களில் இனிப்புக்கு என்று தனித்த மாஸ்டர் உண்டு. பெரும்பாலும் சமையல் செய்பவர்கள் அதைச் செய்வதில்லை. ஸ்வீட் மாஸ்டர், இது போலவே சில தனித்த பதார்த்தங்களுக்கான ஸ்பெஷாலிட்டி கலைஞர்கள் உண்டு. 

மேலும் ஒரு இலக்கிய வாதியைக் கொண்டு விளையாட்டையோ சமையலையோ அதன் நுணுக்கங்களை மைய்யப்படுத்தி எழுத வைத்தால் அவரால் முழுமையாக எழுத முடியாது. விளையாட்டு வல்லுனாரால் இலக்கியமும்.
இப்படி வரிசையாக சொல்லிக் கொண்டே போகலாம்.....

அதைப் போலத்தான் பழந்தமிழ் சித்தர் பாடல்களையும் அதற்கான பொழிப்புரைகளையும் வாசிக்கும் பொழுது இவைகள் பெரும்பாலும் தமிழுக்கு தமிழ் மொழி பெயர்ப்புக்களாகவே அணுகப் பட்டுள்ளது என்று தோன்றுகிறது. மிக மிக உண்மையான ஆன்மீக தளத்தில் அணுகி பொழிப்புரை செய்திருப்பது ஒரு சிலரே.

அதிலும் இணையத்தமிழின் உபயத்தில் பெரும்பாலான பாடல்கள் மிகவும் தவறாகவே பதம் பிரித்து எழுதப் படுகிறது. வாசிப்பதற்கு எளிமையாக இருக்க வேண்டும் என்ற காரணத்தால் பதம் பிரிக்கும் அனைவரும் அந்த பாடல்களின் உள்ளார்ந்த அனுபவம் அதனால் முற்றிலும் சிதைந்து போவதை அறிந்து கொள்வதில்லை.

திருக்குறளும் அது போன்றதொரு பெரும் பொக்கிஷம். முழுமையாக அந்த தளத்தில் நின்று பொருள் கண்ட பொழிப்புரையை நான் இன்னமும் காணவில்லை. அது ஒரு சமய நூலல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லப்பட்ட காரணத்தினாலேயே ஆன்மீகமாக குறள் அணுகப் படவில்லையோ என்று தோன்றுகிறது. சமணம் பேசும் ஆன்மீகம் மிகவும் ஆழமானது அதை அணுகி அறிவதென்பது பேரின்பம்


No automatic alt text available.

No comments: