Saturday, November 11, 2017

பிறந்த இடம் நோக்குதே - வீடு திரும்புதல்



ஒருவர் பிறந்தவீட்டில் இருந்து வெகு....தொலைவுக்கு சென்று வீடு திரும்பும் ஒரு காட்சியை இங்கு எண்ணிக் கொள்ளலாம்.
ஆஹா.. இந்தியாவின் தலை நகருக்கு வந்தாச்சு
ஆ..இந்த ட்ரெயினில்தான் தான் நாம் இன்னமும் இரண்டு நாட்களில் இந்தியாவின் தென்கோடியில் உள்ள என் கிராமத்துக்குச் செல்லப் போகிறேன்.
ஆஹா...மத்தியப்பிரதேசம் தாண்டியாச்சு, தெலுங்கானாவும் போயாச்சு, சென்னையும் தாண்டியாச்சு, திருச்சி போய், தூத்துக்குடி வந்தாச்சு. ஆத்தூர் பஸ்ஸில் ஏறியும் ஆச்சு. பஸ் ஸ்டாண்டில் இறங்கி வீட்டை அடைந்ததும் கிடைக்கும் நிம்மதிக்கும் மகிழ்வுக்கும் அளவுகோல் ஏது. ஆனாலும் இனியும் தொடரும்.
நாம் எப்பொழுதும் அமரும் இடத்தில் அமர்ந்த படி அந்திச் சூரியனை ரசித்து அம்மா கையால் சாப்பிட்டு நமது படுக்கையில் கண் மூடி சாயும் நொடியில் அடுத்த வேளை செய்யவேண்டிய வேலை நியாபகம் வரும் பாருங்கள். அதுதான் வீடு திரும்புதலின் புனிதக் கட்டம்.
வீடுதிரும்பியோருக்கும் செய்வதற்கு சில உளது. இதுவே வாழ்க்கை.
இதையே மெய்மை தேடலிலும் பொருத்திப் பாருங்கள். வீடு திரும்புதலின் படிகளும், வீடடைந்தபின் செய்வதற்கென உள்ள கர்மாக்களையும் எதிர்கொள்ளும் நிலையிதுவே. என்ன, எப்படி, எவ்வாறு அதுவும் அந்தந்த நொடியில் தோன்றும்.
#மையம்

No comments: