Monday, June 15, 2009
முகமூடிக்கவிதைகள் - 8
ஆணுக்கான அடையாளமாய்
காமத்தையும்
பெண்மையின் குறியீடாய்
காதலையும்
சொல்லியாயிற்று
எதிரெதிர் துருவங்கள்
ஈர்க்குமென்பது மாறி
இணையெதிர் துருவங்களுக்கு
நிரூபிப்பதற்கும்
என்றாயிற்று
பொய்மையும் வாய்மையிடத்து
முகமூடிகளின் வாழ்க்கையில்
நன்மை பயக்குமெனில்....
Friday, June 5, 2009
தொலைந்து போவது பற்றி
தொலைந்து போவது பற்றி
அதிகம் தோன்றுவதுண்டு
அலுவலகம் வந்து
திரும்பாமல் பொகலாம்
நடந்து போகும் பாதையில்
திரும்பியும் போய்
தொலைந்து போகலாம்
பேச்சறவமற்று
அரையிருட்டில்
அமர்ந்தும் தொலையலாம்
அதிர்ந்து தொலைக்கும்
தொல்லைபேசியினை
ஒளிரமட்டும் வைத்துவிட்டும்
தொலைந்து போகலாம்
நாம்
தொலைந்து போனதை
குறைந்த பட்சம்
நாமாவது
அறிந்துகொண்டு
மீண்டும் வெளிக்கிடலாம்
தொலைந்து போவதை
மீண்டும் ஒரு நாள்
தள்ளிப்போடலாம்...
இப்போதிருக்கும் வணிகச்சூழலில் தொடர்ந்து நான் செய்துகொண்டிருந்த தொழிலைச்செய்து வருவது கொஞ்சம் மூச்சு முட்ட ஆரம்பித்தது. சிறிதே மூச்சு வாங்கிக்கொள்ளலாம் என்று ஒரு நன்னாளில் பணியாளர்களுக்கு நானே சில நல்ல நிறுவணங்களில் அமர்வதற்கான ஆயத்தங்களை செய்து தந்துவிட்டு தற்காலிகமாக மங்களம் போர்டு மாட்டிவிட்டேன்.
சும்மாயிருக்க முடியுமா??? நானும் ஒரு பன்னாட்டு நிறுவணத்தில் பணியெடுத்து அமர்ந்தும் விட்டேன். அதனால் வழக்கமான இணையநேரம் இருந்தாலும் தனிப்பட்ட வலை வாசிப்புகள் முடியவில்லை.. வார இறுதி நாட்களில் மட்டுமே முடியுமென்று எண்ணுகிறேன்...
மக்களே மறந்துடாதீங்க... மீண்டு வருவேன்... மீண்டும் வருவேன்...
அதிகம் தோன்றுவதுண்டு
அலுவலகம் வந்து
திரும்பாமல் பொகலாம்
நடந்து போகும் பாதையில்
திரும்பியும் போய்
தொலைந்து போகலாம்
பேச்சறவமற்று
அரையிருட்டில்
அமர்ந்தும் தொலையலாம்
அதிர்ந்து தொலைக்கும்
தொல்லைபேசியினை
ஒளிரமட்டும் வைத்துவிட்டும்
தொலைந்து போகலாம்
நாம்
தொலைந்து போனதை
குறைந்த பட்சம்
நாமாவது
அறிந்துகொண்டு
மீண்டும் வெளிக்கிடலாம்
தொலைந்து போவதை
மீண்டும் ஒரு நாள்
தள்ளிப்போடலாம்...
இப்போதிருக்கும் வணிகச்சூழலில் தொடர்ந்து நான் செய்துகொண்டிருந்த தொழிலைச்செய்து வருவது கொஞ்சம் மூச்சு முட்ட ஆரம்பித்தது. சிறிதே மூச்சு வாங்கிக்கொள்ளலாம் என்று ஒரு நன்னாளில் பணியாளர்களுக்கு நானே சில நல்ல நிறுவணங்களில் அமர்வதற்கான ஆயத்தங்களை செய்து தந்துவிட்டு தற்காலிகமாக மங்களம் போர்டு மாட்டிவிட்டேன்.
சும்மாயிருக்க முடியுமா??? நானும் ஒரு பன்னாட்டு நிறுவணத்தில் பணியெடுத்து அமர்ந்தும் விட்டேன். அதனால் வழக்கமான இணையநேரம் இருந்தாலும் தனிப்பட்ட வலை வாசிப்புகள் முடியவில்லை.. வார இறுதி நாட்களில் மட்டுமே முடியுமென்று எண்ணுகிறேன்...
மக்களே மறந்துடாதீங்க... மீண்டு வருவேன்... மீண்டும் வருவேன்...
Subscribe to:
Posts (Atom)