Tuesday, May 19, 2015

நடுநிலைவாதமும் நாகரீகமும்

ஒரு விஷயம் நடக்கும் பொழுது அல்லது அறிந்து கொள்ள நேரும்பொழுது நம்முடையை உள்மனசின் கூற்றுப்படி இது நல்லது கெட்டது என்று இரண்டாகப் பிரிப்போம்.
 
நல்லதை எப்படி வேடுமானாலும் ட்ரீட் பண்ணலாம் – எழுதலாம் எழுதாமல் விடலாம் அவரவர்கள் இஷ்டம்.
ஆனால் கெட்டதை எழுதாமல் விட்டுவிடுவோம். அது மட்டுமே நமக்கான தெரிவாக இருக்கவேண்டும். அப்பொழுதுதான் அதைக் குறித்த மேலதிக ஆர்வத்தை நாம் கிளறாமல் இருக்க உதவும்.


சமிபத்திய சில கெட்டதுகளை எடுத்துக் கொள்ளலாம், அது என்ன வென்று பட்டியல் போட்டு நானும் அந்த வட்டத்துக்கு பங்களிக்கும் ஆர்வமில்லை. ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் உள்ள செய்தியை அதைக் குறித்து நடுநிலையாகவோ, எதிர்த்தோ ஆதரித்தோ கொந்தளித்தோ பேசுவதின் மூலம் நாம் இன்னமும் அதைக்குறித்து அறிந்து கொள்ளாத மேலதிகப் பேருக்கு அந்த செய்தியை கொண்டு செல்கிறோம் என்று புரிதில் அவசியம்.

வாசிக்கும் ஒரு சிலர் அதைக் கடந்து செல்லலாம் மேலும் சிலர் அது என்ன என்று அறிந்து கொள்ள ஆர்வம் காட்டலாம். அறிந்த பின் சரி/தவறென்று அவர்கள் வட்டத்தில் அவர்கள் விவாதிக்கலாம். ஆக நாம் அந்த செய்தியை கடத்தும் காரணிகளில் ஒன்றாகிறோம்.
இதுவும் வணிகப் பத்திரிகைகள் செய்யும் மலிவான விளம்பர உத்திகளில் ஒன்றுதான். நான் மிகவும் விரும்பும் மதிக்கும் சில பதிவர்கள் கூட இத்தகைய அறச்சீற்றத்திற்கு ஆள்படுவதைக் காணும் பொது இதைச் சொல்லத் தோன்றியது.

சமுகத்தில் நடக்கூடிய இத்தகைய வளர்சிதை மாற்றங்கள் தவிர்க்க முடியாதது அவரவர்கள் தங்களுக்குத் தெரிந்தபடி அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்வார்கள் இதில் நம் பங்கு ஏதுமில்லை unless we are part of those incident.

இத்தகைய விஷயங்களைத் தொடும் முன் இந்த எழுத்து அந்தப் பிரச்சனையின் மையப்புள்ளியை ஒரு நெல் முனையளவாவது நல்லதை நோக்கி நகற்ற கூடிய ஆற்றல் உள்ளதாக இருந்தால் மட்டுமே எழுதலாம் என்பது ஏன் கருத்து.

இல்லை சமூக விழிப்புணர்வு, நான்தான் மொரேல் டீச்சர், அவலங்களைக் குறித்து பேசியே ஆகவேண்டும் இல்லன்னா நீ சுயநலவாதி இப்படில்லாம் சொல்றிங்கன்ன இது உங்களுக்கான பதிவல்ல நட்புகளே (சேது - விக்ரம் ஸ்டைல் மனசுள் வந்தது smile emoticon ).

No comments: