Tuesday, May 19, 2015

மரணம்

சிவப்பும் மஞ்சளும் வெள்ளையும் பச்சையுமாய் வழியெங்கும் நாரோடும் இன்றியும் இறைந்து கிடக்கிறது பூக்கள்.

தள்ளாடியபடி நடமிட்டும் நடந்தும் செல்லும் பல ஜோடிக்கால்கள்.
தாளம் தப்பியும் தவறாதும் ஒலிக்கும் தாரை தப்பட்டைகள்.
...
இவைநடுவே அசையும் பல்லக்கில் சலனமற்றுச் செல்கிறது உடல் ...
வாழ்வின் அத்தனை சூத்திரங்களையும் சொல்லாமல் சொல்லியபடி.

No comments: