Thursday, May 21, 2015

முரண் உணர்வுகள் - முகமூடிக்கவிதைகள்

தர்க்கங்களற்று சிறு குழந்தையாய்
இருந்திருக்கலாம் - அல்லாது
குழந்தமையை தொலைக்காது
உண்டு உறங்கி களித்து அன்பு செய்து
வாழ்ந்திருந்திருக்கலாம் - நாமோ

அத்தனையும் தொலைத்து விட்டு
நிணமும் இரணமும் மனதில் ஏந்திய மாக்களாய் வாழ தலைப் பட்டுவிட்டோம்...இங்கனமே வாழ்ந்து வீழ்வோமா இல்லை
தெளிந்து விலகுவோமா..

தர்க்கங்களின் கரம் பற்றி நாளும் நடக்கிறேன் வாழ்வின் முரண்களை உணர்ந்த்படி !!!

No comments: