Tuesday, May 19, 2015

வாசிப்பு - விகசிப்புகள்

"+++“சிந்தனையை தேவையில்லை என்று சொல்வது எப்படி? அவை நிகழ்ந்துகொண்டேதான் இருக்கும். இந்த மணல்காற்றைப்போல. கண்ணுக்குப்பட்ட அனைத்துடனும் மோதிக்கொண்டிருக்கும். ஆனால் மெய்மை என்பது அவற்றால் தீண்டப்படுவதா என்றுதான் எனக்கு ஐயமாக இருக்கிறது?” “அவை பொய் என்கிறீர்களா?” என்று இளநாகன் கேட்டான்.
“பொய் என்று சொல்லமாட்டேன். மெய்யின் துளிகள் அவை. ஒரு துளி மெய் கையில் கிடைத்ததும் மானுடர் குதித்துக்கொண்டாட்டமிடுகிறார்கள். அதைக்கொண்டு எஞ்சிய மெய்யை அறிந்துவிடலாமென எண்ணுகிறார்கள். ஆனால் எஞ்சிய மெய் அதற்கு மாற்றானதாகவே எதிரே வருகிறது. எனவே எஞ்சியவற்றை மறுப்பதில் ஈடுபடுகிறார்க்ள். அவர்களின் ஞானம் தேங்கி அகங்காரம் பேருருவம்கொள்ளத் தொடங்குகிறது” என்றார் அருணர். “மெய்மை என்பது மாற்றிலாததாக, முழுமையானதாக இருக்கும். அதை அறிந்தவனுக்கு விவாதிக்க ஏதுமிருக்காது என்றே எண்ணுகிறேன்.”+++++++++


வெண்முரசு - வண்ணக்கடல் - ஜெயமோகன்

எதை நெஞ்சிலிருத்த மனம் தவிப்புக் கொள்கிறதே அதுவே சத்தியம். எந்த வார்த்தைகளை எழுத்தெழுத்தாக மென்று விழுங்கும் பொது மனம் விகசித்து தவித்தெழுகிறதோ அதுவே கல்வி. எதை மனம் கேள்விகளற்று உள்வாங்கிக் கொண்டு கண் நிறைக்க தடுமாறுகிறதோ அதுவே நல்லூழ் உணர்த்தும் வாழ்வு.
இந்த உணர்வுகளை நான் இந்த வரிகளில் கண்டுகொண்டேன் என்று சொன்னால் மிகையாகாது.
+++++++++++++++++++++++++++...
வெண்முரசு - நூல் ஆறு – வெண்முகில் நகரம் – 41 - by ஜெயமோகன்


அவனுடைய திகைத்த முகத்தை நோக்கி சிரித்தபடி “உமது வியப்பு புரிகிறது. இங்குள்ளவை அனைத்தும் நான் இயற்றுபவை என எண்ணுகிறார்கள். என் பெயர்சொல்லி செய்யப்படுபவை அனைத்திலும் நான் உள்ளேன் என்பது உண்மை. ஆனால் அச்செயல்களே நான் என்பவன் என்னை வந்தடைவதேயில்லை” என்றான் கிருஷ்ணன்.
++++++++++++++++++++++++++++++++++=

 

No comments: