Tuesday, May 19, 2015

கேள்விகள்

நேத்து தியேட்டர்ல நடுவுல தான் சீட் கிடைச்சது. நானும் ஸ்ரீயும் தாங்கறதால வேற வழியில்லை ஒரு பக்கம் ஸ்ரீ மறுபக்கம் வேற ஒரு ஆளு.
அவர் ரைட் ராயலா சீட்டோட ரெண்டு கைப்பிடிலேயும் முழங்கையை ஊனிக்கிட்டு ரொம்ப சகஜமா படம் பாத்துகிட்டிருக்காரு. பக்கத்துல ஒரு அயலாள் இருக்காங்களே அவங்க எப்படி கை வைப்பாங்க ஒரு சென்ஸும் இல்ல. நான் ரொம்ப அடக்கமா கையை ஒடுக்கிட்டு இருக்க வேண்டியதாப்போச்சு. இவ்ளோத்துக்கும் நடுத்தர வயசு ஆள்தான் பார்க்க ரொம்ப ஜெண்டிலா பொறுப்பாத்தான் இருந்தாரு.
படம் பாக்கற ஸ்வாரஸயத்துல நான் தான் ரெண்டுதரம் கையை இடிச்சுட்டு சாரி சொன்னேன். அவரு கண்டுக்கவேயில்லை.

இடைவேளைக்கு அப்புறம் அவரு வரதுக்கு முன்னாடி நான் கையை வைச்சுகிட்டேன். ஒன்னும் சொல்லலை அமைதியா உக்காந்துட்டாரு. ஆனா எனக்குதான் ஒரே கான்ஸிஷியஸா இருந்தது கொஞ்ச நேரத்துல கையை எடுத்துட்டேன் அவரு ரொம்ப சரிங்கற மாதிரி படம் முடிய வரைக்கும் கைப்பிடில ஊனின முழங்கையை எடுக்கவேயில்லை.

நான் தப்பா அவரு தப்பா????

No comments: