Tuesday, May 19, 2015

பயணம் - இரவின் அழகு

அலையலையாய் நெளிந்து நீள்கிறது இருட்டு. இடையிடயே நெய்யப்பட்ட ஜர்தோசிக்கற்களாய் வெண்குழல் விளக்குகள்.

இந்த அழகைக் கிழித்தபடி என்னோடு முன்னும் பின்னும் எதிருமாய் பளிச்சென பல்காட்டிச்செல்லும் இரண்டு மூன்று நான்கு சக்கரங்கள்.

வாழ்வின் தவிர்க்க முடியா அவலங்களை நினைவுறுத்துகிறது மங்கிய வெளிச்சத்தில் புன்னகைக்கும் சாலைகள்

இருளையும் பகலையும் ஒன்று போல் உணர்ந்தபடி தனித்திருக்கும் நெடுஞ்சாலையோர மரங்களில் கூட்டமாய் இரைந்தபடி கூடடையும் புள்ளினம். நம் மன எண்ணங்களைப் போல

நீண்ட நெடுஞ்சாலைகளின் அழைப்பை மறுதலிக்க முடிவதேயில்லை. நாடோடிகளின் மனதை ஒத்து சாலைகளில் கால் பதிக்க காரணங்களைத் தேடியலையும் மனதையும் மறைக்க வேண்டிய தேவையற்று ஒப்புக்கொள்வதில் இருக்கும் நேர்மையைக் கொண்டு வாழ்வை பிணைத்திருக்கும் சங்கிலிகளின் கண்ணிகளை என்னால் குறைத்துக் கொள்ள முடிகிறது. smile emoticon

No comments: