Sunday, May 14, 2017

Entropy Vs Enlightenment – பகுதி 4

 (நிறைவுப் பகுதி - ஒரு வழியா முடிச்சிட்டேன் :) )
அந்த மரத்துண்டு கையில் இருந்து கிழே விழும் பொழுது ஏதேனும் தடை ஏற்பட்டு இடையில் ஒரு தளத்தில் தங்க நேரும் பொழுது சில சமயம் அது குவாண்டம் டனலிங் (Quantum Tunneling) கான்செப்ட் படி சுற்றி இருக்கும் ஆற்றல் சக்தியை பயன் படுத்திக் கொள்வதன் மூலம் தனது இருப்பைச் சென்று அடைகிறது. அவ்வாறு செயலாற்றும் பொழுது அதன் எடையற்ற தன்மையே இந்த டனலிங் முயற்சியின் முதல் காரணி.
இதில் மரக்கட்டைக்குப் பதில் பந்து ஒன்றை உருவகப் படுத்திக் கொள்வோம் என்றால் இன்னமும் இலகுவாக விளங்கிக் கொள்ள ஏதுவாக இருக்கும் -( a ball which is lacking the energy to penetrate a hurdle will become still. However In quantum mechanics, these particles can, with a very small probability, tunnel to the other side, thus crossing the barrier. Here, the "ball" could, in a sense, borrow energy from its surroundings to tunnel through the obstacle)
இப்பொழுது ஞானமடைதல் (enlightenment) என்ற நிலையில் நாம் எடையற்று இந்த உடலுக்கும் ஆன்மாவிற்குமான தொடர்புகளை முழுவதும் அறிந்து விலகும் முயற்சியில் உண்டாகும் தடைகளை இந்த பிரபஞ்ச சக்தியை உள்வாங்கிக் கொள்வதன் மூலமாக தாண்டி பிரபஞ்சத்தின் இருப்பினோடு ஒன்றிணைந்து விடுகிறோம்.
அப்பொழுதும் இந்த இருப்பு உள்ளது அனால் இந்த பிரபஞ்சத்தினோடு கலந்த ஒத்திசைவாக எந்த எதிர்வினையும் ஆற்றாத நிலைக்குச் சென்று விடுகிறது.
எனவே இருக்கிறது... ஆனால் இல்லை, அதாவது ஆன்மா தன் எண்ட்ரோபி நிலையை அடைந்து விடுகிறது.
அறிவியலாளருக்கு அது அறிவியல் ஆன்மீகர்களுக்கு அது ஆன்மீகம் அவ்வளவே.

2 comments:

திவாண்ணா said...

நல்ல சிந்தனைகள்!

திவாண்ணா said...

நல்ல சிந்தனைகள்!