Sunday, May 14, 2017

Entropy Vs Enlightenment - பகுதி - 1

பெரும்பாலும் எங்கள் வீட்டில் அம்மா மகன்களுக்குள்ளான உரையாடலில் ஆன்மீக அறிவியல் விசாராங்கள் அதிகம் இருக்கும். அவர்கள் அறிவியலாக அறிந்து கொண்டதை பகிரும்போது நான் அதை ஆன்மீகப் பார்வையில் விளக்குவேன். சிலசமயம் அவர்களே அதை ஆன்மீகப் பார்வையில் ஒப்புமைப் படுத்தி என்னிடம் கொண்டு வருவார்கள்.
இன்றும் அதுபோல நித்தா ஒரு வார்த்தைக்கான ஒப்புமையோடு வந்தான். அவன் அறிவியல் சொல்ல நான் ஆன்மீகம் சொல்ல பேசிப் பேசி ஒரு நிலையை அடைந்தோம்.
அந்த அறிவியல வார்த்தை Entropy. அதை  Enlightenment உடன் ஒப்புமைப் படுத்தி ஒரு விசாரம்.
எண்ட்ரோபி என்றால் இயற்பியல் பிராகாரம் “ a thermodynamic quantity representing the unavailability of a system's thermal energy for conversion into mechanical work, often interpreted as the degree of disorder or randomness in the system” இப்படித்தான் சொல்கிறது
அதாவது ஒரு பொருள் தனது செயல்படக்கூடிய ஆற்றல் சக்தியை விடுப்பதன் மூலமாக அடுத்து இயங்குவதற்கான நிலையற்று ஒரு பொருளாக தங்கி விடுகிறது. As per quantum physics, every body has to reach its ground state or vacuum state or ultimate resting stage. அதாவது ஒவ்வொரு பொருளும் தன்னுடைய சரிஇயல்பு நிலைக்கு, அதன் கடைசி இருப்பு நிலைக்கு சென்றாக வேண்டும்.
இன்னமும் சொல்லப் போனால் இந்த உடலின் பிறப்பு என்பது இறப்பாக மாறும் பொழுது அது எண்ட்ரோபி என்று சொல்லலாம். அதாவது உடல் இருக்கிறது ஆனால் அதனால் இயங்க முடியாது. எனவே எல்லா உயிர்களும் பிறப்பு இறப்பு சுழலில் ஒரு கட்டத்தில் என்ட்ரோபியை அடைகிறது. இது அறிவியல். இப்பொழுது ஆன்மீகப் பார்வைக்குச் செல்வோம்.

தொடரும்....

No comments: