Sunday, February 25, 2018

எண்ண அலைகள் - ஆன்ம அரசியல் - 1

பொதுவாக இன்றைய உலகில் நாம் இரண்டு அடிப்படைகளுக்குள் ஆட்பட்டு விடுகிறோம். அது ஆத்திகம், நாத்திகம்.
ஆத்தீகம் என்பது இறை நம்பிக்கையை அடிப்படையாகவும், நாத்தீகம் என்பதை இறை மறுப்பு கொள்கையை அடிப்படையாகவும் கொண்டு நாம் கையாள்கிறோம்.
ஆத்திகம் பற்றி பேசுகையில் கடவுள் எனும் தன்மையின் முழு அதிகாரத்தையும், ஆளுமையையும் ஒப்புக் கொண்டு இயங்க முற்படுகிறோம்.
நாத்திகத்தைப் பற்றிப் பேசும் பொழுது இங்கு கடவுள் எனும் தன்மையை முழுவதுமாக புறக்கணித்து விட்டு நமது அறிவுசார்ந்தும், சிந்தனா வாதத்தின், அடிப்படையிலும் விஷயங்களை புரிந்து கொள்ள அல்லது செயல்படுத்த முனைகிறோம்.
இரண்டுமே சரியா, இல்லை இரண்டுமே தவறா, மாற்றுப் பார்வை என்ன?? இதன் பல்வேறு கோணங்கள் என்ன?? என்பதைப் பற்றி ஆராய வேண்டியது இன்றைய கால கட்டத்தின் மிக முக்கியமான அடிப்படை தேவை.
இதைப் பற்றி மேலும் பேசுவோம்

No comments: