Thursday, September 11, 2014

எவ்ளோ பெரிய நிம்மதி...

எந்த ஒரு விஷயத்தையும் ஆழ்ந்து அனுபவிக்கும்  போதே அது குறித்த பார்வையும் விமர்சனமும் எனக்குள்ளேயே  துவங்கி விடும். சில சமயம் அந்த விஷயங்களில் இருந்து என் முயற்சியில் வெளி வருவேன் சில சமயம் காக்கை உட்கார பனம் பழம் விழுவது போல் தானாகவே நடக்கும். சமீபத்தில் நடந்த இரண்டு விஷயங்கள்.
 
ஒன்று  - என்னுடைய விண்டோஸ் போனில் ஒரு வசதி, பேஸ் புக் அப்டேட் எல்லாம் அதற்குள் போகாமலே பார்த்து விட முடியும். என் பக்கத்திற்கு வரும் லைக், கமன்ட் எல்லாம் தனியாக மீ என்ற பக்கத்திலும்  எல்லா பதிவுகளும் பீப்புள் என்ற பக்கத்திலும் வந்து விடும்.  நான் பேஸ்புக் பக்கத்திற்கு வராமலே இதையெல்லாம் பார்த்து விடமுடியும். அதிலும் இந்த பகுதிகள் குறைந்த சிக்னல் இருந்தால் கூட வெகு எளிதில் லோட் ஆகிவிடும். நாங்கள் எல்லாம் ஆரம்ப கால கணணி பயன்பாட்டாளர்கள் என்பதால் டாஸ் பேஸ் லினக்ஸ் பேஸ் போன்ற அவுட்புட் மிகவும் பிடிக்கும்.  இதனால் கை சும்மாவே இருக்காது, எப்பொழுது பார்த்தாலும் போனை புரட்டியபடியே இருக்கும். ஒரு கட்டத்தில் எனக்கே என் மீது விமர்சனம் வர ஆரம்பித்தது.  அப்போது தான் வந்தது ஒரு விடிவு காலம்  சமீபத்திய விண்டோஸ் அப்டேட் செய்ததில் இந்த வசதியை எடுத்து விட்டு நேரடியாக பேஸ்புக் அப்ளிகேஷனுக்கு தொடர்பு கொடுத்து விட்டார்கள். இந்த இன்டர்பேஸ் முறையில் நோட்டிபிகேஷன் வந்து அதைத்  திறந்தால் அது நேரேடியாக நம் எப்.பி பக்கத்திற்கு எடுத்துச் சென்றுவிடும் ஆனால் சிக்னல் குறைவாக இருந்தால் எப்.பி பக்கங்கள் ஒப்பன் ஆக தாமதமாகும்  இது கொஞ்சம் எரிச்சல் ஊட்டுவதால் போனை உருட்டுவது கொஞ்சம்.. கொஞ்சம்தான்  குறைந்துள்ளது. ஒரு பக்கம் சந்தோஷம் மறு பக்கம் சிறு அசௌகரியமாக உணர்ந்தாலும் முள் கொஞ்சம் குறைந்த உணர்வு.
இரண்டாவது சனிக்கிழமை காலை ஒன்பது மணி முதல் பதினொன்றரை மணி வரை ஏசியா நெட்டில் வரும் மகாபாரத தொடர். அடுத்த வாரம் நாம் தமிழில் பார்க்கப்போகும் பகுதிகள் மொத்தமும் முதல் வாரமே இங்கு முடிந்து விடும்.  எனக்கு மலையாளம் மொழி மிகவும் பிடிக்கும் என்பதாலும் சில சமயம் வார நாட்களில் அலுவல் முடிந்து ஏழு   மணிக்கு முன் வீடு திரும்ப தாமதமாகிவிடும் என்பதாலும் தவறாமல் இந்த சனிக்கிழமை தொடரை பார்த்து விடுவதுண்டு. ஆனால் இப்படி இரண்டரை மணி நேரம் டீவி முன்னாடி கழிப்பது எனக்குள்ளேயே சில வாரங்களாக குற்ற உணர்வை தந்து கொண்டிருந்தது. வந்தது விடி மோசனம். போன வாரம் ஓணத்தை முன்னிட்டு மற்ற நிகழ்ச்சிகள் இருந்ததால் இந்த பகுதி கிடையாது. இதன் படி அவர்கள் நமக்கு ஒரு வாரம் பின் தங்கி விட்டார்கள் எனவே இனிமேல் பார்க்க வேண்டிய தேவை இல்லை... எவ்ளோ பெரிய நிம்மதி....

1 comment:

Kavinaya said...

:) ஆமாம், நம் மனதுக்கு இதைப் போன்று வெளியிலிருந்து அவ்வப்போது உதவி தேவையாக இருக்கிறது...