Sunday, June 27, 2010

காத்திருத்தல், கடந்து போதல் மற்றும் வாழ்க்கை


காத்திருத்தல் என்பதும் கடந்து போதல் என்பதும் வாழ்வின் மிக முக்கியமான நிகழ்வுகள். சில சமயம் உறவுகளுக்காகவும் நிகழ்வுகளுக்காகவும் காத்திருத்தல் தாண்டி வாழ்விற்கான காத்திருத்தலை உணர்ந்து கொள்ளும் தருணத்தில் தான் வாழ்க்கை தன் வான வேடிக்கையை நிகழ்த்தத்துவங்குகிறது. தெளிந்து தவழும் நீரோடை குறுகி இறங்கும் பொழுது பொங்கி வரும் பேரருவியென வீழுகின்ற அற்புதம் போலத்தான் வாழ்வும். பல சமயம் தெளிந்து தவழ்ந்து வந்துகொண்டிருக்கும் வாழ்வு காலமெனும் சமவெளியின் பாறைகளில் எங்கோ ஒன்று தாழ்ந்தும் மற்றது உயர்ந்தும் இருக்க அதில் நாமறியாமலே நம்மை கொண்டு செல்கிறது. குமுறி பொங்கி விழும் காட்டருவியென நிகழ்வுகள் நமையிழுத்துச்செல்லுகிறது உயர்வும் தாழ்வுமான வாழ்க்கைப்பாறைகளில் ஒரு நாள் சரிந்து கலந்து மண்ணோடு உறவாடுவோம் என்ற நினைப்பேதுமின்றி நாம் அருவி மட்டுமேயெனவும், வீழுதலோடு வாழ்வு முடிந்ததெனவும் கொண்டால் மீண்டு வரும் பொழுதில் நமெக்கான வாழ்விற்கான காத்திருத்தல் தான் அதுவென்ற உணர்வேதுமிண்றி வீணே கலங்கிச் சேறாகவும் கூடும். அதுவன்றி இதுவும் இருத்தலுக்கான இயல்பென்ற உணர்வோடு கடந்து போக முற்படுகையில் மட்டுமே நமக்கான கடலைச்சென்று சேரும் வரை வாழ்வின் பல்வேறு உருசிகளை உணர்ந்தும் உருவேற்றியும் செல்ல முடிகிறது.

உறவுகளுக்கான காத்திருத்தல் தரும் ஏமாற்றத்தையும் நிகழ்வுகளுக்கான காத்திருத்தல் தரும் எதிர்பார்ப்பையும் மீறிய பார்வையை கற்றுத்தருகிறது வாழ்வெனும் புத்தகம். இதைக்கற்றுக்கொள்வதற்கு திறந்த கண்களும் மனதும் மட்டுமின்றி நம்பிக்கையெனும் வெளிச்சமும் இருந்தால் மட்டுமே காத்திருத்தலையும் கடந்து போதலையும் அனுபவமாக்கிக்கொள்ளமுடிகிறது.

6 comments:

sury siva said...

தாங்களெழுதியதென்னையொருகாலத்தே நானெனதக்காலத்துப்படித்த ' இறையனார் அகப்பொருள்
வரலாறு' தனை நினைவுபடுத்தியதென்றால் மிகையாகாது. ' பாண்டிய நாடு வற்கடஞ்சென்றதெனத்'
துவங்கும் அவ்வுரைப்பகுதி சுமார் மூன்று பக்கத்திற்கு மேல் ஒரு கமா, முற்றுப்புள்ளி கூட இல்லாது
ரயில் வண்டி தண்டவாளத்திற்செல்வதுபோல் தட தடா என்று செல்லும். சில சமயம் சுகமாக இருக்கும்.
சில சமயம் எப்பொழுது இந்த பயணம் முடியும் என நினைக்கத்தோன்றும்.

வாழ்வும் அது போல் தான். எனது இந்த 69 ஆண்டுகளில் அனுபவித்தறியாத ஒன்றை நினைத்து ஏங்கி
எதிர்பார்ப்பது ஒரு நிலை எனின், அனுபவிக்கும் ஒரு நிலையை கடந்து போகுமா என ஏங்கி நிற்பதும்
ஒரு நிலை தான். நீங்கள் சொல்வது மெய்யே எனினும் ஒரு வார்த்தை சொல்லவேண்டும்.

' கடந்து போனதிலும் ' ' எதிர்பார்ப்பிலும் ' தோன்றுபவை இறந்த காலமும், எதிர்காலமும். மனிதனின்
மன மகிழ்வு நிகழ்காலத்தில் நடப்பவைதனை மெய்யாகக்கொண்டு தனது மன நிறைவுமதிற்கண்டு
மன அமைதி பெறுவதே. நடப்பவை எல்லாமே நமக்கு நல்லது செய்வதற்காகத்தான் என மன நிலை
கொண்டு அதனுடன் மனமொத்துபோயின் வாழ்க்கை எளிதாகவும் நிறைவாகவும் அமைந்திட பெறும்
வாய்ப்புகளுள்ளன. இல்லையா சொல்லுங்கள் !!!

உங்கள் பதிவு எனக்கு என்றோ நான் ஆங்கில இலக்கியம் " waiting for Godat " யும் நினைவுக்குக் கொண்டுவருகிறது.
என்ன, யாரை, ஏன் எதிர்பார்க்கிறோம் என ஒரு இலக்கு இல்லாமலே ஒரு இரு நபர்கள் மணிக்கணக்காக‌
பேசிக்கொண்டிருப்பர். டி.எஸ் . எலியட்டின் படைப்பு பிரசித்தம்.

ஒரு வரியில் சொல்லப்போனால்,
நிகழ்காலத்தே நில்லுங்கள். நிச்சயம் அது உங்களுக்கு நிம்மதி தரும்.

சுப்பு ரத்தினம்.

sury siva said...

தாங்களெழுதியதென்னையொருகாலத்தே நானெனதக்காலத்துப்படித்த ' இறையனார் அகப்பொருள்
வரலாறு' தனை நினைவுபடுத்தியதென்றால் மிகையாகாது. ' பாண்டிய நாடு வற்கடஞ்சென்றதெனத்'
துவங்கும் அவ்வுரைப்பகுதி சுமார் மூன்று பக்கத்திற்கு மேல் ஒரு கமா, முற்றுப்புள்ளி கூட இல்லாது
ரயில் வண்டி தண்டவாளத்திற்செல்வதுபோல் தட தடா என்று செல்லும். சில சமயம் சுகமாக இருக்கும்.
சில சமயம் எப்பொழுது இந்த பயணம் முடியும் என நினைக்கத்தோன்றும்.

வாழ்வும் அது போல் தான். எனது இந்த 69 ஆண்டுகளில் அனுபவித்தறியாத ஒன்றை நினைத்து ஏங்கி
எதிர்பார்ப்பது ஒரு நிலை எனின், அனுபவிக்கும் ஒரு நிலையை கடந்து போகுமா என ஏங்கி நிற்பதும்
ஒரு நிலை தான். நீங்கள் சொல்வது மெய்யே எனினும் ஒரு வார்த்தை சொல்லவேண்டும்.

' கடந்து போனதிலும் ' ' எதிர்பார்ப்பிலும் ' தோன்றுபவை இறந்த காலமும், எதிர்காலமும். மனிதனின்
மன மகிழ்வு நிகழ்காலத்தில் நடப்பவைதனை மெய்யாகக்கொண்டு தனது மன நிறைவுமதிற்கண்டு
மன அமைதி பெறுவதே. நடப்பவை எல்லாமே நமக்கு நல்லது செய்வதற்காகத்தான் என மன நிலை
கொண்டு அதனுடன் மனமொத்துபோயின் வாழ்க்கை எளிதாகவும் நிறைவாகவும் அமைந்திட பெறும்
வாய்ப்புகளுள்ளன. இல்லையா சொல்லுங்கள் !!!

உங்கள் பதிவு எனக்கு என்றோ நான் ஆங்கில இலக்கியம் " waiting for Godat " யும் நினைவுக்குக் கொண்டுவருகிறது.
என்ன, யாரை, ஏன் எதிர்பார்க்கிறோம் என ஒரு இலக்கு இல்லாமலே ஒரு இரு நபர்கள் மணிக்கணக்காக‌
பேசிக்கொண்டிருப்பர். டி.எஸ் . எலியட்டின் படைப்பு பிரசித்தம்.

ஒரு வரியில் சொல்லப்போனால்,
நிகழ்காலத்தே நில்லுங்கள். நிச்சயம் அது உங்களுக்கு நிம்மதி தரும்.

சுப்பு ரத்தினம்.
http://menakasury.blogspot.com

sury siva said...

தாங்களெழுதியதென்னையொருகாலத்தே நானெனதக்காலத்துப்படித்த

' இறையனார் அகப்பொருள் வரலாறு' தனை நினைவுபடுத்தியதென்றால் மிகையாகாது. ' பாண்டிய நாடு வற்கடஞ்சென்றதெனத்'
துவங்கும் அவ்வுரைப்பகுதி சுமார் மூன்று பக்கத்திற்கு மேல் ஒரு கமா,
முற்றுப்புள்ளி கூட இல்லாது
ரயில் வண்டி தண்டவாளத்திற்செல்வதுபோல் தட தடா என்று
செல்லும். சில சமயம் சுகமாக இருக்கும்.
சில சமயம் எப்பொழுது இந்த பயணம் முடியும் என நினைக்கத்தோன்றும்.

வாழ்வும் அது போல் தான். எனது இந்த 69 ஆண்டுகளில்

அனுபவித்தறியாத ஒன்றை நினைத்து ஏங்கி
எதிர்பார்ப்பது ஒரு நிலை எனின், அனுபவிக்கும் ஒரு நிலையை கடந்து
போகுமா என ஏங்கி நிற்பதும்
ஒரு நிலை தான். நீங்கள் சொல்வது மெய்யே எனினும் ஒரு வார்த்தை
சொல்லவேண்டும்.
' கடந்து போனதிலும் ' ' எதிர்பார்ப்பிலும் ' தோன்றுபவை இறந்த
காலமும், எதிர்காலமும். மனிதனின்
மன மகிழ்வு நிகழ்காலத்தில் நடப்பவைதனை மெய்யாகக்கொண்டு

தனது மன நிறைவுமதிற்கண்டு
மன அமைதி பெறுவதே. நடப்பவை எல்லாமே நமக்கு நல்லது
செய்வதற்காகத்தான் என மன நிலை
கொண்டு அதனுடன் மனமொத்துபோயின் வாழ்க்கை எளிதாகவும்
நிறைவாகவும் அமைந்திட பெறும்
வாய்ப்புகளுள்ளன. இல்லையா சொல்லுங்கள் !!!
உங்கள் பதிவு எனக்கு என்றோ நான் ஆங்கில இலக்கியம் " waiting
for Godat " யும் நினைவுக்குக் கொண்டுவருகிறது.
என்ன, யாரை, ஏன் எதிர்பார்க்கிறோம் என ஒரு இலக்கு இல்லாமலே ஒரு இரு நபர்கள் மணிக்கணக்காக‌ பேசிக்கொண்டிருப்பர். டி.எஸ் . எலியட்டின் படைப்பு பிரசித்தம்.
ஒரு வரியில் சொல்லப்போனால்,
நிகழ்காலத்தே நில்லுங்கள். நிச்சயம் அது உங்களுக்கு நிம்மதி
தரும்.
சுப்பு ரத்தினம்.

sury siva said...

தாங்களெழுதியதென்னையொருகாலத்தே நானெனதக்காலத்துப்படித்த ' இறையனார் அகப்பொருள்
வரலாறு' தனை நினைவுபடுத்தியதென்றால் மிகையாகாது. ' பாண்டிய நாடு வற்கடஞ்சென்றதெனத்'
துவங்கும் அவ்வுரைப்பகுதி சுமார் மூன்று பக்கத்திற்கு மேல் ஒரு கமா, முற்றுப்புள்ளி கூட இல்லாது
ரயில் வண்டி தண்டவாளத்திற்செல்வதுபோல் தட தடா என்று செல்லும். சில சமயம் சுகமாக இருக்கும்.
சில சமயம் எப்பொழுது இந்த பயணம் முடியும் என நினைக்கத்தோன்றும்.

தொடரும்...
சுப்பு ரத்தினம்.

sury siva said...

உங்கள் பதிவு எனக்கு என்றோ நான் ஆங்கில இலக்கியம் " waiting for Godat " யும் நினைவுக்குக் கொண்டுவருகிறது.
என்ன, யாரை, ஏன் எதிர்பார்க்கிறோம் என ஒரு இலக்கு இல்லாமலே ஒரு இரு நபர்கள் மணிக்கணக்காக‌
பேசிக்கொண்டிருப்பர். டி.எஸ் . எலியட்டின் படைப்பு பிரசித்தம்.

ஒரு வரியில் சொல்லப்போனால்,
நிகழ்காலத்தே நில்லுங்கள். நிச்சயம் அது உங்களுக்கு நிம்மதி தரும்.

சுப்பு ரத்தினம்.

sury siva said...

வாழ்வும் அது போல் தான். எனது இந்த 69 ஆண்டுகளில் அனுபவித்தறியாத ஒன்றை நினைத்து ஏங்கி
எதிர்பார்ப்பது ஒரு நிலை எனின், அனுபவிக்கும் ஒரு நிலையை கடந்து போகுமா என ஏங்கி நிற்பதும்
ஒரு நிலை தான். நீங்கள் சொல்வது மெய்யே எனினும் ஒரு வார்த்தை சொல்லவேண்டும்.

' கடந்து போனதிலும் ' ' எதிர்பார்ப்பிலும் ' தோன்றுபவை இறந்த காலமும், எதிர்காலமும். மனிதனின்
மன மகிழ்வு நிகழ்காலத்தில் நடப்பவைதனை மெய்யாகக்கொண்டு தனது மன நிறைவுமதிற்கண்டு
மன அமைதி பெறுவதே. நடப்பவை எல்லாமே நமக்கு நல்லது செய்வதற்காகத்தான் என மன நிலை
கொண்டு அதனுடன் மனமொத்துபோயின் வாழ்க்கை எளிதாகவும் நிறைவாகவும் அமைந்திட பெறும்
வாய்ப்புகளுள்ளன. இல்லையா சொல்லுங்கள் !!!

தொடரும்...
சுப்பு ரத்தினம்.