Friday, October 17, 2008

பெண்பால் கவிதைகள் - 1

பெண்ணியம்
என்
போதையின்
முகச்சாயைகளை
வெளிக்கிட வைத்தது

என் புகழ் போதை
என்னை
எல்லாவற்றையும்
எழுதவைத்தது
காதல், காமம்
மற்றும் என்
தூமை உட்பட.


**************

7 comments:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

இப்பல்லாம் நிறைய கவிதை எழுதறீங்க போல :)

நல்லா இருக்குங்க.

narsim said...

பளீர்.. பளார்.. !

நன்று!

நர்சிம்

MSK / Saravana said...

ரொம்ப Aggressive-வா இருக்கே..

Ken said...

ம்ம் பெண்ணிய கவிஞர்ன்னா நான் கருத்து சொல்லல ஏன்னா நான் ஆணாதிக்கவாதி :)

கிருத்திகா ஸ்ரீதர் said...

நன்றி சுந்தர். ஆமா கொஞ்சம் அதிகமாகத்தான் எழுதுகிறேன். எழுதுவதையெல்லாம் பதிவேற்றுவதில்லை (தப்பிச்சீங்க)...

கிருத்திகா ஸ்ரீதர் said...

எப்படி இருந்து என்ன நர்சிம்...யார் யாருக்கெல்லாம் புரியனுமோ அவங்களுக்கெல்லாம் புரியுமாங்கறது சந்தேகம் தானே....

கிருத்திகா ஸ்ரீதர் said...

வாங்க கென்... மற்றுமொரு ஆணாதிக்கவாதியா?? தேடிப்பாருங்க வேற ஏதாவது அவதாரம் உள்ளுக்குள்ள இருக்கும்.... :)