Saturday, December 20, 2014

அஷ்டபதி – 2 – ஸ்ரித கமலாகுச – யது குல நாயகன்

śrita-kamalā-kuca-maṇḍala dhta-kuṇḍala e
kalita-lalita-vana-m
āla
jaya jaya deva hare

மலர்ந்த தாமரை போன்ற பாதங்களை கொண்டவனே, அழகிய அணியாக காதில் குண்டலங்களை அணிந்திருப்பவனே, வனத்தில்  அன்றலார்ந்த நறுமணமிக்க மலர்களை மார்பினில் மாலையாக சூடி இருப்பவனே – கிருஷ்ணா தேவாதி தேவனே ஹரி உனைப் போற்றுகிறேன்.

dina-mai-maṇḍala-maṇḍana
bhava-kha
ṇḍana e
muni-jana-m
ānasa-hasa
jaya jaya deva hare ||1|
சூரியனைபோன்ற பிராகசமான வதனத்துடன் உன் அன்பான பார்வை கொண்டு பாலையும் நீரையும் தெளிந்தறியும் திறனுள்ள அன்னத்தைபோன்ற வாழ்வை கொண்டிருக்கும் ஞானியர்க்கு உய்விக்கும் வழியை நல்குபவனே - கிருஷ்ணா தேவாதி தேவனே ஹரி உனைப் போற்றுகிறேன்  

kāliya-via-dhara-gañjana
jana-ra
ñjana e
yadukula-nalina-dine
śa
jaya jaya deva hare
கொடிய விஷமுள்ள சர்ப்பமான காளிங்கனை சம்ஹரித்தவனே, எல்லா மனிதர்களுக்கும் உவப்பானவனே, யதுகுலத்து நாயகனே - கிருஷ்ணா தேவாதி தேவனே ஹரி உனைப் போற்றுகிறேன்

madhu-mura-naraka-vināśana
garu
āsana e
sura-kula-keli-nid
āna
jaya jaya deva hare ||3||
மது, முரா, நரகாசுரா ஆகிய அரக்கர்களை அழித்தவனே, கம்பீரமான கருட வாகனத்திலமர்ந்தவனே, உலகின் எல்லா உன்னதமான சந்தோஷங்களையும் தருபவனே - கிருஷ்ணா தேவாதி தேவனே ஹரி உனைப் போற்றுகிறேன்

amala-kamala-dala-locana
bhava-mocana e
tribhuvana-bhuvana-nidhāna
jaya jaya deva hare ||4||
மலர்ந்த தாமரை இதழ்களை ஒத்த கண்களை உடையவனே, கண்ட மாத்திரத்தில் சகல பாவங்கலிளிருந்தும் முக்தி அடையச் செய்பவனே மூவுலகங்களையும் ஆள்பவனே - கிருஷ்ணா தேவாதி தேவனே ஹரி உனைப் போற்றுகிறேன்

janaka-sutā-kta-bhūaa
jita-d
ūaa e
samara-
śamita-daśa-kaṇṭha
jaya jaya deva hare ||5||
தசமுகனான இராவணனை வென்ற ஒப்பற்ற ஜனக குமாரனே - கிருஷ்ணா தேவாதி தேவனே ஹரி உனைப் போற்றுகிறேன்

abhinava-jala-dhara-sundara
dh
ta-mandara e
śrī-mukha-candra-cakora
jaya jaya deva hare ||6||
கார்மேக வர்ணனே, மந்தர மலையை தாங்கியவனே, சந்திர வதனனே - கிருஷ்ணா தேவாதி தேவனே ஹரி உனைப் போற்றுகிறேன்

tava caraa praatā vayam
iti bh
āvaya e
kuru ku
śala praateu
jaya jaya deva hare ||7||
குரு குலத்தோன்றலே, உன் காலடிகளில் என்னை சமர்ப்பிக்கிறேன் கருணை கொண்டு எனை எடுத்தாளு - கிருஷ்ணா தேவாதி தேவனே ஹரி உனைப் போற்றுகிறேன்

śrī-jayadeva-kaver ida
kurute mudam e
ma
galam ujjvala-gīta
jaya jaya deva hare ||8||
இந்த ஜெயதேவன் இயற்றிய அன்பால் ஒளிர்கின்ற பாமாலையை உனக்கு அர்ப்பணிக்கிறேன் ஏற்றுக்கொள்வாய் - கிருஷ்ணா தேவாதி தேவனே ஹரி உனைப் போற்றுகிறேன்

 

No comments: