Wednesday, April 9, 2008

காதல், கல்யாணம், சடங்கு ஒரு பிரதிபலிப்பு

திடீர்னு தான் எங்க வீட்டில அப்படி ஒரு எண்ணம் வந்தது. அதிலும் பெரியவன் தான் ஆரம்பிச்சான், அம்மா உங்களுக்கு கல்யாணம் ஆகி 25 வருஷம் முடியப்போகுது நாங்கெல்லாம் உங்க கல்யாணத்தைப் பார்க்கவே இல்லை!!! நீங்களும் சரியா ஒரு வீடியோவோ போட்டாவோ கூட எடுத்து வைக்கல (ஏன்னா எங்களோடது காதல் கல்யாணம் பெத்தவங்க சம்மதத்தோடத்தான் ஆனாலும் எடுத்துச்செய்ய ஆள் இல்ல நாங்களே முடிவு பண்ணி ரொம்ப குறைஞ்ச பட்ஜெட்ல பண்ணிக்கிட்ட கல்யாணம். நன்பர்கள் கை காமரா வைச்சி எடுத்த புகைப்படங்கள் தான்.) அதனலா திரும்பவும் உங்க கல்யாணத்தை ரொம்ப விமரிசையா நடத்தலாம் எங்களுக்கு ரொம்ப ஆசையா இருக்குன்னு ஆரம்பிச்சான்.

எனக்கும் ரொம்ப ஆசைதான் இப்பெல்லாம் அடிக்கடி தோணரதுதான் நம்ம கொஞ்சம் நல்லா கல்யாண ஏற்பாடு பண்ணியிருக்கலாமோன்னு அதனாலா அரை மனசா சம்மதிக்கரமாதிரி ரொம்ப சந்தோஷமா முழு மனசா சம்மதிச்சேன். அப்ப வந்தது வினை.

என் பையனோட வருங்கால மனைவி (ஒண்ணா படிச்சாங்க இப்ப தனித்தனியா வேலை பார்க்கறாங்க) ஆண்ட்டி அப்பெல்லாம் என்ன ஆண்ட்டி நார்மல் பொரஸீஜர், முதல்ல எல்லாரும் வந்து வரிசையா பொண்ணு பார்த்து பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட்டுட்டு அப்புறம் தானே கல்யாணம். என்ன ப்ராசஸ் இது ஆண்டி நல்ல வேள நீங்க தப்பிச்சீங்க ஐ ஜஸ்ட் கான் இமாஜின் என்றபடி சுற்றிவந்தாள்.

என்னோட அருமை பொண்ணு வந்து அம்மா நாந்தான் உன்னோட மாமியார் (என் மாமியார் புண்னியவதி ரொம்ப சீக்கிரமே போய் சேர்ந்துட்டாங்க) அதனால அடக்க ஒடுக்கமா என்கிட்ட நடந்துக்கணும் சரியா நான் மாப்பிள்ளை வீட்டுக்காரி என்று கட்சி பிரிக்கத்தொடங்கினாள். என் மாப்பிள்ளை ஆண்ட்டி மே ஆப்கே சைட் ஹூம் என்றான் (எங்க வீடு ஒரு பாரதவிலாஸ் எல்லாம் காதல் கல்யாணம் தான்). என் சின்னப்பையன் இப்பத்தான் இஞ்சினியரிங் படிச்சிட்டிருக்கான் (இன்னும் ஒருத்தரையும் அதிகார பூர்வமா அறிவிக்கல அதுனால அவனோடு கூட யாரும் இல்ல) அவன் என் பக்கம்னும் பெரியவன் அவங்கப்பா பக்கம்னும் அவனோட காதலி என் பக்கம்னும் அவங்களே ரெண்டு கட்சியா பிரிஞ்சிகிட்டாங்க.

நான் என் பங்குக்கு சொஜ்ஜி, பஜ்ஜி நல்ல டிகிரி காப்பி (உபயம் காபிடே & எலக்டிரிக் காபி பில்டர்) எல்லாம் தயார் செய்து வைச்சாச்சு, எங்க சீனு அதாங்க என் வீட்டுக்காரரு வழக்கமா பண்ற எந்த எடக்கு முடக்கும் பண்ணாம அமைதியா எல்லாத்தையும் இரசிச்சிட்டு இருந்தாரு.

ஜமக்காளம் எல்லாம் விரிச்சி எல்லா ஏற்பாடும் நடந்துகிட்டு இருந்தது. நான் சின்னப்பொண்ணு மாதிரி ஏம்பா நீ மொத மொதல்ல திருவனந்தபுரத்துல இருந்து வாங்கிட்டு வந்தியே அந்த இராமர் கலர் பச்சை புடவை கட்டிக்கட்டுமா என்றபடி நிசம்மாவே பொண்ணு பாக்கப்போர மனநிலையில இருந்தேன். எல்லோரும் உட்கார்ந்தாச்சு, என் பொண்ணு ரொம்ப தோரணையா "ம்ம் நல்ல நேரம் தாண்டரதுக்குள்ள பொண்ண அழைச்சுண்டு வாங்கோ என்று சொல்லவும்" என் நாட்டுப்பொண் (அதாங்க வருங்கால) என்னை ரொம்ப மெதுவா கூட்டி வந்து உட்கார வைச்சா, என் பொண்ணு "எங்காத்துப்பிள்ளைக்கு பாட்டுன்னா உசிர், ரொம்ப நன்னா பாடுவான், உங்காத்துப் பொண் பாட்டெல்லாம் பாடுவோல்லியோ" என்றாள். உடனே என் சின்னப்பையன் "ம்ம் பாடுவோ சிட்சையெல்லாம் சொல்லிக்கல கேள்வி ஞானம்தான் உங்காத்துப்பிள்ளை ரொம்ப நல்லா பாடுவாங்கரளே ஒரு பாட்டு பாடச்சொல்லுங்கோளேன் எங்காத்துப்பொண்ணும் பாடுவோ என்றான்". உடனே என் வீட்டுக்காரர்.
மெதுவா பாட ஆரம்பிச்சாரர்
அழகே அழகு தேவதை ஆயிரம் காவியம் … (இராஜபார்வைல கமல் பாடுவாரே அந்தப்பாட்டுத்தான்)
அவ்வளவுதான் கூட்டம் களை கட்ட ஆரம்பிச்சிடுத்து. மெல்ல நேயர் விருப்பம் போல் ஒரோர் பாட்டா கேக்க ஆரம்பிச்சி கடைசில

“பூங்காற்று உன் பேர் சொல்ல கேட்டேனே இன்று…….
… ஜென்ம ஜென்மங்கள் ஆனாலும் என்ன காதல் நிறம் மாறுமா…..
(வெற்றி விழான்னு நினைக்கிறேன். எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு)ன்னு முடிச்சார். எனக்கு ஒரே சந்தோஷமா போயிடுத்து.

உடனே என் பொண்ணு அம்மாடி நீ ஏதாவது சுலோகமாவது சொல்லுங்கவும் எனக்கு ரோசம் வந்துடுத்து எனக்கு நன்னாத்தெரிஞ்ச (ஒரே) பாட்டை எடுத்து விட்டேன்.

எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே
என்ன தவம் செய்து விட்டேன் (கண்ணன்)
எங்கிருந்தோ வந்தான் …….

சொன்னபடி கேட்பான் துணிமணிகள் காத்திடுவான்
சின்னக் குழந்தைக்கு சிங்காரப் பாட்டிசைப்பான்
கண்ணை இமை காப்பது போல் என் குடும்பம்
வண்ணமுறக்காக்கின்றான் வாய் முணுத்தல் கண்டறியேன்
எங்கிருந்தோ வந்தான்…….

(என் சீனு பெரியவனோடும் பெண்ணோடும் சின்னவனோடும் இரவுகளில் தாலாட்டு பாடியது, நீ தூங்கு கண்ணா காலேல 4.30 பிளட்டப்பிடிச்சாத்தான் செமினார் அட்டண்ட் பண்ண முடியும் நான் பாத்துக்கறேன்….. இல்ல எனக்கு தூக்கம் அதிகம் வராது அவன் படிச்சு முடிக்கர வரைக்கும் நான் உக்காந்துக்கறேன் டீ வேணா போட்டுத்தரேன் நாளைக்கு உனக்கு நிறைய வேலை இருக்கு நான் வேர பிசினஸ் விஷயமா ஊருக்குப்போரேன் தனியே திண்டாடுவே நீ ரெஸ்ட் எடு… போன்ற பிண்ணணிக்காட்சிகளை கற்பனை செய்து கொள்ளவும்.)

பற்று மிகுந்து வரப்பார்க்கின்றேன் கண்ணனால்
பெற்று வரும் நன்மை எல்லாம் பேசி முடியாது
நன்பனாய் மந்திரியாய் நல்லாசிரியனுமாய்
பண்பிலே தெய்வமாய் பார்வையிலே சேவகனாய்

(நிறைவான குடும்பம், வீடு, காரு, மனசு நெரஞ்ச சந்தோஷம், -அவர்கள் படத்துல காற்றுக்கென்ன வேலின்னு பாடிண்டு சுஜாதா ரொம்ப வேகமா ட்ராலி போரமாத்ரி ஒரு ஷாட் … அப்புறம். வேலைல ரொம்ப டென்ஷன் ஜாஸ்தியாகிப்போனதும் கண்ணா ரொம்ப முடியலன்னா வேலைய விட்டுட்டு சொந்தமா ஏதாவது தொழில் பண்ணே என்று சொந்த பிசினஸ் தொடங்க செய்த ஊக்கம் இதெல்லாம் பிண்ணனணிக்காட்சிதான்)

இங்கிவனை யான் பெறவே என்னதவம் செய்து விட்டேன்…..

முடிக்கும் போதுதான் எல்லாரும் கவனிச்சோம் நான் அவர் மேல சாய்ஞ்சிட்டு இருக்கேன். என் பொண்ணு மாப்பிள்ளை கையையும் என் பெரிய பையன் அவன் காதலியையும் பார்த்துட்டு இருக்கான். என் சின்னப்பயன் என் மடில படுத்துட்டு இருக்கான். அந்த இடமே ரொம்ப சிவாஜியா (அதாங்க நடிகர் திலகம் சிவாஜி) பாத்திரத்தோட ஒன்றியிருந்தது. ஏதோ நான் ரொம்ப நல்லாத்தான் பாடியிருப்பேன் போல….

சட்டுனு எல்லார் கிட்டயும் அன்பு ததும்பி வழிஞ்சிட்டு இருந்தது. என் நாட்டுப்பொண் மெல்ல எங்கிட்ட வந்து ஐ லவ் யூ ஆண்ட்டி என்று கிஸ்ஸிட்டுப்போனாள். பின் மெதுவா ஆன்ட்டி எண்ட அச்சன் அம்மயிடத்து பரயாம் நிங்களும் எங்கட அகத்திலோக்கி வரணும் என்ன பெண்ணு காணானு. இது ஒரு தனிச்ச எக்ஸ்பீரியன்ஸா அத ஞான் விடாம் பாடில்லா.. கிருஷ்ணா நீ ஆண்ட்டியிடத்துப் பரயடா என்றபடி என் மகனின் தோளில் தொங்கினாள். அதில் ஒரு புரிதல் இந்த வீட்டோடுடனான இணக்கம் இருந்தது. எனக்கு நாம் ஏதோ கற்றுக்கொடுத்திருக்கிறோம் என்ற மன நிறவு வந்தது.

ஆனால் என் வீட்டுக்காரரோ.. அடப்போங்கடா ஒரு விஷயத்தையும் ஒழுங்கா செய்யமாட்டேங்க நான் இப்ப வாச்சும் போய் லெட்டர் போடரோம்னு சொல்லலாம்னு பார்த்தா இப்படி சொதப்பிட்டீங்களே என்றபடி கண் சிமிட்டினார்….

22 comments:

மங்களூர் சிவா said...

/
அடப்போங்கடா ஒரு விஷயத்தையும் ஒழுங்கா செய்யமாட்டேங்க நான் இப்ப வாச்சும் போய் லெட்டர் போடரோம்னு சொல்லலாம்னு பார்த்தா இப்படி சொதப்பிட்டீங்களே
/

ச்ச சொதப்பீட்டீங்களே

:)))))))))))))))))

நல்லா இருந்தது.

சென்ஷி said...

இது கதையா?????

கிருத்திகா ஸ்ரீதர் said...

வாங்க சிவா ரொம்ப நாளாச்சு இந்தப்பக்கம் வந்து. எப்படி இருக்கீங்க...

கிருத்திகா ஸ்ரீதர் said...

சென்ஷி... இப்போதைக்கு இது கதைதான்.. இன்னும் கொஞ்சம் வருஷம் ஆனா நிசமாகலாம்.....

யாத்ரீகன் said...

:-) படிச்சிட்டே கற்பனை பண்ண நல்லாத்தான் இருக்கு ..

துளசி கோபால் said...

இது கதை அல்ல...நிஜம் ன்னு சொல்லுங்க.please...

ஹைய்யோ...அட்டகாசமா இருக்கு.

நானும் கொஞ்சமா அதாவது ரொம்ம்ம்ம்ம்பக் கொஞ்சமாச் செலவு பண்ணி பதிவுத் திருமணம்.

இப்பப் பொண்ணு பார்க்க வாங்கன்னு சொல்றது ஃபேஷன் இல்லையாமே:-))))

கிருத்திகா ஸ்ரீதர் said...

வாங்க டீச்சர், இப்பத்தான் பெரியவனுக்கு 16 வயது ஆச்சு, அதனால இன்னும் கொஞ்சம் வருஷம் கழித்து ஒரு வேளை நிஜமாகலாம். //இப்பப் பொண்ணு பார்க்க வாங்கன்னு சொல்றது ஃபேஷன் இல்லையாமே:-))))//ஆமா அத மாதிரி ஒரு விஷயம் கேள்விப்பட்டுத்தான் இத எழுதனும்னு தோன்றியது.

பாச மலர் / Paasa Malar said...

நல்லா நிஜம் மாதிரியே இருக்கு கிருத்திகா...நல்லாருக்கு.

தமிழன்-கறுப்பி... said...

அழகு....

கிருத்திகா ஸ்ரீதர் said...

எல்லாமே நம்ம ஆசைதானே மலர்....
வாங்க தமிழன் நன்றி ...

முஹம்மது ,ஹாரிஸ் said...

வாழ்கையை கற்பனை செய்து வாழமுடியாது, ஆனால் இறந்த காலத்தை பற்றிய நாள் கற்பனை.
அமையாரே தங்கள் எந்த ஊர்.

முஹம்மது ,ஹாரிஸ் said...

வாழ்கையை கற்பனை செய்து வாழமுடியாது, ஆனால் இறந்த காலத்தை பற்றிய நாள் கற்பனை.
அமையாரே தங்கள் எந்த ஊர்.

கிருத்திகா ஸ்ரீதர் said...

இறந்த காலத்தை பற்றி நினைத்துப்பார்பதுதான் கற்பனை என்று சொல்ல வருகிறீர்களா....(புரியவில்லை அதான்)
நமக்கு தாமிரபரணிக்கரையோரமா ஊருங்க...

முஹம்மது ,ஹாரிஸ் said...

எனக்கும் திருநெல்வேலி தான் உங்களுக்கு High ground தெறிிஉம் என்று நினைக்கிறேன். தற்சமயம் பெங்களூரில் பனி புரிந்து கொண்டு இருக்கிறேன். உங்களுடைய எழுத்து எனக்கு ரொம்ப பிடித்துரிக்கிறது.
எஸ். ராமகிரிஷணன் அவர்களின் நூல்கள் விஷயமாக தேடும் போது, உங்களுடை எழுத்து எனக்கு
கிடைத்தது.

கிருத்திகா ஸ்ரீதர் said...

நன்றி. உங்கள் ஊரில் அந்த சுலோச்சனா முதலியார் பாலம் எனக்கு மிகவும் பிடித்தது. திருநெல்வேலிக்கு அருகில் தான் என்னுடைய ஊர். என் வலைப்பூவின் முகவியும் அதுதான். (ஆத்தூர்). தாமிரபரணி கடலோடு சேர்வதற்கு சற்றே முன்பான முகத்துவாரம்.

சுந்தரா said...

அழகான கற்பனை கிருத்திகா...
நிஜமென்னும் உணர்வு தோன்றும்படியாக அருமையாகப் படைத்திருக்கிறீர்கள்...
சும்மாவா, நம்ம ஊரு மண்ணாச்சே...

கிருத்திகா ஸ்ரீதர் said...

ஆஹா வாங்க சுந்தரா முதல் முறையா வந்திருக்கீங்க போல. நன்றி.. நம்மூரா ரொம்ப சந்தோஷமா இருக்கு எந்தப்பக்கம்....

சுந்தரா said...

சந்தோஷம் கிருத்திகா...நமக்கு திருச்செந்தூர் பக்கம்...
இப்போதைய வாழ்க்கை துபாயில்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கிருத்திகா,உங்களுக்கும் உங்க சீனுக்கும் சுத்திப் போட்டுடறேன்.அவ்வளவு நல்லா இருந்தது.
உங்கள் கனவுகள் நிஜமாவதற்கு இன்னோரு தாமிரபரணித் தண்ணி இங்க வாழ்த்துது.கீழநத்தம்,திருக்குறுங்குடி:)

கிருத்திகா ஸ்ரீதர் said...

வாங்க வல்லிம்மா.. அப்படியே ஏத்துக்கறேன். நம்ம ஊர் தண்ணியா ரொம்ப சந்தோஷம்.. (அது தானா சட்டுனு ஒட்டுதல் வந்து விட்டது)... நன்றி...

Anonymous said...

கலக்கல்... :)

Uma said...

60ஆம் க‌ல்யாண‌த்துக்கு இப்ப‌வே ஒத்திகையா? வாழ்த்துக்கள்