Saturday, December 22, 2007

ஆளுமை


எனக்கு அன்னியமான இடங்களில்
உன் இருப்புக்கள்
என்னுள் பல கேள்வியை எழுப்பலாம்.

அழைப்புக்களை ஏற்க மறுக்கும்
உன் தொலைபேசி சினுங்கல்கள்
எனக்கு ஏதேனும் சேதி சொல்லலாம்

என் சுவைகளின் மீதான
உன் வெறுப்புக்கள்
என்னை வேற்றுமை படுத்தலாம்

உன் நன்பர்களின் மீதான
உன் பற்றுதல்கள்
என்னில் வெறுமையைத்தூண்டலாம்

என் ஆளுமைகளற்ற
உன் நேரங்கள்
என் முகமூடிகளை கிழித்தெறியலாம்

ஏனெனில் நீ நான் நாம் எனும் தளங்களில்
நான் என்றும் சந்தோஷமாய்

6 comments:

ஆடுமாடு said...

நல்லா இருக்கு...நல்லா இருக்கு...நல்லா இருக்கு.

கிருத்திகா ஸ்ரீதர் said...

வாங்க ஆடுமாடு நன்றி

ரூபஸ் said...

கொஞ்சம் புரிஞ்சமாதிரியும் இருக்கு, புரியாதமாதிரியும் இருக்கு..

கிருத்திகா ஸ்ரீதர் said...

நன்றி ரூபஸ்.. அப்ப கவிதை இலக்கணத்தோட இருக்குன்னு சொல்லவறீங்க.....

ராம்குமார் - அமுதன் said...

"ஏனெனில் நீ நான் நாம் எனும் தளங்களில்
நான் என்றும் சந்தோஷமாய்"

நான் ரசித்த வரிகள்!!!!

அருமையான கவிதை கிருத்திகா.... வாழ்த்துக்கள்!!!

தினேஷ் said...

நல்ல கவிதை...

தினேஷ்