Monday, April 7, 2014

பேசவும் கேட்கவும் திகட்டாத தெள்ளமுது – இசை அதன் பல்வேறு ரூபங்களுடன்


ஆங்கிலத்தில் வாசிக்கவும், எழுதவும், பின் பேசவும் ஆர்வம் கொண்டிருந்த எனக்கு ஆங்கில பாடல்களை கேட்பதில் ஒரு மிகப்பெரிய தயக்கம் இருந்தது. சரியான வழிகாட்டுதல் இல்லாததும் கூட ஒரு காரணமாய் இருந்திருக்கலாம். பகிர்ந்து கொள்ளக்கூடிய அளவில் நட்புகளும் இந்த வரிசையில் இல்லை. இந்த நிலையில்
Colonial Cousins -  by Hariharan and Leslie Lewis.  நான் முதல் முதலில் கேட்ட ஆங்கில ஆல்பம். கிட்டத்தட்ட பதினெட்டு வருடங்கள் முன்பு என்று நினைக்கிறேன் (1996), நவீன் (என் பெரிய பையனுக்கு நாலு வயதிருக்கும் ஆனால் எப்போதெல்லாம் இந்த இசைத் தொகுப்பை கேட்க நேருகிறதோ அப்போதெல்லாம்  நான் என் பதின் பருவத்திற்கு சென்று மீள்வேன். I used feel so much of love in me when I hear this album, மேலும் கடவுளையும் இசையையும் பற்றிய மிகப்பெரிய புதியதொரு புரிதலை தந்ததும் இந்தப் பாடல்கள் தான்.
அதிலும் கிருஷ்ணா நீ பேகனே பாரோ என்ற இந்த பாடல் ஒரு நேர்த்தியான கோர்வை. ஆங்கில இசையும், கர்நாடக இசையும் கலந்ததோடல்லாமல் இந்துஸ்தானியும், ஹரியின் குரலும் தரும் மயக்கம் எந்நாளும் தீராதது. ஒவ்வொரு பாடலும் தரும் இன்பம் ஒவ்வொரு வகையானது
 
 

இதன் பிறகு தான் ஜான் டென்வரும், லூசியானா சொசாவும், யானியும் கேட்கத்துவங்கினேன் ஆனாலும் இந்த தொகுப்பிற்குண்டான இடம் இன்று வரை மாறாதது. இன்று காலை கேட்கும் போது கூட மொத்த உலகையும் மிகவும் அன்போடும் காதலோடும் பார்க்கத்தூண்டும் இந்த பாடலை பகிர்ந்து கொள்வது என் ஆத்ம திருப்தி.

இவரது மற்றொரு தொகுப்பு காதல் வேதம், இதற்கு முன்பா இல்லை பின்பா ஞாபகம் இல்லை, ஆனால் அதுவும் இதுபோலவே பித்துக்கொள்ள வைக்கும் பாடல்களை கொண்டது...

No comments: