Tuesday, November 17, 2009

பெண்பால் கவிதைகள் - 3

உள்ளே கனன்று வரும்
பெரு நெருப்பை
அவ்வப்போது விசிறிவிடும்
ஏதோ ஒரு நிகழ்வின்
அடையாளம் தெரியாத
அல்லது
அறிந்து கொள்ள விரும்பாத
அறியாமையின் கணத்தில்
வாழ்கிறது
"பெண்ணென்னும் மாயப்பிசாசு"


**********************


நீவி உடுத்தி
அதரச்சாயமிட்டு
அடர்ந்து
மையெழுதியோ எழுதாமலோ
கண்ணாடி முன்நின்று
அழகிதானடி நீயென
ஒரு முறை பலமுறை
தனக்குள் சொல்லி
பின்
படர்கையில் யாரேனும்
பகர்கையில்
விழியால் செவியுறும்
"பெண்மையின் அழகு"


6 comments:

கும்மாச்சி said...

ஆஹா வித்யாசமான கருத்து, கவிதையும்தான்

அன்புடன் நான் said...

கவி"தை"கள் அருமை!... அதிலும் இரண்டாவது மிக அருமை!!

ஜீவி said...

//விழியால் செவியுறும்//

அருமையான வார்த்தைப் பிரயோகம்.

இந்த வரி ஒன்றுதான் மொத்தக் கவிதையையும் தாங்கிக் கொண்டிருக்கிறதோ?

அமிர்தவர்ஷினி அம்மா said...

விழியால் செவியுறும் //

அழகான வார்த்தை பிரயோகம். கவிதைகளும் அழகு :)

தினேஷ் said...

வித்தியாசமான சிந்தனை கொண்ட கவிதை...

அகநாழிகை said...

கவிதை நல்லாயிருக்கு.

ஏங்க காதலர்தினமும் அதுவுமா, பெண்களை பிசாசுன்னு சொல்றீங்க.