கண்ணனைப் போலவே மீட்பருக்கான
அனைத்து குறியீடுகளோடும் நிகழ்ந்தது ஏசுவின் பிறப்பு.
இறுக்கமானதொரு காலகட்டத்தில்
கொண்டாட்டங்களை மையப் படுத்தி உருவானது கிருஷ்ணம்.
அதுபோலவே கீழ்மைகளின் எக்களிப்புகளின் நடுவே இருக்கமும், ஒழுங்கும் விடுதலையும் வேண்டுவதாக எழும்பியது இயேசு வழி வந்த
கிருஸ்துவம்.
அஹம் பிரம்மாஸ்மி எனும் அத்வைத
இந்துத்துவத்தின் மகா வாக்கியமும், " நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்" எனும்
இயேசுவின் வார்த்தைகளுக்கும் வித்யாசம் ஏதுமில்லை.
நிறம் மாறிப்போன சைவ, வைணவ, பௌத்த, சன்மார்க்க மார்க்கங்களைப் போலவே பின்னாளில் கிருஸ்துவமும்
"என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்."" பிதா குமாரன்
பரிசுத்த ஆவி" என மாறிப்போனது.
ஒப்புமைகளைக் கொண்டு
நிறுவப்படுவதற்காக அல்ல கிருஷ்ணா,புத்தா, மஹாவீரர், வள்ளலார் எனும் முழுவதும் உணர்ந்த
பிரபஞ்சத்துளியான (fully conscious universal particle) யுக புருஷர்கள் வரிசையில் ஏசுவும் ஒருவர் என்று சொல்வதற்கான
பிரயத்தனங்களே இவைகள்.
இது போன்ற எந்த புரிதலுமின்றியே
கல்லூரிக் காலங்களில் கிருஸ்துவத்தை மனமுவந்து உள்வாங்க முடிந்த சூழல்
அமைந்தற்குப் பின்னும் சில காரணங்கள் இருக்கலாம்.
No comments:
Post a Comment