வெகு ஆழத்தில் சிக்கியிருக்கும் சிக்கலான ஒரு நூல் கண்டின் ஒரு முனை மட்டும் அவ்வப்போது வெளிவருகிறது.
கூடவே சிடுக்கான நினைவுகளையும் அள்ளி எடுத்தபடி இத்தனை வருடம் உள்ளூரிய உணர்வுக்குவியலுடன் ரணமாய் நிணமாய் வெளிக்கிடும் நிமிடங்களில் நம் காதுகளை விட மனமே அதி வேகமாய் செயல் படுகிறது.
சொற்களை தாண்டி உள்ளிருக்கும் முதிய மனத்தின் குகை இருட்டு வாழ்வில் நமக்கு எதையெதையோ சொல்லித் தருகிறது.
இன்று பௌர்ணமி, கூடவே சந்திர கிரஹணம். உடலில் மனதில் ஏற்பட்ட மாற்றங்களை உற்று கவனிக்க முடிந்தது. சுற்றிலும் இருக்கும் மனிதர்களை காணும் பொழுது ஒரு சிறிய இயல்பின்மை நூலிலும் மெல்லிய கோடாய் பரவியிருப்பது போல் தோன்றியது. அதிக வெய்யில், வெக்கை ஜாஸ்தி என்று ஆயிரம் காரணம் சொல்லிகொள்ள இருந்ததுதான்.
மேலும் இது வெறும் என் தோன்றலாய்க்கூட இருக்கலாம்தான்
கூடவே சிடுக்கான நினைவுகளையும் அள்ளி எடுத்தபடி இத்தனை வருடம் உள்ளூரிய உணர்வுக்குவியலுடன் ரணமாய் நிணமாய் வெளிக்கிடும் நிமிடங்களில் நம் காதுகளை விட மனமே அதி வேகமாய் செயல் படுகிறது.
சொற்களை தாண்டி உள்ளிருக்கும் முதிய மனத்தின் குகை இருட்டு வாழ்வில் நமக்கு எதையெதையோ சொல்லித் தருகிறது.
இன்று பௌர்ணமி, கூடவே சந்திர கிரஹணம். உடலில் மனதில் ஏற்பட்ட மாற்றங்களை உற்று கவனிக்க முடிந்தது. சுற்றிலும் இருக்கும் மனிதர்களை காணும் பொழுது ஒரு சிறிய இயல்பின்மை நூலிலும் மெல்லிய கோடாய் பரவியிருப்பது போல் தோன்றியது. அதிக வெய்யில், வெக்கை ஜாஸ்தி என்று ஆயிரம் காரணம் சொல்லிகொள்ள இருந்ததுதான்.
மேலும் இது வெறும் என் தோன்றலாய்க்கூட இருக்கலாம்தான்