Showing posts with label விசாரம். Show all posts
Showing posts with label விசாரம். Show all posts

Tuesday, November 7, 2017

குறியெதிர்ப்பை நீர துடைத்து - குறளின் மாற்று முகம்

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் 
குறியெதிர்ப்பை நீர துடைத்து.

இணையத்தில் கண்ட உரை. கிட்டத்தட்ட எல்ல உரைகளும் இதையொட்டியே அமைகிறது.

இல்லாதவர்க்கு வழங்குவதே ஈகைப் பண்பாகும். மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும்.

இந்தக் குறளை ஜெமோவின் குறளினிது உரையின் படி பார்க்கவேண்டும் என்று தோன்றியது.

அதன் படி நேற்றிலிருந்து இந்த ஒரு குறள் மட்டுமே உள்ளே ஓடிக்கொண்டிருந்தது.

இக்குறள் அறத்துப்பாலில், இல்லறவியலில், ஈகை எனும் அதிகாரத்தில் தொகுக்கப் பட்டுள்ளது. ஜெமோவின் ஆய்வின் கருத்துப் படி இந்த தொகுத்தல்கள் பிற்காலத்தில் நிகழ்ந்தவை. எனவே இதை அறத்துப் பாலில் மட்டும் வைத்துப் பார்க்கலாம்.

வறியார்க்கொன்றை ஈவதே ஈகை - தேவையான ஒருவர்க்கு கொடுப்பது அறம், இதை தேவையுள்ள இடத்தில் ஆற்றும் செயலாகக் கொண்டால் அதுவும் அறம்.

மற்றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து -

மற்றெல்லாம் - மற்ற எல்லா வினைகளும், அதாவது தேவையற்ற அனைத்து செயல்களும்(கர்மங்களும்) , இங்கே ஈகையை மட்டும் எனக் கொள்ளாதிருத்தல் வேண்டும்

குறியெதிர்ப்பை - எனும் சொல்லுக்கு கொடுத்த அளவே மீண்டும் வாங்கும் முறைமை என்ற பொருள் உள்ளது. எனவே நம்முடையை தத்துவப் பார்வையின் படி நாம் செய்யும் எல்லா வினைகளுக்கும் அதே விதமான எதிர்வினை உண்டு. எனவே இதை கர்மாவோடு தொடர்பு படுத்திக் கொள்ளலாம்.

நீரது உடைத்து - உன்னுடைய உடமையாகும்.

இப்பொழுது மொத்தமாக பொருள் கொண்டால்.

தேவை இருக்கும் இடத்தில் மட்டும் செயலாற்றுவதே அறம், மற்றெல்லா கர்மங்களும் எதிர்வினையையே தோற்றுவிக்கும்.

இதுக்கு பழந்தமிழ் ஆசான்களெல்லாம் வந்து அடிச்சா தாங்கிக்க வேண்டியதுதான் வேற வழி இல்ல.

ஆனால் அந்த உறையின் தாக்கம் மிக அதிகம் அதைப் பற்றி ஒரு தனித்த பதிவே எழுத வேண்டும்.

குறளின் மாற்று முகம்

கல்யாண வீடுகளில், அல்லது மிகப் பெரும் சமையல் கூடங்களில் இனிப்புக்கு என்று தனித்த மாஸ்டர் உண்டு. பெரும்பாலும் சமையல் செய்பவர்கள் அதைச் செய்வதில்லை. ஸ்வீட் மாஸ்டர், இது போலவே சில தனித்த பதார்த்தங்களுக்கான ஸ்பெஷாலிட்டி கலைஞர்கள் உண்டு. 

மேலும் ஒரு இலக்கிய வாதியைக் கொண்டு விளையாட்டையோ சமையலையோ அதன் நுணுக்கங்களை மைய்யப்படுத்தி எழுத வைத்தால் அவரால் முழுமையாக எழுத முடியாது. விளையாட்டு வல்லுனாரால் இலக்கியமும்.
இப்படி வரிசையாக சொல்லிக் கொண்டே போகலாம்.....

அதைப் போலத்தான் பழந்தமிழ் சித்தர் பாடல்களையும் அதற்கான பொழிப்புரைகளையும் வாசிக்கும் பொழுது இவைகள் பெரும்பாலும் தமிழுக்கு தமிழ் மொழி பெயர்ப்புக்களாகவே அணுகப் பட்டுள்ளது என்று தோன்றுகிறது. மிக மிக உண்மையான ஆன்மீக தளத்தில் அணுகி பொழிப்புரை செய்திருப்பது ஒரு சிலரே.

அதிலும் இணையத்தமிழின் உபயத்தில் பெரும்பாலான பாடல்கள் மிகவும் தவறாகவே பதம் பிரித்து எழுதப் படுகிறது. வாசிப்பதற்கு எளிமையாக இருக்க வேண்டும் என்ற காரணத்தால் பதம் பிரிக்கும் அனைவரும் அந்த பாடல்களின் உள்ளார்ந்த அனுபவம் அதனால் முற்றிலும் சிதைந்து போவதை அறிந்து கொள்வதில்லை.

திருக்குறளும் அது போன்றதொரு பெரும் பொக்கிஷம். முழுமையாக அந்த தளத்தில் நின்று பொருள் கண்ட பொழிப்புரையை நான் இன்னமும் காணவில்லை. அது ஒரு சமய நூலல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லப்பட்ட காரணத்தினாலேயே ஆன்மீகமாக குறள் அணுகப் படவில்லையோ என்று தோன்றுகிறது. சமணம் பேசும் ஆன்மீகம் மிகவும் ஆழமானது அதை அணுகி அறிவதென்பது பேரின்பம்


No automatic alt text available.

இல்வாழ்வான் யார் - குறளின் மறுபக்கம்

துறந்தார்க்குத் துவ்வா தவர்க்கு மிறந்தார்க்கு
மில்வாழ்வா னென்பான் றுணை.
துறந்தார் – 
1. இல் வாழ்க்கையை துறந்தார், பிரம்மசர்யத்தை மேற்கொண்டார், 2. சாதிவருண சமய குறிகளை, நெறிகளை துறந்தார்

துவ்வா தவர் – அனுபவிக்காதவர், துய்க்காதார் - 
1. இல்வாழ்க்கையில் இருந்தாலும் சிற்றின்பமாக அனுபவிக்காது இல்லற தர்மத்தில் வாழ்பவர்கள். 2. சாதி சமய நெறிகளை மிக முக்கியமாக கருதாதவர், கடை பிடிக்காதவர்

இறந்தார் - 
1. இந்த உடலின் இறப்பை எய்தியவர்,  2. சாதி சமய நெறிகளுக்கு முக்கியத்துவம் அளித்து இறந்தாரைப் போல் வாழ்பவர்

இல்வாழ்வான் என்பான் துணை – இந்த இடத்தில் என்பான் எனும் சொல்லே நமக்கு இக்குறளின் நுணுக்கங்களை ஆராய வழி வகுக்கிறது. இல்வாழ்வான் துணை என்று இருந்திருக்கலாம். அனால் இல்வாழ்வான் என்பான் துணை என்று சொல்வது இல்வாழ்கிறான் என்று சொல்பவனே துணை என்று பொருள் கொள்ள வேண்டும்.
இல்வாழ்வான் என்று சொல்லப்படுபவன் யார் – உள்ளே வாழ்பவன் எல்லோருள்ளும் வாழ்பவன் யார் அந்தப் பரம்பொருள் அவனே துணை.
இதை மற்றொரு கோணத்திலும் பொருள் கொள்ளலாம்.
ஒருவர் இந்த மூன்று நிலைகளில் எந்த நிலையில் வாழ்ந்தாலும் அவனுள் இருக்கும் பரம்பொருளின் நிலை மாறுவதில்லை எனவே எந்த நிலையிலும் முயன்றால் அவனைச் சென்றடைய தடை இல்லை.

Sunday, May 14, 2017

Entropy Vs Enlightenment – பகுதி 4

 (நிறைவுப் பகுதி - ஒரு வழியா முடிச்சிட்டேன் :) )
அந்த மரத்துண்டு கையில் இருந்து கிழே விழும் பொழுது ஏதேனும் தடை ஏற்பட்டு இடையில் ஒரு தளத்தில் தங்க நேரும் பொழுது சில சமயம் அது குவாண்டம் டனலிங் (Quantum Tunneling) கான்செப்ட் படி சுற்றி இருக்கும் ஆற்றல் சக்தியை பயன் படுத்திக் கொள்வதன் மூலம் தனது இருப்பைச் சென்று அடைகிறது. அவ்வாறு செயலாற்றும் பொழுது அதன் எடையற்ற தன்மையே இந்த டனலிங் முயற்சியின் முதல் காரணி.
இதில் மரக்கட்டைக்குப் பதில் பந்து ஒன்றை உருவகப் படுத்திக் கொள்வோம் என்றால் இன்னமும் இலகுவாக விளங்கிக் கொள்ள ஏதுவாக இருக்கும் -( a ball which is lacking the energy to penetrate a hurdle will become still. However In quantum mechanics, these particles can, with a very small probability, tunnel to the other side, thus crossing the barrier. Here, the "ball" could, in a sense, borrow energy from its surroundings to tunnel through the obstacle)
இப்பொழுது ஞானமடைதல் (enlightenment) என்ற நிலையில் நாம் எடையற்று இந்த உடலுக்கும் ஆன்மாவிற்குமான தொடர்புகளை முழுவதும் அறிந்து விலகும் முயற்சியில் உண்டாகும் தடைகளை இந்த பிரபஞ்ச சக்தியை உள்வாங்கிக் கொள்வதன் மூலமாக தாண்டி பிரபஞ்சத்தின் இருப்பினோடு ஒன்றிணைந்து விடுகிறோம்.
அப்பொழுதும் இந்த இருப்பு உள்ளது அனால் இந்த பிரபஞ்சத்தினோடு கலந்த ஒத்திசைவாக எந்த எதிர்வினையும் ஆற்றாத நிலைக்குச் சென்று விடுகிறது.
எனவே இருக்கிறது... ஆனால் இல்லை, அதாவது ஆன்மா தன் எண்ட்ரோபி நிலையை அடைந்து விடுகிறது.
அறிவியலாளருக்கு அது அறிவியல் ஆன்மீகர்களுக்கு அது ஆன்மீகம் அவ்வளவே.

Entropy Vs Enlightenment – பகுதி 3

ஒரு கை அகல மரக்கட்டையை எடுத்துக் கொள்வோம். அதை நாம் நம் மற்றொரு கையால் ஒரு குறிப்பிட்ட உயரத்தில் பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது அதற்கென செயல்படும் விசை இல்லை ஆனால் அதற்குள் பொட்டேன்ஷியல் எனர்ஜி (திறன்படும் செயல்) (Potential Energy - the energy possessed by a body by virtue of its position relative to others, stresses within itself, electric charge, and other factors) உள்ளது.
நாம் நம் கையில் இருந்து அதை விடுவிக்கும் பொழுது கைநெடிக் எனர்ஜியின் மூலம் (இயங்கு ஆற்றல்) (Kinetic Energy - energy which a body possesses by virtue of being in motion ) தரையைச் சென்று ஓய்வடைகிறது. ஆங்கிலத்தில் அதை Resting (be placed or supported so as to stay in a specified position ) என்று சொல்லலாம்.
அதாவது அதன் செயலற்ற தன்மைக்குள் செல்கிறது. இன்னமும் சொல்வதென்றால் அது தனது எண்ட்ரோபி நிலையை அடைகிறது. இன்னொரு விசை அதை இயக்குமானால் அது மீண்டும் இயங்கு நிலைக்கு மாறும் அதுவரை அது அந்த நிலையில் நீடித்திருக்கும்.
அதுவே அந்த மரக்கட்டையை நாம் ஒரு அரவை இயந்திரத்தில் இட்டு அரைக்கும் பொழுது அது துகள் துகளாக மாறி எடையற்ற நிலைக்குச் செல்கிறது இனி அது மரக்கட்டை இல்லை மரத்துகள், அதன் எடை மாற்றம், கொள்கிறது. . இதுதான் என்று தனித்து ஒரு துகளாக காணும் அடையாளமற்று அணு அளவு ஆகிறது. இப்பொழுது அந்தத் துகள் தரையைச் சென்று அடைந்ததும் அது காற்றுடனோ நீருடனோ, பூமியுடனோ (பஞ்ச பூதங்களில்) கலந்து விடுகிறதே தவிர மீண்டும் அது தனித்து இன்னொரு பொருளாக உருக் கொள்வதில்லை.
இதில் மற்றொரு பரிணாமமும் உள்ளது.....
தொடரும்....

Entropy Vs Enlightenment – பகுதி 2


இந்தப் பிறப்பில் நாம் என்பது இரண்டாக உள்ளது அதாவது உடல், மற்றும் அதனுள் இருக்கும் ஆன்மா. இதில் இந்த உடல் என்ட்ரோபியை அடைவதற்கு முன் அதனுள் இருக்கும் ஆன்மா என்ட்ரோபி அடைந்து விடுவதே என்லைட்மென்ட்.
அவ்வாறு அடைந்து விடுமென்றால் இந்த உடலுக்கும் ஆன்மாவிற்குமான தொடர்பு விடுபட்டு இந்த உடலின் கர்ம வினைகளோடான தளைகள் அற்றுப் போகிறது. அப்பொழுது இந்த ஆன்மா ஒரு துகளாக துளியாக இந்தப் பிரபஞ்சத்தில் கலக்கிறதே அன்றி இன்னொரு பிறப்பிற்கு ஏதுவாவதில்லை.
இங்கு வள்ளலார் ஒளி உடம்பாக ஜோதியில் கலந்ததை ஒரு புரிதலுக்காக நினைவு படுத்திக் கொள்ளலாம்.
அவ்வாறில்லாத பட்சத்தில் இந்த உடலின் எடையோடு கூடி அதன் கர்ம தளைகளை ஏற்று மற்றொரு பிறப்பிற்கு ஆட்படுகிறது.
இதை ஒரு சிறிய எடுத்துக் காட்டின் மூலமாக பார்க்கலாம்.
தொடரும்...

Entropy Vs Enlightenment - பகுதி - 1

பெரும்பாலும் எங்கள் வீட்டில் அம்மா மகன்களுக்குள்ளான உரையாடலில் ஆன்மீக அறிவியல் விசாராங்கள் அதிகம் இருக்கும். அவர்கள் அறிவியலாக அறிந்து கொண்டதை பகிரும்போது நான் அதை ஆன்மீகப் பார்வையில் விளக்குவேன். சிலசமயம் அவர்களே அதை ஆன்மீகப் பார்வையில் ஒப்புமைப் படுத்தி என்னிடம் கொண்டு வருவார்கள்.
இன்றும் அதுபோல நித்தா ஒரு வார்த்தைக்கான ஒப்புமையோடு வந்தான். அவன் அறிவியல் சொல்ல நான் ஆன்மீகம் சொல்ல பேசிப் பேசி ஒரு நிலையை அடைந்தோம்.
அந்த அறிவியல வார்த்தை Entropy. அதை  Enlightenment உடன் ஒப்புமைப் படுத்தி ஒரு விசாரம்.
எண்ட்ரோபி என்றால் இயற்பியல் பிராகாரம் “ a thermodynamic quantity representing the unavailability of a system's thermal energy for conversion into mechanical work, often interpreted as the degree of disorder or randomness in the system” இப்படித்தான் சொல்கிறது
அதாவது ஒரு பொருள் தனது செயல்படக்கூடிய ஆற்றல் சக்தியை விடுப்பதன் மூலமாக அடுத்து இயங்குவதற்கான நிலையற்று ஒரு பொருளாக தங்கி விடுகிறது. As per quantum physics, every body has to reach its ground state or vacuum state or ultimate resting stage. அதாவது ஒவ்வொரு பொருளும் தன்னுடைய சரிஇயல்பு நிலைக்கு, அதன் கடைசி இருப்பு நிலைக்கு சென்றாக வேண்டும்.
இன்னமும் சொல்லப் போனால் இந்த உடலின் பிறப்பு என்பது இறப்பாக மாறும் பொழுது அது எண்ட்ரோபி என்று சொல்லலாம். அதாவது உடல் இருக்கிறது ஆனால் அதனால் இயங்க முடியாது. எனவே எல்லா உயிர்களும் பிறப்பு இறப்பு சுழலில் ஒரு கட்டத்தில் என்ட்ரோபியை அடைகிறது. இது அறிவியல். இப்பொழுது ஆன்மீகப் பார்வைக்குச் செல்வோம்.

தொடரும்....