
இப்படித்தான் ஆகிவிடுகிறது
சில சமயம்
எண்ணுவதற்கு ஏதுமில்லாத சமயங்களில்
எப்போதேனும் வந்துபோகிறதுன் நினைவு
எப்போதும் சுமந்தலைந்தவைகளை
எப்படித்தான் எளிதில் தொலக்கமுடிகிறதென்ற
கேள்விகளுக்கிடையில்
இப்படித்தான் ஆகிவிடுகிறது
சிலசமயம்
*******************
படர்ந்த மாசுகளுக்கிடையில்
அடையாளமற்று கிடக்கும் நீர்நிலையென
உள்ளே உறைந்து போயிருக்கிறதுன் நினைவு
இருண்ட நிலவொளியில் கடந்து போகையில்
நெஞ்சக்கூட்டுக்குள் ஊடுருவும்
ஏரிக்கரைக்காற்று
நினைவுருத்திப்போவது
மாசினடியில் மறைந்திருக்கும்
நீர்நிலையை மட்டுமல்ல
