Showing posts with label முகமூடிக்கவிதைகள்.. Show all posts
Showing posts with label முகமூடிக்கவிதைகள்.. Show all posts

Saturday, February 12, 2011

முகமூடிக்கவிதைகள் - 12


இப்போதும் முகம் வெளிறிப்போகிறது
என்றோ கண்டுகொள்ளாமல் வந்த

அந்த சிகப்பு சட்டை மனிதனின் சடலமும

கூடவே கிடந்த அவன் வாகனமும்

மனவோரத்தில் நினைவுறும்போது


மனித நேயம் குறித்த எந்த ஒரு

விவாதத்திற்குப்பின்னாலும்

மவுனம் காக்க வைக்கிறதென்

மனநிழலில் கடந்து போகுமிந்த நிகழ்வு


**********************

முனைந்து செய்ய இயலாது
போனவைகளை
பட்டியலிடத் தேடத்

தொலைந்து போனதென்

எழுது கோலும் வெள்ளைதாள்களும்

பிறகென்ன

அத்தனை பாசாங்குகளுக்குள்ளும்

ஒளிந்து கொள்ள முயற்சிக்கிறது மனது



Thursday, March 25, 2010

முகமூடிக்கவிதைகள் -11


சில சமயம் எதுவும் வேண்டாமென
ஓடிவிடத்தான் தோன்றுகிறது
பிறகெங்கே என்ற கேள்விகளுக்கான
பதிலொன்றும் தெரியாததால் மட்டுமே
இருப்பு என்பது நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

கேள்விகள் தொலைந்துபோவதின்
நிகழ்வுக்களுக்கான நாளை
எதிர்பார்த்துக்காத்திருக்கிறோம்
மீளமுடியாது தொலைந்து போகாலமென
நாட்களை தள்ளிக்கொண்டும் இருக்கிறோம்
தெரிந்தும் தெரியாமலும்...

மீளவும் மறந்து போவதின் உண்டான
சௌகர்ய அசௌகர்யங்களுக்குள்
புதைத்துக்கொள்கிறோம்
அன்றன்றைய ஏமாற்றங்களையும்
நேற்றைய சந்தோஷங்களையும்


இருந்தும் ஏதோவொன்று எடுத்துச்செல்கிறது
அலையோடு புரண்டெழும் நுரையென

எப்போதும் நம்மோடு இருக்கும்
முகமூடிகளுக்குப்பின்னான
நாளைய நம்பிக்கைகள்.



Wednesday, November 19, 2008

முகமூடிக்கவிதைகள் - 5

ஜன்னல் கம்பிகளில்
சொருகிய
தீரைச்சீலையாய்
மனது சிக்கிக்கொள்கிறது
ஏதேனும் ஆழத்தில்

வார்த்தைகளை
உதைத்து உதைத்து
வெளிவருகிறது
மனம்



***********************

தவறாகப்புரிந்துகொள்ளப்படுமென்று
விழுங்கிய வார்த்தைகள்
விருட்சமானது

காய்களோ கனிகளோ
ஏன்
பூக்களோ இல்லாத
விருட்சத்திற்கு
நிழலுமில்லை.


*******************************


Friday, October 10, 2008

முகமூடிக்கவிதைகள் - 3



நடைமேடை தூண்களுக்கு

இடயே

தெரியும்

விரைத்த கால்களும்

அதை சுற்றி நின்ற

கால்களில் இருந்த

தயக்கங்களூம்

தரும்

அச்சத்தை

தாண்டியும்

மனம்

நிம்மதித்தது

அவர்

நமக்கு

தெரிந்தவரில்லை

என்பதில்


*******


வாழ்க்கை

மிகவும்

சிக்கலாகித்தான் போனது

வாழ்த்துக்களின்

தடமும்

புரிந்தபோது.