Showing posts with label முகமூடிக்கவிதைகள். Show all posts
Showing posts with label முகமூடிக்கவிதைகள். Show all posts

Thursday, May 21, 2015

முரண் உணர்வுகள் - முகமூடிக்கவிதைகள்

தர்க்கங்களற்று சிறு குழந்தையாய்
இருந்திருக்கலாம் - அல்லாது
குழந்தமையை தொலைக்காது
உண்டு உறங்கி களித்து அன்பு செய்து
வாழ்ந்திருந்திருக்கலாம் - நாமோ

அத்தனையும் தொலைத்து விட்டு
நிணமும் இரணமும் மனதில் ஏந்திய மாக்களாய் வாழ தலைப் பட்டுவிட்டோம்...இங்கனமே வாழ்ந்து வீழ்வோமா இல்லை
தெளிந்து விலகுவோமா..

தர்க்கங்களின் கரம் பற்றி நாளும் நடக்கிறேன் வாழ்வின் முரண்களை உணர்ந்த்படி !!!

Monday, June 15, 2009

முகமூடிக்கவிதைகள் - 8


ஆணுக்கான அடையாளமாய்
காமத்தையும்
பெண்மையின் குறியீடாய்
காதலையும்
சொல்லியாயிற்று

எதிரெதிர் துருவங்கள்
ஈர்க்குமென்பது மாறி
இணையெதிர் துருவங்களுக்கு
நிரூபிப்பதற்கும்
என்றாயிற்று


பொய்மையும் வாய்மையிடத்து
முகமூடிகளின் வாழ்க்கையில்
நன்மை பயக்குமெனில்....

Wednesday, April 8, 2009

முகமூடிக்கவிதைகள் - 7

அழு
ஆவேசப்படு
அடங்கு
அடுத்த வேளை
சோற்றுக்காக
அனுசரித்துப்போ

நின்று சிரித்து
வெளுக்கும்
மானுடத்தின் சாயம்

********************

மீண்டும் மீண்டும்
நுகரத்துடிக்கும்
பூவின் மணம் போல
எப்போதும்
பேசத்துடித்திருக்கும் மனது

எட்டிப்பார்த்து பின்
தட்டிக்கேட்டதும்
உள்ளடங்கிப்போகும்
உணர்வுகளின் வடிகால்
இசையாகவோ
கவிதையாகவோ
ஒரு சில நேரம்
சிடுசிடுப்பாகவோ
ஆகலாம்.

Thursday, October 16, 2008

முகமூடிக்கவிதைகள் - 4



இயலாமை

பரிதாபங்களை யாசித்தல்
கழிவிரக்கத்தை தறுவதாயிருக்கிறது.

இயலாமைகளை உரத்துச்சொல்வதை
தடுக்கிறது சுயமரியாதை

நடப்பின் இருப்புகளை
உதறவோ உடைக்கவோ முடியாத
இயல்பின் மனநிலையில்
கரம்நீட்டித்தரும்
உதவியின் கோப்பைகளை
உடைத்தெறியத்துடிக்கிறது மனது

ஏனெனில்
யாசித்தலின் எதிர்மறையாய்
இதையேனும் செய்வதில்
நிம்மதிக்கிறது "இயலாமை."

Thursday, September 25, 2008

முகமூடிக்கவிதைகள் – முகமூடியின் கவிதைகள்

01. குறுக்கும் நெடுக்கும்

கோடுகள் ஏதுமின்றி

நீண்டு செல்கிறது

நெடுஞ்சாலையின்

மஞ்சள் கோடு

வாழ்க்கை

அதுபோலில்லை

அது போலியில்லை




02. நாய்களோ

பூனைகளோ

குதிரைகளோ

எனக்கு நெருக்கமில்லை

உருவகப்படுத்த

விலங்கினம் தேடினேன்

என்னுள்ளிருக்கும்

தாழ்திறவா

ஆரண்ய கதவுகளில்

இடமில்லை அட்டைகள்



03. பயணங்கள்

தன் இலக்குகளை

இன்றில்லாவிடினும்

நாளை அடையலாம்

சமரசங்களற்றபோது