Showing posts with label மொக்கை. Show all posts
Showing posts with label மொக்கை. Show all posts

Monday, May 11, 2009

வா வாவென அழைக்கும் காடு

பிள்ளைகளுக்கு லீவு விட்டாச்சு, பெரியவன் 12 வது செல்கிறானென்றாலும் இடையில் ஒரு 20 நாட்களுக்கும் மேல் விடுமுறை கொடுத்துள்ளார்கள் பள்ளியில். பள்ளி வகுப்புகள் தவிர வேறு வகுப்புகளுக்குச்செல்லாததாலும். உள்ளங்கையும் காலும் அரிக்கத்துவங்கிவிட்டது எங்காவது சென்று வரலாமென்று மனதும் சதா புலம்பத்துவங்கியது.

திடீரென்று மே 1 வெள்ளி காலை சரி கிளம்பலாம் என்று முடிவானது. எங்கு செல்லலாம். கிட்டத்தட்ட 2 வருஷமா போகனும்னு சொல்லிகிட்டிருந்த ஒரு இடம் இன்னம் போனபாடில்லை அதனால

கொல்லி மலை – எல்லா ஹோட்டல்களுக்கும் தொலைபேசினால் ஒன்றில் கூட தங்குவதற்கு இடமில்லையாம் (எல்லாரும் எங்களைப்போலவா இருப்பாங்க முன்கூட்டியே 3 நாட்களுக்கு பதிவு செய்து விட்டார்களாம்)

சரி வால்பாறைக்குச்செல்லலாம் வழியில் எங்கா
வது தங்கிவிட்டு ஞாயிறன்று அங்கு செல்வது போல் அமைத்துக்கொள்ளலாம் என்று முடிவானது. மதியத்திலிருந்து அறைகிட்டும் என்று சொன்னதால் வால்பாறைதான் என்று கிளம்பியாச்சு.

திண்டிவனம் தாண்டியதும்தான் ரெங்கமணி மசினகுடி போனா என்ன என்று கேள்வியெழுப்பினார். ட்ரக்கிங், மரவீடு, இரவுநேர
சபாரி என்று அங்குள்ள வசதிகளைச்சொன்னதும் பிள்ளைகள் ஓட்டு மசினகுடிக்கே விழுந்தது. சரி மசினகுடி என்று முடிவாகி வண்டி சேலத்தை நோக்கி திரும்பியது. உளுந்தூர்ப்பேட்டை, ஆத்தூர் சாலை ஒரு 80 கிலோமீட்டர் தூரைத்தை கடப்பதற்குள் நொந்து நூடுல்ஸ் ஆனோம். ஒருவழியாக இரவு 11 மணிக்கு சேலத்தை அடைந்து அங்கு ஒரு வழியோர விடுதியில் தங்கிவிட்டு விடியற்காலையில் கிளம்பி ஊட்டி ஒரு நாள் பிறகு மசினகுடி என்று முடிவு செய்து கிளம்பினோம்.

ஊட்டியில் வழக்கமான ஹோட்டலில் இடம் கிடைத்தபாடில்லை ஆனால் தெரிந்தவர்கள் என்பதால் அவர்கள் சிபாரிசின்
பேரில் கொஞ்சம் சுமாரான ஒரு விடுதியில் அறைகிடைத்தது சரி ஒரு நாள் தானே சமாளித்துக்கொள்வோம் என்று தங்கிவிட்டோம்.

நாங்கள் தங்கிய அறையிலிருந்து ஊட்டி...







கூட்டம் கூட்டம் கூட்டம் வேறென்ன। அப்படி ஒரு கூட்டம் கூடவே அங்குள்ள போக்குவரத்து நெறியாளர்கள் செய்யும் கெடுபிடியில் பக்கத்தில் இருக்கும் தெருவிற்குப்போய் வரக்கூட 3 கிலோ மீட்டர் சுற்றவேண்டிய நிலமை.

போக்குவரத்து நெரிசல் ஒரு காட்சி

சரி வந்ததுக்கு போட்டிங்காவது போகலாம்னு போனோம். அப்புறம் அங்குள்ள வேக்ஸ் ஹவுஸ் சென்று பார்த்தோம் உண்மையில் மிகவும் நன்றாகவே உள்ளது. அதுவும் ஒருசிலரின் சிலை மிகவும் தத்ரூபமாக அமைந்துள்ளது.

ஆனாலும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஞாயிறு காலையே மசினகுடியை நோக்கி வண்டிகட்டிவிட்டோம்


அங்கே போனால் மிகப்பெறும் ஏமாற்றம் சென்னையை விட வெயில் சற்று கூடுதலோ என்று எண்ணும்படி அத்தனை வெயில். ரிசார்ட்டுகளில் மதியமானதால் இடமிருந்தது ஆனால் இந்த வெயிலில் அங்கு தங்கி என்னசெய்யப்போகிறோம் இரவு ஒரு வேளை குளிரடித்தாலும் அடிக்கலாம் என்று எதிர்பார்த்து ரிசார்ட்டுகள் கேட்கும் பைசாவை செலவிட மனமில்லை..

சரி அடுத்து எங்கே என்று கேள்வி எழும்பொதுதான் சட்டென்று தோன்றியது வயநாடு எண்ட அம்மே எந்து பறயாம் ஆ அனுபவத்தினே. பட்சே தீர்ச்சயாட்டு பறையனும்.. அதுகொண்டு பின்ன பறயாம்……

Sunday, December 28, 2008

எப்படி இருக்கும்? எப்படி இருக்கும்?


ஊருக்கே ஏசி போட்டா எப்படி இருக்கும்?
தமிழ் நாட்டுல கலப்படமில்லாத நல்ல சாட் ஐட்டம் கிடைச்சா எப்படி இருக்கும்?
3 கிலோ மீட்டர் தூரத்தை வெறும் 30 ரூபால வாடகை டாக்ஸில கடக்க முடிஞ்சா எப்படி இருக்கும்?
அப்பப்ப சூடா ரசகுல்லா சாப்பிட்டா எப்படி இருக்கும்?
இஷ்டத்துக்கு மீட்டா தை என்று சொல்லப்படும் இனிப்பு தயிர் சாப்பிட்டா எப்படி இருக்கும்?
இதோடு கூட இலக்கிய + தெய்வீகமான அனுபவமும் கிடைச்சா எப்படி இருக்கும்?
இத்தனைக்கும் மேல உக்கார வைச்சு மூணு வேளையும் விதம் விதமா சாப்பாடு போட்டா எப்படி இருக்கும்?

சரி ரொம்ப நான ரொம்ப மொக்கல..(அதாவது மொக்கை போடல)

நான் இப்ப
கொல்கத்தால இருக்கேன்.....

சென்னைல கடும் வெயில் இல்லாட்டா மழைன்னு இருக்கற நம்ம மாதிரி பாவப்பட்ட ஜனங்களுக்கு எப்பவும் கம்பளி சட்டை போட்டு கால்ல சாக்ஸ்னு சொல்லப்படும் காலுறை போட்டுகிட்டு மிதம்/அதிகமான குளிர்ல ரோட்டுல நடக்கனும்னா எவ்ளோ சந்தோஷமா இருக்கும்னு சொல்லித்தான் தெரியனுமா???

கொஞ்ச நேரம் தலையில் மறைப்பின்றி வாசலில் நின்றால் போதும் உள்ள வந்து தும்மி கிட்டே இருக்கலாம்(என் பெரிய பையன் அனுபவம் அவனுக்கு சைனஸ் தொந்தரவு) உடம்பெல்லாம் சில்லுனு, நடந்து கிட்டே இருந்தா தப்பிச்சோம்। (அதாவது தொடர்ந்து ஆக்டிவா இருந்து கிட்டே இருக்கனும்) கொஞ்சம் சோம்பேறி, தூக்கம் வருதேன்னு தூங்கிப்போயிட்டோமின்னா எழுந்திருக்கும் போது கூடவே காய்ச்சல் வந்த மாதிரி ஒரு உணர்வு॥ அப்பப்பா வார்த்தைல சொல்ல முடியல அந்த உணர்வை। ரொம்ப சுகமா நல்ல அனுபவமா இருக்கு. இதுல கொடுமை என்னான்னா என் சின்னப்பையனுக்கு இங்கயும் ராத்திரி தூங்கறதுக்கு ஃபேன் வேண்டியிருக்கு (???)

அக்கா ரொம்ப அருமையா உக்கார வைச்சி சாப்பாடு போடறாங்க கூடவே சின்ன சின்ன ஷாப்பிங், அங்க நடக்கற ஆன்மீக, இலக்கிய கூட்டங்களுக்கு போற வாய்ப்பு இப்படியாகத்தானே என் 2008 வருஷக்கடைசி போயிட்டு இருக்கு.

போட்டா இல்லாத பதிவு போட முடியுமா அதனால அங்க நடந்த ஐய்யப்பா சமூகத்திலேர்ந்து நடத்திய சாஸ்தா பிரதி முடிவு அன்னிக்கு நடந்த கோலகலத்திலேர்ந்து சில போட்டோ. நாம இருக்கறது தமிழ்நாடா, கேரளாவா இல்லை மேற்கு வங்கமான தெரியாத அளவுக்கு நம்மை மறக்கடிச்சிட்டாங்க ரொம்ப இனிமையான அனுபவம். தன் வயது மறந்து, வேலை மறந்து, சொந்த இன்ப துன்பங்களை மறந்து எல்லோரும் ஒன்று கூடி இருந்த அந்த இனிமையான உணர்வுகளோட சங்கமத்தை பார்க்கும் போது நாமெல்லாம் சொந்த ஊரு மாநிலத்தை விட்டு போனத்தான் இத்தனை ஒற்றுமையா இருப்போமோன்னு தோன்றியது.

வாழ்க மானுடம்.

அப்ப வருஷக்கடைசிக்கு ஒரு பதிவு போட்டாச்சு.... அடுத்த வருஷம் சந்திக்கலாம் நன்பர்களே..... இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

Thursday, March 20, 2008

சொனாட்டா கோல்டும் மாம்பலம் குறுக்குச்சந்தும்.

11 கி.மீ துரத்தை 20 நிமிஷத்தில் சென்னை வாகன நெரிசலில் கடந்து செல்ல முடியுமா??? முடியும் 11 கி.மீ 14 கி.மீ ஆவதை பொருட்படுத்தாமல் பிரதான சாலை சிக்னல்களை விலக்கிவிட்டு தட்டு முட்டு சந்துகளில் புகுந்து புறப்பட்டால் உங்களால் வெகு எளிதில் 20 நிமிடங்களில் கடந்து விடலாம்.

என் ஆபிஸ் மாறினப்புறம் மொதல்ல கொஞ்ச நாளைக்கு ரொம்ப பொறுப்பா என்னோட 2 வீலர்ல என் வீட்டில் இருந்து புறப்பட்டு பிரதான சாலை வழியாக (ஏன்னா மத்த வழி எல்லாம் தெரியாது) எல்லா சிக்னலிலும் நின்று ஒரு 40 நிமிஷ நேரத்தில் அலுவலகத்திற்கும். பின் அலுவலகத்தில் இருந்து 50+ நிமிஷத்தில் வீட்டிற்கும் போவது வழக்கம். சில சமயம் இரங்கமணி கொண்டு விடுவது வழக்கம் அது போன்ற சமயங்களில் காரில் ஏறியவுடன் ஒரு முடிவு செய்து கொள்வேன் “இவர் போகும் வழிகளை நன்கு பார்த்து வைத்துக்கொள்ளவேண்டும்”(ஏன்னா எப்படியோ சிக்னலே இல்லாத ரோட்டுல போயி வேகமா கொண்டு விடுவது வழக்கம்) பின் நாமும் அது போல போகலாம் என்று முடிவு செய்து கொள்வேன். ஆனால் வழக்கம் போல் ஏதாவது பேச ஆரம்பிப்பேன் இல்லேன்னா அவர் ஏதாவது பாட ஆரம்பிப்பார் (எங்க வீட்டு இரங்கமணி அவ்ளோ நல்லா பாடுவாரு) நான் என் பிரதிஞ்ஞைகளையெல்லாம் மறந்து பேச்சு/பாட்டில் மும்மராமாகி ஆபிஸ் வாசல் வந்ததையே அவர்தான் சொல்லித் தெரிஞ்சுக்கரமாதிரி ஆயிடும்.

ஆனால் இப்பெல்லாம் (அதான் 3 வருஷம் ஆயிடுச்சே) தி.நகருக்குப்போகும் அத்தனை குறுக்குச்சந்தும் எனக்கு மனப்பாடம். நான் திருப்ப வேண்டிய அவசியமே இல்லாம என் வண்டி தானே திரும்பி போற அளவுக்கு பழக்கம் ஆயிடுச்சு. எங்க ஹார்ண் அடிக்கணும் எங்க மெதுவா போகணும் இது போன்ற இன்னபிற நுணுக்கங்களுக்கு கூட என் மூளையின் கட்டளைகளை என் வண்டியோ என் கைகளோ எதிர்பார்பதேயில்லை ஒரு தானியங்கி சாதனம் மாதிரி போயிகிட்டே இருக்கும். ஆனா இதுல இருக்கற ஒரு பெரிய தொல்லை பத்திதான் இந்த பதிவே (தலைப்புக்கு வரவேண்டாமா அட்லீஸ்ட் தமிழ் சினிமா மாதிரி கடைசிலயாவது சொல்லித்தானே ஆகணும்.)

இப்படி வர முட்டுச்சந்துகளின் மொத்த அகலத்தில்

01. இரண்டு இரு சக்கர வாகனங்கள் எதிரும் புதிருமா ரொம்ப வசதியா போகலாம், (ஏன்னா எல்ல சந்திலேயும் அடுக்குமாடி குடியிருப்பு இருக்கும் அது வாசல்ல அவங்கவங்க 2 வீலர் இருக்கும்)
02. ஒரு நான்கு சக்கர வாகனம் ஒரு புறமாக போக மட்டுமெ செய்யலாம். (அதுவும் மாருதி ஆல்டோ, 800, பழைய மாருதி ஜென், மாருதி ஆம்னி போன்றவைகள் மட்டுமே , ப்ரிமியர் பத்மினிய இதுல சேர்க்க மாட்டேன் ஏன்னா திடீர்னு திருப்பணும்னா ஓட்டுநர் ஒரு ஹெவி வெகிக்கிள் லைசன்ஸ் வைச்சிருந்தார்னாத்தான் முடியும்)
03. ஒரே ஒரு மீன்பாடி வண்டி (சென்னை நகரவாசிகளுக்கு இதன் மகத்துவம் நல்லாவே தெரியும்) ஒரு புறமாக போக மட்டுமே முடியும்.
04. ஒரு ஆட்டோ போகலாம்( இவங்களுக்கு ஒரு/மறு புறமெல்லாம் கிடையாது எங்க வேணா எப்ப வேணா திரும்புவாங்க பின்னாடி வர்ரவங்க அதை அனுசரித்து ஒட்டினா அவங்கவங்களுக்கு நல்லது).

ஒரு முக்கியமான் விஷயத்தை விட்டுட்டேன், ஒவ்வொரு சந்துலேயும் ஒரு மாநகராட்சி குடிதண்ணீர் தொட்டி இருக்கும் அதற்கு தண்ணி வினியோகம் செய்ய எப்ப வேணா மாநகராட்சி வாகனங்கள் வரும் அந்த நேரங்களில் எந்தப்பக்கமும் வாகன போக்கு வரத்து இருக்காது (ஏன்னா மொத்த தெருவையும் அந்த வாகனம் தான் அடைச்சு நிக்குமே).

இந்த அழகில பல 4 சக்கர வாகன ஓட்டிகளும் இந்த தெருக்களை தாண்டிச்செல்வதையே குறிக்கோள்களாகக்கொண்டு வருவது வழக்கம் அப்பெல்லாம் எனக்கென்னமோ அவங்கள பார்த்த கோட்டு சூட்டு போட்டு கிட்டு பஞ்சுமிட்டாய் சாப்பிடர மாதிரியும், மடிசார் புடவை கட்டிகிட்டு மீன் வாங்கற மாதியும் தோணும். இன்னக்கி எல்லாத்தையும் தூக்கி சாப்டுவது போல இது போன்ற ஒரு குறுக்குச்சந்தில் ஒரு நல்ல ஹுண்டாய் சொனாட்டா கோல்ட் கார ஒட்டிகிட்டு வந்தார் ஒரு கனவான். கரெக்டா இவரு நடு தெருவுக்கு வரவும் மாநகராட்சி தண்ணி வாகனம் வரவும் ரொம்ப சரியா இருந்தது. பின்னாடி வந்த எங்களைப்போன்றவங்க ரொம்ப சமயோசிதமா இந்த சொனட்டா கோல்டை தாண்டி போகலாம்னு முயற்சி பண்ணினா இதையெல்லாம் முன்னமே உணர்ந்த ஆட்டோ எங்களை முந்திகிட்டு தாண்டிப்போக முயற்சித்து அந்த அடுக்குமாடி குடியிருப்புக்காரரின் 2 வீலரை இடிச்சு ஒரே ரகளை டிராபிக் நின்னாச்சு, சரி பின்னாடி போயிடலாம்னு பார்த்தா , ஆட்டோ, ஒரு காரு, நிறைய 2 வீலர், அப்புறம் ஒரு மினிலாரி, எங்க திரும்பறது ஒரு 15 நிமிஷம் எந்த வழியும் இல்லாம நின்னு மாநகராட்சி வண்டிக்காரனை கெஞ்சி கூத்தாடி பின்னாடி போக வெச்சு (அதுக்குள்ள அது பின்னாடி ஒரு 10 /25 வண்டி வந்தாச்சு – ஆனா இந்த மாதிரி சமயத்தில சில திடீர் பரோபகாரிகள் வந்துருவாங்களே) நாங்க அந்த இடத்தவிட்டு வர்ரதுக்குள்ளே வந்த எரிச்சல்ல தமிழ்மணத்துக்கு ஒரு பத்து பக்க மொக்க போடனும்போல ஆச்சு.

தி மாரல் ஆப் தி ஸ்டோரி இஸ்… இதனால் யாவருக்கும் சொல்லவருவது என்னவென்றால் இவ்வளவு பெரிய காரையெல்லாம் எந்த காரணத்துக்காகவும் இந்த மாதிரி சின்ன சந்துக்கு கொண்டு வராதீங்க அது உங்க காருக்கும் மரியாதை இல்ல எங்க மாதிரி பொது ஜனத்துக்கும் நல்லதில்ல.

Friday, December 21, 2007

முதன் முதலில் ஒரு மொக்கை - பரீட்சையும் நானும்


எல்லாரையும் போல எனக்கும் பள்ளிக்கூடம் பிடிக்கும், பாடம் பிடிக்கும் ஆனா பரீட்சை பிடிக்காது। நாம யாருங்க? எவ்வளோ பெரியவங்க? புத்திசாலி! இந்த பீசாத்து 3 மணி நேர பரீட்சையா நம்ம புத்திசாலித்தனத்தை முடிவு செய்ய முடியும்?? தேர்வுக்கு ஒரு நாள் முன்ன படிக்க அதாவது புத்தகத்தை எடுத்து கையில் வைத்துக்கொள்வதேடு சரி. அப்பா அம்மா கேக்கும் போதெல்லாம் ம் படிச்சிட்டேன்॥ இல்ல இந்த தடவ நல்ல மார்க் வரும்.. ஆமா போனதடவ மாதிரி இல்ல என்ற வழக்கமான டயலாக் எல்லாம் விட்டுட்டு ஒரு மாதிரி பொழுத கழிச்சிட வேண்டியது. ஸ்கூலுக்கு போய் கொஸ்டியன் பேப்பர் வாங்கினதும் நம்ம மார்க் கொண்டுபோய் கொடுத்ததும் அம்மா அப்பா முழிப்பாங்களே அந்த மாதிரி திரு திருன்னு முழிக்க வேண்டியது ஏதோ 3 மணி நேரம் கஷ்டப்பட்டு தெரிஞ்சதை, தெரியாததை எழுத வேண்டியது அல்லது எழுதரமாதிரி நேரம் கடத்த வேண்டியது அப்பறம் பிரண்ட்ஸோட (கேள்வித்தாள் பற்றி பேசாத பிரண்ட்ஸோட) வீட்டுக்கு வந்து அடுத்த பரீட்சைக்கு படிக்க???? வேண்டியது. 10 நாள் கழிச்சு மார்க் வந்தா என்ன ஆகும் தனியா வேற சொல்லணுமா??? அப்பா ஒன்னும் அதிகம் சொல்ல மாட்டாரு ஆனா அம்மா அடுத்த பரீட்சை வரைக்கும் சொல்லிக்காட்டிக்கிட்டே இருப்பாங்க அப்பெல்லாம் ரெண்டு காதும் ஒழுங்கா வேலைசெய்யும் அதாங்க இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்றவேண்டியதுதான். அதிலும் கதை புஸ்தகம் எடுத்தா சரியா மாட்டுவேன் ஆனா இதெல்லாம் நம்ம அறிவு பசிக்கு??? தடை போடுமா என்ன? அதுக்கப்பறம் ராத்திரி 2 மணிக்குத்தான் எங்களுக்கு படிகிற மூடு வரும் ஏன்னா அப்பத்தான் அதிகம் தொந்தரவு இல்லாம கதை புஸ்தகம் வாசிக்கலாம். அம்மா ஒரு தடவையோ ரெண்டுதடவையோ தான் எந்திருச்சி வருவாங்க அதுக்குள்ள நாம எவ்வளோ படிச்சிறுவோம்…??? படிச்சி முடிச்சி ஏதோ பாஸ் பண்ணி பெரியாளா ஆயாச்சி!!!!.

ஆனா இப்பத்தான் ரொம்ப வருத்தமா இருக்கு அப்ப ஒழுங்கா படிச்சிருக்கலாமோன்னு அடிக்கடி தோணுது ஏன்னா இப்ப என் பசங்களுக்கு பரீட்சைனா நாந்தான் படிக்கறேன் ஒரு பாடம் விடாம எங்கிட்ட கொஸ்டியன் பேப்பர் குடுத்தா நல்லா மார்க் வரும் போல இருக்கு அவங்க படிக்க ஒக்கார்ந்தா கூடவே நானும் படிக்க ஒக்காரரேன் ஏன்னா எனக்குத்தான் தெரியுமே எப்படி படிப்பாங்கன்னு.. ம்ம்ம் எல்லாம் நேரம்தான்.

(மிகவும் பிரயத்தனப்பட்டு முதன் முதலில் ஒரு மொக்கை பதிவு அதுவும் பழகு தமிழில் எழுதியிருக்கிறேன் எப்படி இருக்குன்னு சொல்லிடுங்க தங்கங்களா)