பிப்ரவரி 14 எந்த ஒரு கவனிப்பும் இன்றி கழிந்து சென்றது என்னுள் கேள்வியை எழுப்பியது என்ன ஆச்சு எனக்கு? எனக்குள் காதல் செத்து விட்டதா.... தேடிப்பார்த்தேன் நல்லவேளை இல்லை.... ஆழப்புதைந்திருக்கும் உணர்வுகளில் ஒளிந்திருக்கும் உண்மை.மிக மெல்லிய காதல் கவிதை.
எப்போதும் கனவுகளில்
பார்த்தேயிராத தெருக்களில் பயணித்திருக்கிறேன்
ஓட்டியே இராத கார்களின் வட்டுவம் பிடித்து மைல்கணக்காய் காரோட்டியிருக்கிறேன்
பறந்து செல்லும் பறவைக்கூட்டத்தினரோடு நானும் பறவையாய் பறந்திருக்கிறேன்
மிதந்து செல்லும் ஆற்றின் சுழிகளில் சுழன்று வீழ்ந்திருக்கிறேன்
தொலைந்து போன பால்யத்தின் கதவுகளை திறந்து பார்த்திருக்கிறேன்
01. சமாதனங்கள் ஆசுவாசங்கள் இடைவெளிகள் பிறப்பு இறப்பு கண்ணீர் கவலை இவைகளின் இடையே இன்றைய சந்தோஷம்
02. இலக்கியம் புடலங்காய் கவிதை கத்தரிக்காய் கதை அவரைக்காய் கட்டுரை வெண்டைக்காய் இவையெதையும் செய்தது நானில்லை பின்னெப்படி உப்புக்கும் சுவைக்கும் நான் பொறுப்பு???
03. சில உணர்வுகள் வார்த்தைகள் எப்போதும் உடனிருக்கும் அன்பு காதல் துரோகம் இடைவெளி சாவு கோபி சம்பத் நிழல்கள் நவீனன் போல
பொய்-வாய்மையோடும் இன்ப-துன்பத்தோடும் சுக-துக்கத்தோடும் பகலிரவோடும் சந்திர-சூரியனோடும் ஆண்-பெண்ணோடும் இரண்டோடே வாழும் த்வைதமான வாழ்க்கையில் இரண்டல்லாத பிரம்மம் தேடி அத்வைதம் காணும் வழி உண்மையோடு உறவாடும் உன்னதமான வாழ்வென்ற பால பாடம் கற்றுக்கொள்ள ஆயுளில் பாதியானதே….
உன் தூர்ந்துபோன சிந்தனைகளோடான வாழ்வியல் பார்வைகளை மாற்றிக்காட்டுகிறேன் வா..
எந்த ..யிஸங்களின் வர்ணப்பூச்சுக்களும் இன்றி தன்னியல்போடு மட்டுமே என்னோடு வா
முன்னெப்போதும் உண்டான சாயல்களின் துணையின்றி சார்புகளற்ற சிந்தனையோடு மட்டுமே என்னோடு வா
உலர்ந்து போன உணர்வுகளை இன்னும் சுமந்து திரியாது இப்போதைக்கிப்போதே வாழ்வோம் என்ற எண்ணக்கிடைக்கையோடே என்னோடு வா
கடந்தும் நடந்தும் போன காயங்களின் சுவடின்றி உன் கரம் பிடித்தழைத்துச் செல்ல நானுண்டு இங்கே
ஆயிரமாயிரம் கரங்கள் பற்றி நானெப்போதும் நடந்து செல்லும் என் பாதைகளில் உன் கால்கள் பூக்களையும் முட்களையும் சமமென பாவிக்கும் அவதானிப்புக்களின் இரகசியங்களை நானுக்கு கற்பித்து தருகிறேன் வா
எனக்கு குரு, கடவுள், காலம் எனப்பெயர்கள் பலவுண்டு என்னோடு சுமைகளின்றி தனியனாய், தன்னியல்போடு வா
உன் தூர்ந்துபோன சிந்தனைகளோடான வாழ்வியல் பார்வைகளை மாற்றிக்காட்டுகிறேன்.