Saturday, November 14, 2009

கொற்றவை - ஒரு பகிர்தல் - பகுதி 1

"பரலோகத்திலிருக்கும் எங்கள் பிதாவே எங்கள் பாவங்களை மன்னித்தருள்வீராக"
சொற்களில் உறைந்திருக்கும் இறைஞ்சுதல்கள் வெளிப்படுத்தும் பாவனைகள் கண்கூடாக இப்பிரயோகத்தில் காணக்கிடைப்பது போல்
உள்ளே உணர்ந்து உறைந்து கிடைக்கும் எண்ணங்களை முழுவதும் காட்சிப்படுத்தும் ஆவலோடுதான் இந்தப்பதிவை
எழுதத்துவங்கியுள்ளேன்.

கடந்த வருட ஆரம்பத்தின் புத்தகத்திருவிழாவில் வாங்கிய கொற்றவையை உடனே படிக்க வேண்டும் என்ற ஆவலற்று அடுத்து இதைப்படிக்கலாமா அதைப்படிக்கலாமா என்ற எந்த அலம்பலகளும் இல்லது ஆர அமர இருந்த வெற்று மனநிலையின் ஒரு பொழுதில் வாசிக்கத்துவங்கினேன்

பொதுவாக எந்த முன்மதிப்பீடுகளுமற்று படைப்புகளை அணுகுவதே மிகச்சிறந்த வழியென்று அறிந்திருந்தும், பல சமயம் உணர்ந்திருந்தும், ஏனோ "கொற்றவை" யைக்குறித்த நன்பர்களின் விமர்சனங்களும், பொதுவில் எனக்கு அறியக்கிடைத்திருந்த அந்த புத்தகத்தின் மொழி வழக்கு பற்றிய எச்சரிக்கையும் என்னுள் சிறிய இனந்தெரியாத எதிர்பார்ப்புக் கொப்புளங்களை உருவாக்கித்தான் விட்டிருந்தது। கூடவே அப்படி என்ன சொல்லிவிட முடியும் சிலம்பைப்பற்றி? எத்தனை புத்தகங்களைப்படித்திருப்போம், மிகப்பிரியமான என் தமிழாசிரியர்கள் பாடத்திட்டத்தையும் தாண்டி எங்கள் தனிப்பட்ட விருப்பத்திற்கென விதம்விதாமய் எத்தனை சொல்லியிருக்கிறார்கள் இதைத்தாண்டி என்ன இருக்கப்போகிறது? என்ற எண்ணத்தோடும், ஏற்கனவே பார்த்திருந்த ஒரு திரைப்படத்தை மீண்டும் பார்க்கும் ஒரு மனோநிலையோடும் தான் வாசிக்க ஆரம்பித்தேன்

ஆனால் நடந்தது முற்றிலும் வேறுபட்ட அனுபவம். எதைப்பற்றியும் சிந்திக்கவொட்டாது படிக்கும் புத்தகத்தைப்பற்றி மட்டுமே காதலோடு யோசித்த நாட்களுண்டு, இதை இந்தக்கணம் சொல்லியே ஆகவேண்டும் என்ற தவிப்போடு பகிர்ந்து கொண்ட புத்தகங்களுண்டு, மனிதத்தின் மேன்மைகளை மென்மையாய் வருடி விட்டு கவித்துவமான சிந்தனைகளை கிளர்ந்தெழுத்திய புத்தகங்களுண்டு, இப்படிக்கூட சில சாதராண நடைமுறைகளை வெகு சுவாரசியமாக வடிக்கமுடியுமென்று கற்றுக்கொடுத்த புத்தகங்களுண்டு, சில புத்தகங்களை படித்து முடித்ததும் செய்யவேண்டியது இதுவென சில பட்டியல்களை இட வைத்த எழுத்துக்களுண்டு, சில புத்தகங்கள் அடுத்து எந்த புத்தகத்தையும் உடனே படிக்கவொட்டாது அசைபோட வைத்ததுண்டு.. ஆனால் இந்தபுத்தகம் என்ன செய்தது...

சொல்வதற்காகாத்தான் இந்த ஆரம்பம்...

ஏதேனும் எழுதி நாட்களாகிறது
பிரசவத்திற்கென
சுமந்திருக்கும் கருவென
உள்ளே ஊறிக்கிடக்கிறது
வார்த்தைகள்
....

மீண்டும் வருகிறேன்...

7 comments:

தமிழன்-கறுப்பி... said...

பல நாட்களுக்கு பிறகு...

திவாண்ணா said...

ம்ம்ம்ம்ம்ம்..அடிக்கடி எழுதணும். இப்படி எப்பவோ ஒரு தரம் வரீங்க. வேலைக்கு போகு முன்னே இன்னும் அதிகமா எழுதினா மாதிரி இருக்கு. :-))

திவாண்ணா said...

ம்ம்ம்ம்ம்ம்..அடிக்கடி எழுதணும். இப்படி எப்பவோ ஒரு தரம் வரீங்க. வேலைக்கு போகு முன்னே இன்னும் அதிகமா எழுதினா மாதிரி இருக்கு. :-))

Kavinaya said...

உங்கள் அறிமுகமே ஆவலைத் தூண்டும் விதமாக இருக்கிறது. எதிர்பார்ப்புடன்...

ஜீவி said...

பல யோசனைகளுக்கிடையே உங்களை எழுத்துக்களாய் காணாதிருந்ததும் ஒரு யோசனையாக இருந்தது. கண்டதும், இப்பொழுது அதுவே மகிழ்ச்சியாக மாறிவிட்டது.

ஒரு Project மாதிரி இந்த வேலையை எடுத்துக் கொண்டிருப்பது போல் தெரிகிறது. கொஞ்ச நேரத்திற்கு முன்பு தான், தான் ஈன்றெடுத்தது தன்னிடமிருந்து தன் கண்முன்னாலேயே பறிபோகையில் ஒரு தாய் எந்தளவுக்கு சீற்றமடைவாள் என்பதை, ஒரு பன்றியின் மூலமாக உருவகப்படுத்தியிருந்த-- திரு.ஜெயமோகனின் வார்த்தெடுத்திருந்த எழுத்துக்களைப் படித்து விட்டு வந்தேன்.
அதன் தொடர்ச்சியாய் ஜெயமோகன் அவர்களின் எழுத்துக்களைப் பற்றி நீங்களும் எழுதப் போவது மகிழ்ச்சியைக் கூட்டியது.

சிலம்பைப் பற்றி நிறைய படித்திருப்பதாக வேறு கூறியிருக்கிறீர்கள்; அதனால் எழுதப் போவது ஒரு சீர்தூக்கிய பார்வையில் இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது.
அதனால் படிக்க வேண்டுமென்கிற ஆவலும் இயல்பாகவே இன்னும் கூடிவிட்டது.
காத்திருக்கிறோம்.

கிருத்திகா ஸ்ரீதர் said...

@ தமிழன் கறுப்பி - வருகைக்கு நன்றி - ஆமாம் நாட்கள் அதிகம் சென்றுவிட்டது !

@ திவா - என்ன செய்ய எழுத முடியாமல் போனதற்கு காரணம் வேலை மட்டுமல்ல எதையாவாது எழுத வேண்டுமென்று நினைத்து விட்டால் அது முடியும் வரை வேறு எதையும் எழுத முடிவதில்லை.. (mental block??) கூடவே வேறு சில காரணங்களும் :)

வாங்க கவிநயா.. தொடர்ந்து படியுங்கள்

@ ஜீவி - படித்தவுடன் மகிழ்ச்சியாய் இருந்தது. மேலே சொன்ன மெண்டல் பிளாக்குடன் படிக்க வேண்டிய பதிவுகளின் எண்ணிக்கையும் ரீடரில் அதிகம் இருப்பதால் சில சமயம் அதை முடித்து விட்டு எழுதலாம் என்று சில நாட்கள் தள்ளிப்போட்டுக்கொண்டே போனேன் கடைசியில் சரி எழுதி விட்டு படிக்கலாம் என்று முயன்றுள்ளேன். ரொம்ப்ப ஆச்சர்யமா இருக்கு நீங்க project மாதிரி என்று சொன்னது ஏனென்றால் உண்மையில் அப்படித்தான் மனதில் ஒரு எண்ணம் உள்ளது. (ஒத்ததிர்வு !)

அமிர்தவர்ஷினி அம்மா said...

:) கட்டிப்போட்டுட்டீங்க. அடுத்த பகிர்தல் எப்போது?