



நன்பர் அங்கே 700 சதுர அடியில் அஸ்பெஸ்டாஸ் கூரையுடன் ஒரு சிறிய வீடு கட்டியிருக்கிறார் அங்கு ஒரு குடும்பம் தங்குவதற்கான எல்லா வசதிகளும் செய்து வைத்துள்ளார்। உணவு அந்த கிராமத்தில் இருந்து ஒருவர் வந்து அந்த வீட்டில் செய்து தருவதாக ஏற்பாடு.
சுற்றுச்சூழலின் ஓசையற்று காற்று மட்டுமே இரவு பகல் பாராது பேசிக்கொண்டிருக்கும் இதுபோன்ற சூழல் எங்களுக்கு முற்றிலும் ஒரு புது அனுபவத்தை தந்தது। கடைபரப்புவதற்கு மனிதர்களோ கடைகளோ இன்றி பூக்களும், எலுமிச்சையும், சௌசௌ (பெங்களூர் கத்தரிக்காய் என்று சொல்வோமே)-வும், வெங்காயமும் காய்த்து தொங்கும் அந்த வனாந்தரத்தில் யாருமே இல்லையென்றாலும் நமக்கே அருகே யாரோ நிற்பது போன்றதொரு உணர்வு அங்கு வீசும் காற்றும் குளுமையான சூழலும் உணர்த்திக்கொண்டேயிருந்தது.
இரவு முழுவதும் அந்த கிராமத்து ஆட்கள் தப்பு (மேளம் போன்ற ஒரு இசைக்கருவி) அடித்துக்கொண்டே இருந்தார்கள். நன்பரிடம் கேட்டதற்கு கொம்பன் வரும் வழக்கமுண்டு எனவே இவ்வறு சப்தம் எழுப்பாவார்கள் எனவும் இந்தச்சத்தம் கேட்டால் யானைகள் வருவதில்லை என்று சொன்னார் என் இளைய மகனுக்கு தூக்கம் போனது. (அப்பா டிரம்ஸ் அடிக்கலையே யானை வந்துட்டா என்று இரவு முழுதும் கேட்டுக்கொண்டே இருந்தான்).

அதற்கும் 300 அடிமேலே மைசூர் மகராஜா 1917ல் அவர் வேட்டைக்கு வந்தால் தங்கி இளப்பாறுவதற்காக கட்டிய ஒரு சிறு வீடும் அவருடைய குதிரைக்காரர்கள் தங்குவதற்காக கட்டி இப்போது பாழடைந்து இருக்கும் ஒரு கட்டிடமும் உள்ளது.

அந்த முகட்டில் இருந்து பார்த்தால் மைசூர் அரண்மணையும் (வெகு தொலைவில் ஒரு புள்ளி வடிவில் தான்) மிக நீண்ட சரிகை பேப்பர் போன்று ஓடிவரும் காவிரியும் சுற்றிலும் பரந்திருக்கும் பள்ளத்தாக்கும் கண்கொள்ளா காட்சி.

நாங்கள்


இரண்டு நாட்கள் அங்கு தங்கியிருந்து விட்டு வரும்பொழுது அங்குள்ள கிராமத்து மக்களிடம் கொஞ்சம் பேசும் வாய்ப்பு கிடைத்தது (வாகன ஓட்டுநர் மொழிபெயர்த்துச் சொன்னார்).


சிவனே முழு முதல் கடவுள். கோவில் என்று ஏதுமில்லை। சூலம் பதித்த ஒரு மரத்தடியும் அதன் அடியே புதைந்துள்ள கல்லுமே அவர்களின் கடவுள் அடையாளம்। ரிஷி ஆசீர்வதித்த மரமென்று ஒரு ஆலமரத்தைச் காட்டுகிறார்கள்। காரணம் ஆல மரத்தினடியில் வேறு எந்த மரமும் வளராதாம் ஆனால் இந்த மரத்தின் அடியில் ஒரு கருவேப்பிலை மரம் வளர்ந்து தழைத்தோங்கியுள்ளது। அங்கு பல வருடங்கள் கண்ட ஒரு பாம்பு வாழ்வதாகவும் நம்புகிறார்கள்। அந்த இடத்தில் பரவியிருக்கும் அமானுஷ்யமும், வெள்ளந்தியான அந்த மக்களின் வாழ்வும் மிகவும் சூட்சுமமான இடம் இது என்ற உணர்வையே தந்தது। இன்னும் தன்னை அகழ்ந்தாராய்ந்து கொள்ள அந்த இடம் மிகவும் ஏதுவானத இருக்கும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.
பௌர்ணமி இரவில் அந்த உச்சியில் தங்குவது இன்னும் சுகமான அனுபவமாயிருக்கும் என்று நண்பர் சொன்னதால் அப்படி ஓர் நாள் சீக்கிரமே கை கூடவேண்டும் என்ற எண்ணியபடி மலையை விட்டு கீழிறங்கி மக்கள் கூட்டத்தில் கரைந்து போனோம். பெங்களூருவில் வந்து இரண்டு நாட்கள் தங்கி விட்டு மல்லேஸ்வரத்தில் அலுமனா மற்றும் மெஜஸ்டிக் காமத் யாத்ரிநிவாஸ் போன்ற எங்கள் வழக்கமான இடங்களில் ஆஜர் கொடுத்து விட்டு சென்னை வந்தாச்சுங்கோ…